Wednesday, September 4, 2024

தங்கலான் vs வாழை

 " வாழையைக் கொண்டு தங்கலான் மறைக்கப்படுகிறதா?!"


தங்கலான், வாழை இரண்டு படங்களும் நான் பார்க்கவில்லை.

ஆனால் தங்கலான் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போது சட்டென காற்றடித்தது.

அந்தக் காற்று முழுக்கவும் வாழை வாழை என்று பல்வேறு வடிவங்களில் மார்க்கெட்டிங்!

வாழைக் கொண்டாடப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை! காரணம் இந்தக் கொண்டாட்டங்களின் பின்னாலிருக்கும் அரசியல்.

அது என்னைப் போல டூயுப் லைட்டுக்கு கூட புரிகின்றது.

இது ஒரு கண்ணைப் பிடுங்கி இன்னொரு கண்ணுக்கு மை தீட்டும் 

நுட்பமான வன்முறை.

எனக்கே புரிகிறது என்றால்

மற்றவர்களுக்கும் புரியாமலா?!!!!

ஆனால் அவர்களால் வெளிப்படுத்த முடியாது.

படவாய்ப்புகள், பாட்டு எழுதும் வாய்ப்பு, கதை வசனம் எழுதும் வாய்ப்பு, நாளைக்கு இதெல்லாம் கிடைக்கலாம்... இப்படியாக பலருக்கு பல காரணங்கள்.

எனக்கு இதைப் பற்றி என்ன கவலை?!


என் கவலை எல்லாம் பா. ரஞ்சித்தின் கலை அரசியலை மாரி செல்வராஜைக் கொண்டு திசைத் திருப்பும் நுண் அரசியல்... கவலைத் தருகிறது.

இரண்டு கண்களோடு பார்க்கும் பார்வையைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.

" வாழை ..வாழைப் போட்டவனை பயிரிட்டவனை வாழவிடாது! என்பது இப்போதும் உண்மையாகி விடக் கூடாது.

# தங்கலான்_வாழை

 #thangalan _vaazhai

No comments:

Post a Comment