Thursday, April 2, 2009

இந்தியனை நம்பாதே.. இந்திய தமிழனை.. நம்பவே நம்பாதே


1981. ஈழத்து இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை.. 1983 ஜூலையில் தான்
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம். அய்யா அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய அரசின் உதவியை நாடி தமிழகத்தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.
சென்னையில் பெரியார் திடலில் அறிஞர் பெருஞ்சித்திரனார்
'உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்' துவக்க மாநாடு ஏற்பாடு செய்கிறார். அதில் கலந்து கொள்ள அ.அமிர்த்தலிங்கம், பேராசிரியர் க..பொ.இரத்தினம் இவர்களுடன் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை.
மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய அறிஞர். ஆனைமுத்து அவர்கள்>

" அமிர்தலிங்கம் அவர்களே! இலங்கைத் தமிழர்களுக்கு உதவும்படிக் கோரி, தமிழகத் தலைவர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக ஏன் இங்கே வந்தீர்கள்? தமிழகத் தலைவர்களில் ஒருவர் காலையில் இந்திராகாந்தியின் காலடியில் விழுகிறார். அவர் எழுந்தவுடன் இன்னொரு தலைவர் அதே இந்திராகாந்தியின் காலடியில் மாலையில்
விழுகிறார். இப்படிப்பட்ட அடிமைத் தலைவர்களை நம்பி ஏன் இங்கு வந்தீர்கள்? இலங்கைக்குத் திருப்பிப் போங்கள்.
அங்கே உள்ள ஈழத் தமிழர்களை முதலில் ஒன்று சேருங்கள். இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் நாட்டுத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அங்கு உள்ளனர். அவர்கள் பள்ளர், பறையர், தேவர், வன்னியர், நாடார், வண்ணார், மருத்துவர் எனப் பல உள்சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பார்த்து நீங்களெல்லாம்
கள்ளத்தோணி, சின்னச்சாதி, பனங்கொட்டை என்றெல்லாம் இழிவாகப் பேசிக் கொடுமைப் படுத்தினீர்கள். இப்போது அவர்களையும் சேர்த்துக்கொண்டு இலங்கை அரசை எதிர்த்து அங்கே போய்ப் போராடுங்கள்"
(நன்றி: சிந்தனையாளன் மார்ச் 2009 பக் 2)


இங்கே ஆனைமுத்து அய்யா அவர்கள் இந்திராகாந்தி என்று சொல்லியிருப்பதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு சோனியாகாந்தி என்று வாசிக்கலாம்!
ஈழப்போராட்டத்தில் இந்திய அரசை ஓர் அண்டைநாடு என்ற அளவில் கூட அருகில் நிறுத்தியிருக்க கூடாது.
முழுவதுமாக விலக்கி வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் தமிழக தலைவர்களை முழுக்கவும் விலக்கி வைத்திருக்க வேண்டும்,. அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக "தமிழ் ஈழம் " எப்போதோ உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment