Friday, October 7, 2016

ஜெமு மாமு பட்டியல்


ஒரு கவிதை புத்தகம் மிஞ்சிப்போனால் 500 பிரதி..
அதிகப்பட்சமாக 1000 பிரதி என்று வைத்துக்கொள்வோம்.
சிறுகதை, நாவல் பற்றி கேட்கவே வேண்டாம்.
1000 காப்பி அச்சடிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
1000 பேர் வாசிக்கிறார்கள்... சரி ஓசியில் வாசிப்பதையும்
கணக்கில் கொண்டால் 10,000 பேர் வாசிக்க கூடும்.
தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகை 7 கோடி.!
அப்படியானால் பெரும்பான்மையான தமிழர்கள் இதைப் பற்றி
கவலைப்படவில்லை. இந்த ஒளிவட்டம் வீசும் அறிவுஜீவிகளைப்
பற்றி அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை என்பது தான் உண்மை.
காமு திமு, கொமு பாமு ஜெமு மாமு என்று எந்த மு வும்
அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக்
கொண்டுவரப்போவதில்லை.
இதில இவுங்க போடுகிற பட்டியலும்
அதற்காக கவலைப்படுகிற கூட்டமும்...
 &&&&
எப்பா... ஆரம்பிச்சிடாதீங்கய்யா ஆரம்பிச்சிடாதீங்க
எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாதுனு. பொன்மொழி
சொல்ல ஆரம்பிச்சிடாதீங்க.. ப்ளீஸ்..
அப்போ உழவனையும் தொழிலாளியையும் துப்புரவு செய்ப்வனையும்
மதிக்காத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா என்ன?

&&&&

நண்பா... பட்டியலில் உன் பெயர் இல்லையே என்று
ஏன் கவலைப்படுகிறாய்..?
பட்டியலில் இடம் பெறுபவன் பெரிய ஆள் அல்ல.
பட்டியல் போடுகிறான் பாரு ..... அவன் தான் தீர்மானிக்கும்
அதிகாரம் கொண்டவனாக தன்னை நினைத்துக்கொள்கிறான்.
இதனால் நீ அறிய வேண்டியது என்னவென்றால்...
நீயே ஒரு பட்டியல் போட்டுவிடு.
யார் யார் பெயரை எல்லாம் உன் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என்பதைவிட யாரை எல்லாம் மறந்தும் சேர்த்துவிடக்கூடாது
என்பதில் மட்டும் கவனமாக இரு.
நண்பா.. பட்டியல் போடு..


No comments:

Post a Comment