Saturday, September 5, 2015

ஏன்..? ஏன் இந்தப் பதட்டம்!!







திமுக வட்டத்தில் ஏன் இந்தப் பதட்டம்?
இன்னும் தேர்தல் வரவில்லை. கூட்டணிக்கான காலம் கனியவில்லை.
கருத்து கணிப்பு எப்பொதும் போல நடப்பது தானே.
அதற்கு ஒரு பதில் சொல்லிவிட்டு அமைதியாக 
அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டியதுதானே.
 ஏன் இவ்வளவு பதட்டம்?
யார் இம்மாதிரி ஒரு பதட்ட நிலையை உருவாக்குகிறார்கள்.?
மீடியாக்காரர்களை குறை சொல்லாதீர்கள்.
 அவர்கள் எங்கே தேன்வழியும்,புறங்கையால் நக்கலாம் என்று அலைவதாகவே வைத்துக் கொள்வோம்.
ஏன் உங்க கட்சி, உங்க வீட்டு பிரச்சனையை நீங்களே 
ஆள் ஆளுக்கு ஊதி ஊதி உடைக்கறீங்க!
இந்தியா முழுவதும் இருக்கும் சகல அரசியல் கட்சிகளிலும், சிறியது, பெரியது என்ற வேறுபாடின்றி வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் திமுக வைப் போல வாரிசு அரசியலுக்குள் போட்டி அரசியல் 
வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.
சொல்லக்கூடும் எல்லோருமே மதுரைக்கார பெரிய அண்ணன் தான் காரணம் என்று.
மதுரைக்காரர் இப்படித்தான் சொல்வார் என்று வரிப்பிசகாமல் அன்றாடம் செய்தி கேட்கும்/வாசிக்கும் பொதுஜனம் அறிந்ததுதானே. மேலும் அவர் தற்போது திமுக
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர் சொல்வதற்கு இவர்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
திமுக தலைவரின் மகன் என்பதாலா?
திமுக என்ற பல இலட்சம் தொண்டர்களைக் கொண்ட அரசியல் கட்சி ,கலைஞர் குடும்பத்தின் அசையா சொத்தா.?.
வாரிசுகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க!
இந்தப் பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துதான் இவர்கள் பேசுகிறார்களா ?
என்ற பதட்டத்தில் தற்போது திமுக அனுதாபிகள்!!
. அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது..
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் பேட்டியைப் பற்றி கருத்து சொன்ன திமுக தலைவர் அவர்கள்
"டி.கே.எஸ். இளங்கோவன் கூறியோ, கூறாமலோ, அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
என்ன சொல்ல வருகிறார் திமுக தலைவர் ? டி கே எஸ் இளங்கோவன் கூறாதாதையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர் சொன்னதாக சொல்கிறதா? டி கே எஸ் இளங்கோவன் கூறியதுடன் கூறாததும் அப்பேட்டியில் இருக்கிறது என்று சொல்ல வருகிறாரா..! 
இது எவ்வளவு ஆபத்தானது..
இதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா தான் பதில் சொல்லி ஆக வேண்டும்!
மேலூம் திமுக தலைவரும் செயலாளரும் சேர்ந்து ஏன் கருத்து கணிப்பில் திமுக வில் மட்டும் இரண்டு பேரின் பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கேட்கிறார்கள். இன்னும்  ஒரு படி மேலே போய் அதிமுக வில் இருமுறை பதிலி முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களின் பெயரையும் அதிமுக முதல்வர் வேட்பாளர் கருத்துகணிப்பில் ஏன் சேர்க்கவில்லை
என்று கேட்கிறார்கள். இருவருமே இப்படி சொல்வதைக் கேட்கும் போது 'அசத்தப்போவது யாரு' மாதிரி இருக்கு..
பாவம் பன்னீர்செல்வம்.. இம்மாதிரி எல்லாம் அதிமுக வில் ஒரு கனவு கூட வந்திருக்காது.
அதெல்லாம் விடுங்கள்.. முகநூலில் கூட THALAPATHY FOR CM என்று தளபதியின் ஆதரவாளர்கள் ஒரு கணக்கு ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருப்பது தளபதிக்கு தெரியாதா என்ன?
ஏற்கனவே திமுக தலைவர் கலைஞர் தான் திமுக வின் முதல்வர் வேட்பாளார் என்றால் அதை அடிக்கடி தன் வார்த்தைகளால் தளபதி அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் 
என்றால்.. எதற்காக தளபதி முதல்வர் என்ற கருத்து பரப்புரை நடந்துக் கொண்டிருக்கிறது.?
எனக்கு இதெல்லாம் தெரியாது என்றும் பதட்டத்தில் சொல்லிவிடாதீர்கள்.
உங்கள் தொண்டர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அதன் அடுத்தவரி வாசிக்கப்படும் என்பதையும் நீங்கள் சொல்வதற்கு முன்பே நினைவுப்படுத்திவிடுகிறேன்.
ப்ளீஸ்.. பதட்டப்படாதீர்கள்.. வேறு எங்களால் என்ன சொல்லமுடியும்?

No comments:

Post a Comment