Thursday, December 17, 2015

இப்படியும் தீர்ப்பு சொல்லலாம்ம்ம்ம்ம்ம்


ஆகமவிதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.
அதே நேரத்தில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக
அரசு கொண்டுவந்த சட்டத்தையும்  ரத்து செய்யவில்லை.
ஆகமவிதிகளின் படி அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்றால்
எல்லோரும் அர்ச்சகராக முடியாதே..!!
அடடா.. இப்படியும் கூட தீர்ப்பு சொல்ல முடியுமா.?
**
ஆகமவிதிகளை மீறுவதே இல்லையா இந்துமதக் காவலர்கள்?
டிசம்பர் 31 நள்ளிரவில் கோவில் திறந்திருக்கிறது . ஆகமவிதிகளின் படி
அர்த்தஜாம பூஜை நடந்தப்பின் மறுநாள் அதிகாலையில் தான் நடை
திறக்க வேண்டும். இடையில் எக்காரணம் கொண்டும் நடை திறக்க
அனுமதி இல்லை.
 ஆங்கில புத்தாண்டை முன்வைத்து கூடும் பக்தர்கள் கூட்டத்தின்
மூலம் கிடைக்கும் வருவாயைக் கண்டு ஆகமவிதிகளைக் காற்றில்
பறக்கவிடும் இந்துமதக் காவலர்கள், இந்த அர்ச்சகர் விஷயத்தில் மட்டும்
ஏன்..?
**
ஆகமவிதிகளுக்கும் இந்திய சட்டத்திற்கும் என்ன தொடர்பு?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர்  சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம்,
சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.
(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the
"Hindu code bill " in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution will stand abolished)
ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைய யார் யார் காரணமாக இருந்தார்கள்
என்பது ஒரு பெரிய கதை..அதை அறிந்தால் தலைவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும்
இதெல்லாம் என்னவோ பரம ரகசியம் இல்லை.
இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிபேருக்கு
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சிலருக்குத் தெரிந்தும்
தெரியாமல் இருப்பது போலவே இருப்பதில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. இதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
இலவசங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பேசவோ
அல்லது சிந்திக்கவோ நேரமில்லை. பெரியார் தொண்டர்களில் ஆனைமுத்து அவர்கள்
மட்டுமே இக்கருத்தை முன்வைத்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.

***
இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக
மட்டுமே இந்தக் கோர்ட், வழக்கு வாய்தா எல்லாம்!
ஆனால் நம்ம ஊரு முனியாண்டி,
மாடசாமி, இசக்கி அம்மன் கோவில்களில் சூத்திர பஞ்சம பூசாரிகள் தான்.  இது ஏன்?
**
இந்த நாட்டில் கடவுள்களுக்கும் சாதிகள் உண்டு.
திருப்பதி பாலாஜி
திருச்செந்தூர் முருகன்
திருநெல்வேலி மாடசாமி
சாதிப்படிநிலையின்  அடையாளங்கள்.

4 comments:

  1. டிசம்பர் 31 நள்ளிரவில் கோவில் திறந்திருக்கிறது . ஆகமவிதிகளின் படி
    அர்த்தஜாம பூஜை நடந்தப்பின் மறுநாள் அதிகாலையில் தான் நடை
    திறக்க வேண்டும். இடையில் எக்காரணம் கொண்டும் நடை திறக்க
    அனுமதி இல்லை.

    இதிலும் கூட ஒரு கொடுமை உண்டு
    இந்தக் கோவில்கள்ஆங்கில வருடப் பிறப்பிற்குமட்டுமே
    இரவில் திறக்கும்,ஆனால் தமிழ் வருடப் பிறப்பிற்கு......
    தமிழ் வருடப் பிறப்பு வருவதே நம் தெய்வங்களுக்குத் தெரியாது......

    ReplyDelete
  2. நன்றாக அலசி உள்ளீர்கள்
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும நட்புககு நன்றி

      Delete