Friday, October 31, 2025

ராகுல சாங்கிருத்தித்தியாயன்

 





இந்திய எழுத்தாளர்களிலேயே அதிக மொழிகள் கற்றவர்.


30 மொழிகள்!

எழுதிய புத்தகங்கள் 146.

அவர் எழுதிய 

" வால்காவிலிருந்து கங்கை வரை" புத்தகம் தமிழுலகில் பலர் அறிந்தப் புத்தகம்.


தன் 10 வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர். கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர், திபெத்தில் புத்த துறவியாக மாறி, தன் பெயரை ராகுல சாங்கிருத்தியாயன் என மாற்றிக்கொண்டார்.


வால் காலிலிருந்து கங்கை அறியப்பட்ட அளவுக்கு அவர் எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம்

 ' பொதுவுடமைதான் என்ன?' (1944 கண. முத்தையா தமிழ் மொழியாக்கம்)என்பது பேசப்படவில்லை.


இப்புத்தகத்தில் அவர் எழுதி இருந்தவை இன்றைய முதலாளித்துவ

ஜனநாயகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது.


*வாக்குரிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாது.


* சாமான்யர்கள் போட்டியிட முடியாது.


*சுயசிந்தனை குறையும்."காகம் உன் காதைக் களவாடிவிட்டது என்றால், காதைத் தடவிப்பார்க்காமல் காகத்தின் பின் ஓடுவார்கள்.


*இன்று அதிர்ஷ்டப் பொருளாயிருக்கும் கலை,கல்வி எல்லா மக்களுக்கும் அப்போது எட்டக் கூடியதாயிருக்கும்.

💥💥💥

இப்புத்தகம் என் புத்தகக்கிடங்கில் காணவில்லை!

நானும் " வால்காவிலிருந்து கங்கை வரை" தான் பத்திரப்படுத்தி இருக்கிறேன்.🥺



(படம் டார்ஜிலிங் அருகில் அவர் நினைவிடம்)

1 comment:

  1. ஆம் இரண்டாவது நூலை பற்றி பலரும் அறியோம்.... தெரியப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete