Thursday, April 13, 2023

உனக்கு மரணமில்லை.



 I am not in the habit of entering into controversy with my opponents

unless there are special reasons which compel me to act otherwise.

my opponent being the Mahatma himself, I feel I must attempt to

meet the case to the contrary which he has sought to put forth.

அண்ணலின் கட்டுரையை ஹரிஜன் இதழில்
மீள்வாசிப்புக்கு கொண்டுவருகிறார் மகாத்மா.
(ஜட்பட் மண்டலுக்கு தயாரித்து அழைப்பு மறுக்கப்பட்ட
அதே கட்டுரை!)
அது குறித்து காந்திக்கு நன்றி சொல்லும் அண்ணல்
அக்கட்டுரையில் தான் முன்வைத்திருக்கும் எந்தக்
கேள்விக்கும் மகாத்மா பதில் சொல்லவில்லை.
ஆனால் கட்டுரையின் தரவுகள்மீது நம்பிக்கை இல்லை
என்று சொல்கிறார்,
அதைச் சுட்டிக்காட்டும் அண்ணல் அம்பேத்கர்,
தரவுகள் நீங்கள் மதிக்கும் சமஸ்கிருத புலமைமிக்க
திருவாளர் திலகரிடமிருந்து பெற்றவை என்று
பதில் சொல்லி இருக்கிறார்..
மகாத்மாவும் ஹரிஜன் இதழும் இதை
எப்படி எதிர்கொண்டிருக்கும்??
வழக்கம் போல கடந்து சென்றிருக்குமா!?
.
எதையும் கள்ள மவுனத்தில் கடந்து செல்வது
எளிது.
ஆனால் வரலாற்றில் அந்தக் கேள்விகள்
எப்போதும் நிற்கும்?
அதைக் கடந்து செல்ல முடியாமல்
வரலாறுகளை சிதைக்கலாம்.
குடி நீரில் மலம் கலக்கலாம்.
எரிக்கலாம்
புதைக்கலாம்
அட.. என்ன நீங்கள் என்ன செய்தாலும்
அந்தக் கேள்வி
மீண்டும் மீண்டும் முளைக்கும்.
அப்போதெல்லாம்
நீ பிறக்கிறாய்.
உனக்கு மரணமில்லை.
ஜெய்பீம்.

#puthiyamaadhavi_20230414

No comments:

Post a Comment