Tuesday, March 3, 2015

மோதியின் கனவு இல்லமும் பட்ஜெட்டும்



மோதி பிரதமரானவுடன் அறிவித்த ஒரு திட்டம் கனவு இல்லம்.
வீடில்ல்லாத ஒருவன் கூட இனி இந்தியாவில் இல்லை
என்ற கனவு.. கேட்பதற்கும் நினைப்பதற்கும் ரொம்பவும்
இனிமையாக இருந்தது. திட்டங்களை அறிவிக்கும் போது
மோதியின் சிறப்பம்சம்.. என்னவோ பாரதமாதா அவர்
கனவில் தோன்றி என் புதல்வர்கள் அனைவருக்கும்
நீயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட
தொனியில் ஆவேசம் வந்து அருள் வாக்கு கொடுப்பது போல
பேசுவார். தொலைக்காட்சியில் அவ்ர் பேசும் போது கேட்பவர்களுக்கு
எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருக்கும்.

இந்தியாவில் இந்தியர் அனைவருக்கும் வீடு.. கனவு இல்லம் என்பது
மோதியின் கனவு என்று நம் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும்
சொல்லிக்கொண்டே இருந்தன. இதில் வேறு, 2022க்குள் இத்திட்டம்
நிறைவேறி விடும். 2022 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள்
நிறைவடையும் தருணத்தில் இந்த சாதனை கொண்டாடப்படும் என்று
காலம் நேரம் நாள் குறித்துவிட்டார்கள். இதுவும் கேட்பதற்கு இனிமையாக
பாலாறும் தேனாறும் கலந்து ஓடுவது போள இனித்தது.

இத்திட்டம் சாத்தியப்படும் என்று திட்டக்குழு அறிஞர்களைக்
கொண்டு பேச வைத்தார்கள். HOUSING AND URBAN INFRASTRUCTURE
CORPN. தலைவர் சுரேஷ் இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி
விளக்கமாக பேசினார். எழுதினார். எப்படி?

போக்குவரத்து, சாலைவசதி. நிலம் கையகப்படுத்துவ்தில் இருக்கும்
சட்டங்களை எளிமைப்படுத்துதல், கட்டிடம் கட்டுவதற்கான
கச்சாப்பொருட்கள் குறைந்த விலையில் எளிதாக கிடைக்க
ஏற்பாடு செய்தல்.. இத்துடன் கட்டிய வீடுகளை வாங்குவதற்கு
எளிதில் கடன் வசதி செய்து கொடுக்கும் திட்டங்கள்..
இன்னபிற வசதிகள் செய்துக் கொடுக்கப்ப்ட்டால் "கனவு இல்லம்"
சாத்தியப்படும் என்று எழுதினார்.

இத்திட்டத்திற்கு நம் பட்ஜெட்டில் அருண்ஜெட்லி ஒதுக்கி
இருக்கும் தொகை ரூபாய் 22,407 கோடி. இதில் அவ்ர்கள்
60 மில்லியன் வீடுகளை 2020க்குள் கட்டியாக வேண்டும்.
அதில் 40 மில்லியன் வீடுகள் கிராமப்புறங்களிலும்
20 மில்லியன் வீடுகள் நகரப்புறங்களிலும் கட்டப்படும்
என்று அறிவித்திருக்கிறார்.
அகமதாபாத் மறுசீரமைப்பு திட்டத்தில் அத்திட்டத்தை
நிறைவேற்றுவதற்கு ரூ 45,000 கோடி ஒதுக்கப்ப்ட்டது.
இதில் ரூ 30,000? கோடி சாலை வசதி, தண்ணீர் வசதி
என்ற அடிப்படை வசதிகளுக்கே தேவைப்பட்ட்து என்று
சொல்கிறது குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் நகர சீரமைப்பு
திட்டத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்ப்ட்டதை
அந்த மாநிலத்தில் அப்போது முதல்வ்ராக இருந்த்
மோதி அவ்ர்கள் நன்றாக அறிவார். அப்படியானல்
பட்ஜெட் ஒதுக்கி இருக்கும் இந்த 22,407 கோடி
போதுமா? சரி.. அப்படியே போதும் என்று கற்பனை
செய்துக்கொண்டாலும் இத்திட்டங்களை நிறைவேற்ற,
வீடு கட்ட முதலில் தேவை நிலம். எங்கே, எவ்வளவு
நிலம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது?
தனியார் நிலங்களா, அரசு நிலங்களா?
இத்திட்டத்தை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த
வேண்டும் என்றால் இத்திட்டத்தில் மாநிலங்களில் பங்கு
என்ன?
இன்னும் 5 வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும்
என்றால் வருகின்ற நிதியாண்டில் இத்திட்டம் தொடங்கப்பட
வேண்டும்., இத்திட்டத்திற்கான வரைபடம் எங்கே?


ஏற்கனவே இதேமாதிரி திட்டங்கள் வெவ்வேறு பெயர்க்ளில்
இந்தியா நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டன.


Jawaharlal Nehru National Urban Renewal Mission: Basic Services to the
Urban Poor (BSUP) & Integrated Housing & Slum Development Programme
(IHSDP)

• Swarna Jayanti Shahari Rozgar Yojana (SJSRY)

• Affordable Housing in Partnership (AHIP)

• Interest Subsidy Scheme for Housing the Urban Poor (ISHUP
)
• Integrated Low Cost Sanitation Scheme (ILCS)

• Projects/ Schemes for the Development of North Eastern States, including
Sikkim
Vision of Slum Free India: Launch

இவை எல்லாம் என்னவானது?

மோதியின் கனவு இல்லம், கூரைகளுடன் செங்கள் சிமிண்டால்
கட்டப்படும் pucca house என்பது எந்தளவுக்கு சாத்தியப்படும்?

முன்பெல்லாம் தனி நபர்கள் மட்டும் தான் கனவு க்ண்டார்கள்.
இப்போதெல்லாம் இந்திய அரசும் கனவு காண ஆரம்பித்துவிட்டது.
தனி நபர் கனவு அந்தக் கனவு கண்ட நபரை மட்டும் தான் பாதிக்கும்.
ஆனால் ஓர் அரசே கனவு கண்டால்..?

2 comments:

  1. வீடுகட்ட இந்தியாவில் இடமில்லாவிட்டால் என்ன அதுக்குதான் நாங்க செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுபிச்சு இருக்கோமல அங்க வீடு கட்டி கொடுப்போம்....

    ReplyDelete
  2. ஆமாம் இப்படி எல்லாம் பதிவு போட்ட மோடி கோவிச்சுக்கிட்டு உங்களுக்கு வீடுகிடையாதுன்னு சொல்லிவிடுவார்

    ReplyDelete