Tuesday, July 26, 2016

தனிநபர் ?


தனிநபர்கள் அனைவரையும் தனிநபர்கள் என்ற
ஒற்றை அடையாளத்திற்குள் அடக்கிவிடமுடியாது.
அரசனும் போர்விரனும் நிற்கும் போர்க்களம்
ஒன்றாக இருப்பினும்,
எதிரிகள் கூட மாறுபடாமல் இருப்பினும்,
கையில் ஏந்தி இருக்கும் ஆயுதங்களில் கூட
வேறுபாடுகள் இலலாமல் இருப்பினும்...
இப்படியாக எத்தனை இருப்பினும்
அரசன் என்ற தனிநபரும் போர்வீரன் என்ற
தனிநபரும் ஒன்றல்ல.
அரசன் சமூகத்தின் ஒட்டுமொத்த குறியீடு.
போர்வீரன் அச்சமூகம் என்ற சமுத்திரத்தின் ஒரு துளி.
போர்வீரனின் செயல்பாடுகள் அரசனைப் பாதிக்கலாம்/
பாதிக்காமலும் இருக்கலாம். பாதிப்பு இருந்தாலும்
அதன் வீரியம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது.
ஆனால் அரசனின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த
சமூகத்தையும் பாதிக்கும்.
இப்போது அரசர்கள் இல்லை. அரசர்களை விட
அதிகாரமிக்க அதிகாரபீடங்கள் இருக்கின்றன.
அந்த அதிகார பீடங்களை எதிர்ப்பதும் விமர்சிப்பதும்
தனிநபர் விமர்சனமோ தாக்குதலோ அல்ல.
பல தருணங்களில் பொதுஜனக் கருத்துகளுக்கு
எதிராக எழுத்தாளன் பயணிக்க வேண்டி இருக்கிறது.
அத்தருணங்கள் எழுத்தாளனுக்கும் வேதனைத்தரும்
சுமையான பொழுதுகள்.
முரண்வெளியை எழுத்தாளனின் எழுத்துகள்
விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை.

No comments:

Post a Comment