Saturday, December 6, 2014

இன்று டிசம்பர் 6

இன்று டிசம்பர் 6.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.
இந்திய மண்ணில் தீவிர வாதத்திற்கு
அடிக்கல் நாட்டிய நாள்.
எங்கள் மும்பையில் வெடித்த
எல்லா வெடிகுண்டுகளுக்கும்
முகவரி எழுதப்பட்ட நாள்.
இந்த நாளில் எந்த அசாம்பிவதமும்
நடந்துவிடக்கூடாது என்று
சென்னை செண்டிரல் ஸ்டேஷனில் கூட
இன்று ஆயுதம் ஏந்திய காவல்படையின் கண்காணிப்பு.
அயோத்தியே இந்தியா
இந்தியா தான் அயோத்தி
என்று மதச்சார்பற்ற இந்தியாவுக்கு
நினைவூட்டும் நாள்.
இன்று டிசம்பர் 6..







நன்றி இந்திய தேசத்துக்கும்
இந்திய தேசத்தின் பிதாமகன்களுக்கும்.
இந்த நாளில் ஒவ்வொரு இந்தியனும்
இந்த நினைவுகளை மட்டும்தான் சுமந்தாகவேண்டும்
இந்த விதியை  எழுததானே
நீங்கள் தேர்வு செய்தீர்கள் இந்த நாளை..
டிசம்பர் 6.  ஐ
நன்றி இந்திய தேசமே
உனக்கும் உன் மதச்சார்பற்ற முகத்துக்கும்.
நன்றி உனக்கும்
நீ எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும்
உன் சாதீய முகத்துக்கும்.
-------

இன்று டிசம்பர் 6.
இந்திய அறிவாயுதத்தின் 58 ஆவது நினைவுநாள்

கங்கையின் புனிதம்
இந்த மகாநதியின் முனனால்
மண்டியிட்ட நாள்.
இமயத்தின் மகாபுருஷர்கள்
இந்த மனிதனிடம் சரிந்த நாள்.
இந்த மனிதச்சங்கிலியை
இந்தியாவே
உன் சாதிச்சங்கிலிகள் தொடும் போதெல்லாம்
தராசு தடம் புரள்கிறது.
உங்கள் நீதிதேவன் குற்றவாளிக்கூண்டில்.

இந்த நாட்டில் தான்
ஆண்டவனில் கூட சாதிப்பிரிவுகள்
பாலாஜி, பழநி, மாசானம், மாடசாமி,
காமாட்சி, மீனாட்சி, காளியாத்தா, மூவுடையா..

புத்தம் சரணம் கச்சாமி.
மன்னித்துவிடு சித்தார்த்தா
உன் சித்தாந்தங்களை விலக்கிய
என்னையும் என் எழுத்துகளையும்.
இனி,
அஹிம்சை கோவிலில்
ஆடுகள் அடிமைகள் அல்ல.

புத்தம் சரணம் கச்சாமி.

1 comment: