Tuesday, May 4, 2021

கழுதைப்பாதையில் ...

 

பொதி சுமக்கும் கழுதைகளும் மனிதர்களும்




கழுதைகளும் மனுஷனைப் போலத்தான் என்பது நிஜமான வார்த்தை.

முதல்லே அது சொல்ற பேச்சை நாம கேட்டாத்தான் நாம்மோட பேச்சை அது கேட்கும்…. கழுதை உடம்பில எங்க தொட்டா என்ன நடக்கும்னு தெருஞ்சு வச்சிருக்கனும். கழுதையும் மனுஷன் மாதிரிதாண்டா

மூவண்ணா சொல்லியதை சுப்பண்ணா நினைத்துக்கொள்ளும் இட த்திலிருந்து கழுதைப்பாதை ஆரம்பமாகிறது.

 சுப்பண்ணா சொல்வது போல கழுதைகள் மனிதர் குளிப்பாட்டி

சுகம் கண்டபின் மனிதன் சொல்லைக் கேட்டு பாரத்தை சுமந்துகொண்டு மலையேறுவதும் மலைச்சரிவில் பாரத்துடன் இறங்குவதுமாக

வாழ்க்கையை சுமந்தலைகின்றன. கழுதையை ஒட்டிக்கொண்டு

ராவும் பகலும் கழுதையோடு கழுதையாக பயணிக்கும்

மக்களும் அவர்களின் வாழ்க்கையும் மலையிலும் தரையிலும்

மாறி மாறி கழுதைகளைச் சுற்றி சுற்றி வருகின்றன.

 கண்ணாலத்திற்கு முந்தியே வேட்டைக்குப் போய்விட்டு வருவது தான்

முதுவாக்குடி ஆண்களுக்குப் பெருமை.. இந்த வேட்டை காட்டு விலங்களை

வேட்டையாடும் வேட்டை அல்ல, தனக்குப் பரிசம் போட்டிருக்கும் பெண்ணை திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் பெண்ணின் தோழியர் அவளை மறைத்து வைத்திருக்கும் இட த்தை தேடி அவளைத் தூக்கி வந்துஅவளும் விரும்பியே வருகிறாள்அவனும் அவளும் ஆசைத்தீர உடலுறவு கொள்ளும் இரவாக மாறுகிறது. இந்த வேட்டையை அனுமதிக்கும் அதே முதுவாக்குடி ஜனங்கள் தான் தரைக்காட்டு காரியை முதுவாக்குடியில் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை! முதுவாக்குடியின் கட்டுப்பாடுகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு குடிசைப்போட்டு வாழ்ந்த ராக்கப்பன் கங்கம்மா கழுத்து அறுபட்டு இறக்கிறார்கள். அவர்களின் குடிசை தீக்கிரையாகிறது. கங்கம்மா சிலையாகி தெய்வமாகி .. கனவில் வந்து ஆட்சி செய்கிறாள். செவ்வந்தி கதையாக அதைச் சொல்லி திரிகிறான்.

     ராக்கப்பன் கங்கம்மாவின் காதல் திருமணத்தில் முடிந்தாலும்

அவர்கள் கணவன் மனைவியாக வாழவில்லை.. கணவன் மனைவியாக

வாழ்பவர்களின் ஆண் பெண் உறவு சொல்ல முடியாத வலிகளையும்

ஏக்கங்களையும் சுமந்து அலைகிறது.

மூவண்ணா தன் எதிரே கால்நீட்டி அமர்ந்திருந்த அங்கம்மாளின் கையை ஆசையாக எட்டிப் பிடித்து இழுத்தார். அங்கம்மாள் கோபத்துடன்ஆமா பகல்ல ஏத்துனாலும் ரவையில ஏத்துனாலும் வெளக்கு எரியவா போகுது?’ என்றதும் மூவண்ணாவுக்கு முகம் வாடியது. உள்ளமும் உடம்பும் அந்தப் பேச்சால் பொசுங்கிக் கருகின. சுடுமணலில் சுமையுடன் நடைக்குத் தவிக்கும் கழுதையின் வேதனையைப் போலானது(பக் 134)

இந்த அங்கம்மாவும் அவள் தங்கை தங்கம்மாவும் அவர்களின் கணவன்மார்

மூவண்ணா , சுப்பண்ணாவுக்கு செய்யும் செய்யும் துரோகத்தின் சுவடாக

கதையின் இறுதிப்பகுதிவரை சுமையை இழுத்துச் செல்கிறது கழுதை.

அங்கம்மாவின் குழந்தை ஆசை, அதற்கு உடன்படும் தங்கம்மா தன்

புருஷனை அவனறியாமல் அங்கம்மாவை உடலுறவு கொண்ட இரவும்

அதை உணர்ந்த தருணமும்அந்த உணர்வுகளும் அங்கம்மாவின் அலறலும்

சுப்பண்ணாவின் சாபமும்.. நாவலின் இறுதியில் கழுதைகளுடன் சேர்ந்து

அந்த கழுதைப்பாதையில் எரிந்து சாம்பாலாகிவிடுகிறது.

கதை நெடுகவும் ஆண் பெண் உறவுகளும் அதில் பெண்களின் ஏக்கம்,

தாய்மைக்காக ஏங்கித் தவிக்கும் இரவுகள், அதனால் ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும் மன உளைச்சல்கள், தான் விரும்பிய

ஆண் கிடைக்கவில்லை என்றவுடன் அவன் திருமண நாளில் தற்கொலை

செய்து கொள்ளும் பெண், காதலனை பொருளாதர வசதிக்காக மறந்துவிட்டு

அதன் பின் அதே குழந்தை ஏக்கத்தில் அவனை நினைத்து தேடி அலையும்

நாகுஎர்ராவூ காதல்..

