Tuesday, July 28, 2015

அப்துல்கலாம் என்ற தனிமனிதனைப் போற்றுகிறேன், ஆனால்..



எதைச் சொல்லமுடியாமல் தவித்தேனோ அதை இப்பதிவு
நயத்தக்க நாகரீகத்துடன் பதிவு செய்திருக்கிறது. மறைந்த அப்துல்கலாம் அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம், எளிமை, தமிழ்ப்பற்று,மாணவர்களுக்கு அவர் கொடுத்த தன்னம்பிக்கை, அறிவியல் மீது அவருக்கு இருந்த அளப்பற்ற ஈடுபாடு..இவைகளை எல்லாம் தாண்டிபேசப்பட வேண்டியவை நிறைய உண்டு. இந்து மதக்
காவலர்கள அவரைக் கொண்டாடுவதற்குப் பின்னால் இருக்கும்
நுண்ணரசியல் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர் சொன்னவை
அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் இதற்கு
பொருள் அல்ல.

.
எவரது இறப்பு என்பதும் மரியாதைக்குரிய இரங்கத்தக்க நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. இன்னும் இறப்புடன் நேரடியாக உடல்-மனதுடன் சம்பந்தப்பட்டவர்க்கு அது மீள முடியாத இழப்பு. அத்தகையவர்களது இழப்பில் எவரும் பங்கு பெறவே வேண்டும்.
அதுவே தேசிய நிகழ்வாகிறபோது, அதனை முன்வைத்து ஒரு தேசிய பெருமித அரசியல் முன்னெடுக்கப்படும்போது, அது பிரச்சினைக்குரிய பிறிதொரு உணர்வாக மாற்றமடைகிறது.
ஓரு இளம் ஈழக் கவிஞர் ஒருமுறை தனது நம்பிக்கைகளுக்கு உந்து சக்தியாக ஹிட்லரின் மேற்கோள் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ஹிட்லர் ஒரு தோல்வியுற்ற ஒவியன் என்றாலும் அவன் உலகை வெற்றிகொள்ள முயன்ற பைசாசம் அல்லது பேருரு அல்லவா?
ஏழ்மையிலிருந்து பணம்குவிப்பது நோக்கி நகர்வதும் அதிகாரங்களின் உச்சங்களைச் சென்று சேர்வதும் இங்கு பின்பற்றத்தக்க உதாரணமாக நோக்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு அகடமிக் படிப்பில் சேர்க்கப்பட்ட செய்தி ஒன்றையும் பார்த்தேன். இதே தமிழகத்தில் பொதுச் சமூக உளவியலில் ஜெயகாந்தனின் இடமும் பாலு மகேந்திராவின் இடமும் என்ன? இருவரும் தத்தமது துறையில் மகத்தான மாறுதலைக் கொண்டு வந்தவர்கள் இல்லையா?
ஏவுகனை என்ற சொல் எனக்குள் பயங்கரத்தையே எழுப்புகிறது. உயிர்வாதையை எழுப்புகிறது. ஐன்ஸ்டீனும் பியானோவும் என்றொரு பிம்பம். அணுகுண்டு வெடிப்பு. பிரமிளின் ஈ ஈஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர்ட் என்றொரு கவிதை.
அணுகுண்டு உற்பத்திக்கான அறிவியல் மூலம் ஐன்ஸ்டீன். நாகசாகி பேரழிவின் போது அறிவியலும் அரசியலும் பேரழிவும் குறித்து அவர் என்ன சொன்னார் எனத் தேடி வாசியுங்கள். அதனுடன் அவரெழுதிய வொய் சோசலிஷம் எனும் கட்டுரையையும். இதற்கு மேல் இத்தருணத்தில் பேசுவது பொருத்தமில்லை என்பதால் நகர்கிறேன்..


Like   Comment   

No comments:

Post a Comment