Wednesday, December 10, 2014

மோதியின் குழப்பமான பொருளாதரம்


மோதி BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா & சவுத் அமெரிக்கா)
நாடுகளுடன் இணைந்து இந்திய பொருளாதரத்தை வள்ர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வோம் என்றார். அத்திட்டத்தின்
ஒரு பகுதியாக தான் திடீரென ஒருநாள் கோவிலகளை விட கழிவறைகளே வேண்டும் என்று அவர் பேசியது. பிரிக்சு நாடுகள் development bank ஒன்றை உருவாக்கி இருக்கின்றன. தலைமையகம் சீனாவில். இந்தியா தான் இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை
ஏற்கும் என்று அறிவித்தாகிவிட்டது.
சீனாநாடு பெருமளவில் அந்நிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவைவிட சீன அரசின் உள்நாட்டுச் சட்டங்கள் கடுமையானவை.
அப்படி இருந்தும் சீன அரசினை ஏமாற்றிவிட்டார்கள் அந்நிய
முதலீட்டாளர்கள். இப்படியாக சூடு வாங்கிய சீனா "இனிமேல் அந்நிய முதலீட்டை அதிகமாக எதிர்ப்பார்த்து பொருளாதரத்தை மேம்படுத்தாது" என்று சொல்கிறத் சீன பத்திரிகை. (பீஜிங் ரிவியு. செப்
2014)..இந்த நிலையில் தான் மோதியின் அரசு அந்நிய முதலீட்டை
சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது
இது ஒரு பக்கம் என்றால் அமெரிக்காவில் வளர்ந்த நாடுகள் கடந்த 50 வருடங்களாக இயற்கையை அழித்து சுற்றுப்புற சுழலைக் கெடுத்து
தடுமாறி நிற்கின்றன. சந்தை பொருளாதர முறையை மாற்றி அமைக்காவிட்டால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் ஆபத்து
என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் 2001ல் நோபல் பரிசு பெற்ற
ஜோசப் ஸ்டிக்லிசு. இவர் உலக வங்கியின் தலைமைப் பொருளாதர அறிஞராக இருந்தவர். முன்னாள் அதிபர் க்ளிண்டனின் ஆலோசகர்.
இதுபோன்ற உண்மைக்கருத்துகளை வெளியிட்டதற்காக அமெரிக்க அரசு ஸ்டிக்லிசின் பல்கலை கழக ஆய்வு பேராசிரியர் பதவியைப் பறித்துவிட்டது. இந்த எச்சரிக்கைகளை மோதி அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. உணவு, மருந்துப் பொருட்கள் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்ற்ன.
அதைத் தடுக்க முடியவில்லை.
ஒரு பக்கம் அமெரிக்க ஆதரவு நிலை, இன்னொரு பக்கம் ப்ரிக்சு நாடுகளுடன் இணைந்து பொருளாதரத்தை வள்ர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வோம் என்று மோதி தானும் குழம்பிப் போய்
மக்களையும் குழப்புகிறார்.திட்டமிடலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாத கற்பனைப் பொருளாதரக் கொள்கை..
....
காகித ஓடம் கடல் அலை மீது...
Like ·  · 

No comments:

Post a Comment