செல்வம் என்னை விட்டுட்டுப் போனது மாதிரி நீயும் போயிடாதே.

ஏம் பக்கத்திலேயே இரு. அதுபோதும் எனக்கு. கல்யாணமெல்லாம் வேணாம். நீயும் நானும் கடைசிவரைக்கும் இப்படியே இருப்போம் : என்று தன் படுக்கையில் படுத்திருக்கும் தாயின் முன்னால் கதறி அழும் கோமதி..

இப்படியாக  இந்த நாவலில் பாதை நெடுக மனிதர்களும் அவர்களின்

ஒவ்வொரு கதையும் ஒரு மாலையில் கோர்த்திருக்கும் பூக்களைப் போல

ஒவ்வொன்றாக கண்ணியில் இணைகின்றன.

     மலைக்காடும் காட்டுப்பாதையில் பாரத்தை தரைக்கும் மலைக்கும்

சுமந்து செல்லும் கழுதைகளும் கழுதை ஓட்டிகளும்.. அவர்கள் வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும் காலத்தின் மாற்றங்களுடன் கதை

பயணிக்கிறது. மலைக்காட்டு மனிதர்கள் டிரெயினில் ஏறி பயணிக்கும்

காலம் வந்துவிடுகிறது. அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளை நாலு

எழுத்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

வெள்ளைக்கார ர்களின் மிசினரி பள்ளிக்கூடங்கள் வந்துவிடுகின்றன.

மருதுவும் சன்னாசியும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில்

சேர்க்க வ ந்திருப்பதாக முதலாளியிடம் சொல்கிறார்கள்.

போடிப்பட்டி பள்ளிக்கூட த்தல சேர்த்துக்கோ. வீடு பிடிச்சி உன் பொம்பளைங்க இங்க தங்க கூடாதுஎன்று ஆணையிடுகிறார்.

குடும்பத்தோடு காப்பிக் காட்டில் வேலை செய்ய ஒத்துக்கொண்டவர்கள் அவர்கள். அதை மீறும் அதிகாரம் அவர்களுக்கில்லை என்பதை நினைவூட்டுகிறார்.

பள்ளிக்கூட த்தின் இடம் கட்டிடம் சூழல் அதை அப்படியே எழுத்தில்

கொண்டு வந்திருக்கும் செந்தில்குமார்இது ஒரு காலத்தின் கதையாக

மாறுகிறது. இந்திய வரலாற்றில் கிறித்தவ மிஷினரி பள்ளிக்கூடங்களின்

வளர்ச்சியும் பங்களிப்பும் கதையோடு கதையாக கதையுடன் சேர்ந்து

எழுதப்பட்டிருக்கிறது.

நம்மள மாதிரி மலங்காட்டில கஞ்சிக்குத் தவதாயப்படாம பிள்ளைகளாவது

வேலைக்கு வயித்துக்குத் தின்னுக்கிட்டு இங்கே இருக்கட்டும்என்று சன்னாசி சொன்னான். அதைக் கேட்ட மருது  நம்ம பிள்ளைகள நாலு காசு சம்பாதிச்சி கொண்டுட்டு வர்ற துட்டில திங்கற சோறுதான் நம்ம உடம்பில

தங்கும். அதுவரைக்கு உசிரக் கையில பிடிச்சிட்டு மலங்காட்டில வேல செய்யனும்: (பக் 287)

 காட்டுத் தீயில் முவண்ணாவின் 300 கழுதைகளும்

எரிந்துப் போகும் காட்சி கழுதைகள் தாயா பிள்ளையா சேர்ந்து  நின்று

ஒன்றாகவே தீக்கிரையாகி இருக்கின்றன .. மூவண்ணா தன் கழுதைகளின்

மரணத்தை தன் மனைவி அங்கம்மா செய்த துரோகம் தான் தன் கழுதைகள்

தீயில் மாட்டிக்கொண்டு இறந்துவிட காரணமாக இருந்தன என்று

சொல்லி சொல்லி அடிக்கிறார். அந்தப் பெண்கள் அடியை வாங்கிக்

கொள்கிறார்கள். அவர்களும் அதையே நம்புகிறார்கள்.

காடு தரை மலை கழுதை ஆடு மாடு.. எல்லா வாழ்க்கையிலும்

பாதை நெடுக பெண்களின் பாதங்களில் முட்செடிகள்.. அவள்

கழுதைபாதைக்கு தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதி சுமக்க வேண்டும். மலை ஏற வேண்டும். சரிவில் இறங்க

வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெறாத அவள் வாழ்க்கை

அர்த்தமிழந்த வாழ்க்கையாகிவிடுகிறது. பெண் என்றால்

அவள் அவன் வாரிசுகளின் விளை நிலமாக இருக்க வேண்டும்.


நிலம்  தரிசாக இருந்தாலும்

மழைமேகத்தை யாரும் குற்றம் சொல்வதில்லை.

தரிசு நிலத்தைத்தானே கட்டாந்தரை என்று சொல்கிறார்கள்.

கழுதைப்பாதையில் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்

இல்லை என்றாலும் அவர்களின் ஏக்கமும் தேவையும் குழந்தையைப்

பெற்றெடுப்பதாகவே இருக்கிறது. இனக்குழு ரெஃப்ட்க்  எவ்ஃப்வ்வாழ்க்கையில்

பெண்ணின் இடம்வாரிசு காய்க்கும் மரம்.. கழுதைபாதையும் விதிவிலக்கல்ல,

 

 நாவல் : கழுதைப்பாதை

எழுத்தாளர் : எஸ். செந்தில்குமார்.

வெளியீடு; எழுத்து – பிரசுரம்

பக் 319 விலை ரூ 375/

  

No comments:

Post a Comment