Sunday, December 27, 2015

சத்துணவு திட்டமும் தமிழ்நாடும்




சத்துணவு திட்டம் என்று சொன்னவுடன் எம்ஜிஆரின் நினைவுதான் அனைவருக்கும் ஏற்படும். இத்திட்டத்தை தன்னுடைய கனவுத்திட்டம் என்று தான் எம்ஜிஆர் அறிவித்தார்.
"3 வயது நிரம்பிய நான், என் தாயார், தமையனார் மூவரும் பட்டினி கிடந்தப்போது பக்கத்துவீட்டுத்தாய் முறத்தில் அரிசி கொடுப்பார். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, சாப்பிட்டிருக்காவிட்டால், நாங்கள் இந்த உலகத்தை விட்டே மறைந்திருப்போம். பசித்தால் அழ மட்டுமே தெரிந்த வயதில், பசிக்கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான்
இளமையில் அறிந்ததன் விளைவுதான் இந்தத்திட்டம்" என்று சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த போது உருக்குமாக சொன்னார் எம்ஜிஆர்.

ஆனால் அதற்கு முன்னரே பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார் என்பதை நாம் அறிவோம். மதிய உணவு திட்டத்தின் வளர்ச்சியாக சத்துணவு திட்டத்தை எவரும் குறிப்பிட்டால், "அதுவேறு, இதுவேறு" என்று வாக்குவாதம் செய்வார்கள் அதிமுகவினர்.
பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னரே நீதிக்கட்சியின் ஆட்சியில் நீதிக்கட்சியின் தலைவர் பி.டி.தியாகராய செட்டியார் முயற்சியால் 1920 ஆம் ஆண்டு  MID DAY MEALS SCHEME கொண்டுவரப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு
பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தான் முதன் முதலாக இத்திட்டம் அமுலுக்கு வந்தது.
ஒரு மாணவனுக்கு உணவு செலவு ஓர் அணாவை தாண்டக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்ப்ட்டது. இத்திட்டத்த்தினால் அரசாங்கத்திற்கு அதிகச் செலவு ஏற்படுவதாக கருதிய ஆங்கிலேய அரசு இத்திட்டத்தை 1925ல் கைவிட்டது. எனினும் நீதிக்கட்சி தலைவர்களின்
தொடர் போராட்டத்தால் மீண்டும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் வளர்ச்சியாகத்தான் பெருந்தலைவர் காமராசர் 1956ல் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார் எனலாம்.
நீதிக்கட்சிக்கு மட்டுமல்ல, காமராசருக்கும் எம்ஜிஆருக்கும் இத்திட்டம் கொண்டுவந்ததில் பெரும் எதிர்ப்புகள் இருந்தன.
இந்த விவரங்கள் எல்லாம் சத்துணவு திட்டத்தின் படிப்படியான வளர்ச்சி /நிலை .
ஆனால் இச்சத்துணவு திட்டத்தால் தான் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் நுழைவுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தது என்ற செய்தி
இன்று பலர் மறந்துவிட்ட அரசியல் வரலாறாக இருக்கிறது.!

சத்துணவு திட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தக் காலத்தில்
மதுரை மாவட்டத்திற்கு சென்ற ஜெயலலிதா, அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு காவல்துறை அதிகாரி சகிதம் சென்று சோதனை செய்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
 "அரசாங்கத்தின் திட்டத்தை நேரில் சென்று
சோதனை செய்யும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு
 இருக்கிறதா? இவருக்கும் சத்துணவு திட்டத்திற்கும்
 என்ன தொடர்பு? இவர் யார் ..? "
இக்கேள்விகளுக்கு ஓர் அறிவிப்பு மூலம் பதிலடி
 கொடுத்தார் எம்ஜிஆர்.
"சத்துணவு திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராக ஜெயலலிதாவை
நியமித்திருப்பதாக அறிவித்தார்"
இதுதான் "ஜெ" வுக்கு எம்ஜிஆர் கொடுத்த முதல் , முக்கியமான அங்கீகாரம்.
இதிலிருந்து தான் "ஜெ" யின் அரசியல் நுழைவு தீவிரமாகி ..




2 comments:

  1. What happened? Have you snoozed? Your post ends abruptly in the middle of a sentence...!:-(

    ReplyDelete
  2. Yaa my readers are too smart to complete the sentence!

    ReplyDelete