Sunday, December 7, 2014

உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா?



2019க்குள் தூய்மை இந்தியா  திட்டம் நிறைவேறிவிடும். நிறைவேற வேண்டும்,
தூயமை இந்தியா வெறும் அரசியல் ஸ்டண்ட் அல்ல, அது ஒரு மக்கள்
இயக்கம் என்றெல்லாம் தொடர்ந்து இக்கருத்து விவாதப் பொருளாகிக்கொண்டிருப்பது
வரவேற்கதக்கது தான். இக்கருத்து குறித்து பேசுபவர்கள் நம் வீட்டில் சேரும்
குப்பைகள் குறித்தும் அதையும் தாண்டினால் தெருவில் குவியும் குப்பை,
அல்லது கழிவறை என்பதற்கு மேல் பேசுவதில்லை. ஏன்?

இந்த நவீன காலனி ஆதிக்கத்தில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு
அனுப்பும் குப்பைகளே நம் உள்ளூர் குப்பைகளை விட அபாயகரமானவை.
சுத்திகரிப்பு என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படு கின்றன. இதற்குக் காரணம்
, இந்தச் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குறைந்த கூலி வழங்கப்படுகிறது
சான் றாக, ஒரு டன் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்ய இலண்டன் மாநகரில்
இந்திய ரூபாய் மதிப்பில் 12000 செலவாகிறது.
 ஆனால், இந்தியாவில் 2800 ரூபாயில் சுத்திகரிப்பு செய்யலாம்
5 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்கா 30 விழுக்காடு
 குப்பைகளைக் கொட்டு கிறது
இரண்டாவதாக, பிரேசில் 210 மில்லியன் டன்,
 ஜப்பான் 53 மில்லியன் டன், ஜெர்மனி 49 மில்லி யன் டன்
, இங்கிலாந்து 35 மில்லியன் டன், மெக்சிகோ 32 மில்லியன் டன்,
 பிரான்சு 32 மில்லியன் டன், இத்தாலி 30 மில்லியன் டன்,
ஸ்பெயின் 26 மில்லி யன் டன், துருக்கி 25 மில்லியன் டன்

நோய்களைப் பரப்புகின்ற, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைக்கும்
பல இலட்சம் டன் கழிவுகள் இந்தியாவின் பல துறை முகங்களில்
 மறைமுகமாக வந்த வண்ணமே உள்ளன.
2009 அக்டோபர் 24ஆம் நாள் தெகல்கா ஏடு - தூத்துக்குடி அருகே உள்ள போல்பேட்டை  என்ற ஊரில் மறுசூழற்சிக்காகவும், இரப்பரைப் பயன்படுத்தி பிவிசி (PVC) கதவுகள்  செய்வதற்காகவும் சில இரசாயனக் கழிவுகளை எக்ஸல் (Excel) என்ற தனியார் நிறுவனம்
 இறக்குமதி செய்தது. ஆனால் உண்மையில் மறு சுழற்சி முறையில்
எவ்வித துணைப் பொருட்களை யும் உருவாக்காமல், இந்தக் கழிவுகளை
எரித்து இலாபம் அடைந்தது. இதேபோன்று தூத்துக்குடி அருகே பெட்ரோலிய
 இரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு இத்தொழிலுக்கு
 தேவை யானப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற பெயரில்
 உலோக, எண்ணெய் கழிவுகளைத் தூத்துக் குடி துறைமுகம் வழியாக
 இறக்குமதி செய்து எரித்து விடுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படாமல்  பணக்கொள்ளை அடிக்கிறார்கள் என்று அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது
இந்தியாவில் உள்ள எந்தத் துறைமுகத்திலும் இறக்குமதி செய்யப் படும்
 பொருட்களைத் துல்லியமாகக் கண்டறியும் ஸ்கேனர் கருவிகள் இல்லை
 என்பதையும் இந்த ஏடு சுட்டியது.
2010 ஏப்ரல் 24ஆம் நாளிட்ட ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு,
தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஸ்பெயின், சவூதி அரேபியா, மலேசியா
 ஆகிய நாடுகளில் இருந்து கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன
 என்று குறிப்பிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய் வாளர்  தூத்துக்குடி துறைமுகம் சிறிய துறைமுகமாக இருப்பதால் எளிதாக இந்தக் கழிவுப்  பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்கிறார். இங்கிலாந்தின் லீட்சு நகரிலிருந்து  மருத்துவக் கழிவுகள், இரத்தக்கறை படிந்த கழிவுப் பொருட்கள் தூத்துக்குடி வழியாக,
 கோவை மாவட்டத்தின் குமாரபாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு
 விளைநிலங்களில் எரிக்கப்பட்டது என்று பிபிசி தொலைக்காட்சி நிறுவனம்
 வழியாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பல மாக்கியது.

தூயமை இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் அரசியல்வாதிகள்
ஆதரிக்கும் ஆளும்கட்சி/ கேலி செய்யும் எதிர்க்கட்சி
எவரும்  இந்தியாவே உலகின் குப்பைத் தொட்டியாக
மாறிவரும் அவலம் குறித்து மட்டும்
வாயைத் திறப்பதில்லையே! ஏன்?

1 comment:

  1. உலகின் குப்பைத் தொட்டித்தான் இந்தியா

    ReplyDelete