
அயோத்தியில் ராமர்கோவில் கட்ட
நாள்செங்கல் வைத்தாகிவிட்டது.
இனி.. எல்லோருக்கும் சுபிட்சம்!
இந்த விழாவில் மோதி என்ற தனிநபர்
கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றி
பேசுவதற்கில்லை. மோதி என்ற தனிநபர்
(இந்து மத நம்பிக்கையாளர்) கலந்து கொள்கிறார் என்பதற்குப் பதில் அழைப்பிதழில் தெளிவாக 
அச்சிடப்பட்டிருக்கிறது..
 “  நரேந்திர மோதி.,“பிரதமமந்திரி”யாகவே
அழைக்கப்பட்டு, கலந்து கொண்டிருக்கிறார்.
வரலாற்றில் இந்தியாவின் முதல் பிரதமர்
பண்டித ஜவஹர்லால் நேரு காலத்திலும்
இம்மாதிரியான ஒரு நிகழ்வு நடைபெற்றது.
சோம நாதர் கோவில் திறப்புவிழாவில்
அன்றைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்
 கலந்து கொள்வதாக முடிவு செய்துவிட்டார்.
 நேரு அழைப்பை ஏற்கவில்லை! அதுமட்டுமல்ல..
அவர் குடியரசு தலைவருக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
““I confess that I do not like the idea of your associating 
yourself with a spectacular opening of the Somnath Temple. 
This is not merely visiting a temple, which can certainly be 
done by you or anyone else but rather participating in a 
significant function which unfortunately has a 
number of implications.”
அத்துடன்  நேரு மாநில முதல்வர்களுக்கு கடிதம் 
அனுப்புகிறார்.
 “இந்த விழா அரசு விழா அல்ல, 
இதற்கும் நடுவண் அரசுக்கும் எவ்விததொடர்பும் 
கிடையாது. மேலும் இந்தியா மதச்சார்பற்ற நாடு 
என்பதற்கு தடையாக எதுவும் நிற்கமுடியாது "
என்றுகடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கொசுறு செய்தி.. 
அயோத்தியில் கோவில் கட்டியே தீருவேன்
 என்று சூளுரைத்த அத்வானியை விழாவில் 
காணவில்லை. 
குடியரசு தலைவர் .. அழைக்கப்படவில்லையா 
அல்லது வரவில்லையா... தெரியாது!
அயோத்தி இராமன் எப்போதுமே 
இந்துக்கடவுளாக மட்டுமில்லாமல்
இந்திய அரசியலாகிப்போனதையும்
சேர்த்து வாசிக்க வேண்டி இருக்கிறது.
 சோமநாத்கோவில் கட்டியதும்
இன்று உச்சநீதிமன்ற வாசல்வரை போய்
மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட இருக்கும்
அயோத்தி ராமர்கோவிலும் ஒன்றல்ல. !
No comments:
Post a Comment