Friday, September 8, 2017

கவலைக்கிடமான தமிழக அரசியல்


கவலைக்கிடமான தமிழக அரசியல்..
உண்மையில் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம்
 ஏற்பட்டிருக்கிறது  என்பதை
நேரில் கண்டேன். அரசு நிர்வாகத்தில் ஒரு நிரந்தரமற்ற
 சூழல் காரணமாக செயல்படாத அரசு அலுவலகங்கள்,
  வறட்சியான சூழல்.. நிராசையான வாழ்க்கை.
தண்ணீர் மற்றும் மின்சார மேலாண்மையில் தோற்றுப்போன
 தமிழத்தின் ஆட்சி
எல்லாவற்றையும் அரசியலாக்கி அதில் சுயலாபம்
 அடைய துடிக்கும் அரசியல் வாதிகள்..
பொதுமக்களுக்கு எல்லாம் தெரிகிறது..
எல்லோரையும் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கை
வெற்றிடமாகவே இருக்கிறது.
அதிமுக அரசின் எடப்பாடி, பன்னீர், தினகரன் வகையறாக்கள்
 அடித்த லூட்டி மக்களுக்கு அவர்கள் மீது இருந்த
 துளி நம்பிக்கையும் துடைத்து எடுத்துவிட்டது.
திமுகவின் தலைவர்களை விட அதன் அடிப்பொடிகள்
 அடுத்து அவர்கள் தான் ஆட்சிக்கு வரப்போவதாக இப்போதே திட்டமிட்டுவிட்டார்கள்.
 ஒரு காலத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்போது
 அவர் மீது இருந்த நம்பிக்கை கூட
இன்றைய திடீர் அரசியல் நாயகர்களாக வர நினைக்கும் 
உலகநாயகனுக்கோ சூப்பர் ஸ்டாருக்கோ இல்லை,
 இல்லை, இல்லவே இல்லை!
மக்கள் இவர்களின் அரசியல் டிவிட்டர்களையும்
 சந்திப்புகளையும் இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் ஊடகங்கள் அவர்களை எப்படியும்
பெரிய போஸ்டர்களில் காட்டி பிரமாண்டப்படுத்திவிடலாம்
 என்று நினைக்கின்றன.

திமுக வைப் பொறுத்தவரை சிறையிலிருக்கும் சசிகலா மீது வெறுப்பு அரசியல் இல்லை என்பதை அவர்களில் சிலருடன் பேசிய போது
என்னால் புரிந்து கொல்ள முடிந்தது.
அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்களும் ஏற்புடையது தான்.
சென்னையைப் பொறுத்தவரை அதிமுக வுக்கு மாற்றாக
 அடுத்த தேர்தலில் திமுக தான் வரும் என்று உறுதியாக  நடுத்தர வர்க்க
மக்களும் சொல்லவில்லை.  அதைவிட முக்கியமானது செய்தி..
.. சென்னை பயணத்தில்
இது திமுக தலைவரின் குடும்பத்தில் இன்னாரின் சொத்து,
இது இன்னாரின் சொத்து
என்று ஓர் ஆட்டோ , கார் டிரைவர்கள் கூட நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்!
எனக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
 தங்கள் வாரிசுகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டாயம் கொண்டுவர வேண்டிய நிலை திமுகவுக்கு வந்துவிட்டது.
ஆனால் அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா ..?
 என்பது மில்லியன் டாலர் கேள்வி.

மாநில அரசியலையும் மாநில அரசியல் கட்சிகளின்
தலைவர்களையும் சிபிஐ  வட்டத்தில்
சிக்க வைப்பதில் மோதி அரசு எதையும் செய்யும்
 என்ற அச்ச உணர்வு அனைத்து கட்சிகளின்
தலைவர்கள், இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்களிடம்
இருக்கிறது. அதுவே அவர்கள் வெளிப்படையான
 எதிர்ப்பைக் காட்ட முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி இருப்பதை
அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.
அவர்களின் விவரிப்புகளை அனுபவங்களை அமைதியாகக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
எங்கிருந்து மோதி அரசுக்கு இந்த அளவுக்கு துணிச்சல்
வந்திருக்கும்?
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகும் அனைத்தையும்
துடைத்துவிட்டு மாபெரும் தேசியத்தலைவரில்
ஒருவராக வலம் வருவதின் பின்னணியில் தான்
மோதி அரசியலையும் அதிகாரத்தையும் புரிந்து
கொள்ள வேண்டும். 

1 comment: