Wednesday, April 21, 2021

நீர்வளரி....மூச்சுத்திணறுதே




 மூச்சு முட்டுது நைனா..

 நீர்வளரியில் மூழ்கி எந்திருக்க முடியல

 மொழிப்பொருள் தெய்வமே.. 

கருணைக்காட்டு.. 

எப்படியும் என்னைக் காப்பாத்திடு.. 


தமிழ்லல எழுதியிருக்காருய்யா,, 

ஒவ்வொரு வரியும் புரியுதுய்யா. 

ஆனா மொத்தமா சேர்த்து வாசிச்சா 

தலை சுத்திக்கிட்டு யாரோ தண்ணிக்குள்ள வச்சு

 அமுக்குறமாதிரி மூச்சை முட்டுது நைனா,, நீர்வளரி நாவல்.. 

கோணங்கி எழுதியது. 780 பக்கமெல்லாம் 

பயமுறுத்தலை நைனா. இத மாதிரி இரண்டு மடங்கு

 பெரிசெல்லாம் வாசிச்சிருக்கோமில்ல, 

அத்த விடு நைனா, வாசிக்கிறவனை தலைமயிரைப் பிய்ச்சுக்கிட்டு உட்காரவைக்கறதெல்லாம் 

ரொம்ப பயம்ம்ம்மா இருக்கு நைனா. 

இப்போ இந்த 780 பக்கத்துக்கும் 

உங்களையோ அல்லது நீர்வளரியில் 

முங்கி எந்திரிச்சவுங்களையோ 

உரை எழுதச் சொல்ல முடியுமா என்ன?!! 

ஒருவேளைநீர்வளரி எங்கள மாதிரி வாசகர்களுக்காக

 எழுதப்பட்டதல்ல என்று சொல்லலாம்,!

 "என் எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஒருவன் பிறப்பான்" 

என்று சொன்ன பிரபலமான எழுத்தாளர்களையும்

 வாசித்துவிட்டோம்.. 

இது என்ன நைனா.. நீர்வளரி கண்ணாமூச்சிக் காட்டுது! 

பிட்டு பிட்டா புரியுது. ஆனா சேர்த்து ஒன்னா வாசிக்கும்போது 

மூச்சு முட்டுது. 

15 நாளா நீர்வளரியோட முங்கி எந்திரிச்சி 

நீஞ்சி .. பெரிய யுத்தம் நடக்கு. 

ஏன் நைனா.. இப்படி எல்லாம் சோதனை நடத்தறீங்க? 


ஒவ்வொருகாதையும் அதன் களமும் காலமும்

 வால்காவிலிருந்து கங்கை சுட்டுகிறமாதிரி 

ஒரு பாயிரமாவது இருந்திருக்கலாம். 

பயணிக்க எளிதாக இருந்திருக்கும்! 

 "முதற்புல் கூட் முளைக்கவில்லை, முதல்மரம் எதுவும்

 படைக்கப்படவில்லை, செங்கல் எதுவும் பதிக்கப்படவில்லை, 

கட்டடம் எதுவும் அமைக்கப்படவில்லை, நிலமெல்லாம்

 கடலாக இருந்தது " முதல் கதையில் (பக் 86) "

"ஆழமான கடலிலே வளர்ந்து வந்தவை ஆணுமல்ல, 

பெண்ணுமல்ல,சர்வ நாசமிக்க சூறைக்காற்றுகள் அவை.

 சுமேர தீபிகாவில்கண்ணுக்குத்தெரியாத பல காற்றுகள் 

சுழன்று சுற்றி பறவைகளாக மாறிவ்டும். யார் பார்வைக்கும்

 தெரியாதபடி கூழாங்கற்கள் கீழே நழுவிஇறங்கி 

கொண்டிருக்கிறது சுமேரதீபிகா" (பக் 87) 

 இது இன்னும் நல்லாவே புரியுது நைனா. கவித்துமாகவும் இருக்கு. 

அப்படியேே வாசிச்சிட்டே வந்தப்போ துரைசாமி பேசற பின் நவீனத்துவ கவிதை சூப்பரா இருக்கு. 

"எனக்கும் சாயைகளுக்கும் சம்பந்தம் என்னவென்று சொல்லிமனக்கலக்கத்தை காக்கையில் இருட்டில் பூசி 

காட்சியற்ற இருப்பை அடைந்தேன். ஆயினும் காக்கையின்

 கரைவு ஒலி] எங்கிருந்தாலும் என்னைத் தொட்டது. சலூனில் மொட்டைஅடித்துக்கொண்டு தாடியை மழித்தாலும் ,

 காக்கையில் ஓட்டம்என் பிம்பத்தோடு சேர்ந்து பறக்கிறது. ....

.தீவாந்திர தண்டனைக்குப் பிறகு கால வித்தியாசத்துடன்

 சமகாலக் காக்கைகள் கூட்டமாகப்பறக்கின்றன. 

அதன் மோகத்திலிருந்து என்னால் தப்ப முடியவில்லை" 

ரொம்பவும் ரசித்த இடம் .. இந்த வரிகள். 

ஆனாா ரசனையுள்ள வரிகளும் புரிந்தப் புள்ளிகளும்

 விரவிக்கிடந்தாலும் ஏன் நைனா.

. இடியாப்பம் மாதிரி இருக்கு..! 

நானும் என்னவெல்லாமோ உத்திகளுடம்

 வாசித்தாகிவிட்டது! ம்கூம்... ரொம்ப மூச்சுமுட்டுது நைனா.. 

எங்கஊர்ல ஆக்சிஜன் சிலண்டர் வேற தட்டுப்பாடாகிவிட்டது.

 இப்படி மூச்சுத்திணற வைக்கலாமா நைனா..?!!

 நீர்வளரி... அப்படியே.. கொஞ்சம் கொஞ்சமா

என் வாசிப்பு நிலத்தை ஆட்கொள்ளமுடியாமல் 

அமுக்கி ஒரேயடியாக நீரடிக்குள்

 லெமுரிகாரிகையுடன் நானும் பயணிக்கிறேன்..! 

புத்தகத்திற்குள் உள்ளே மூழ்கும் வார்த்தைகள் 

 மொழிச் சுழல்களில் நகரும் புயல" இந்தக் கடலடி 

நீர் நூலகத்தில் எழுதியவர்கள் யாரேனும் ரகசியமாய்

 எழுதிக்கொண்டிருந்த மஞ்சள் நீர் விளக்கொளி

 மயங்கித் தோன்றும் இருளில் யாரோ நடந்து வருகிறார்கள். 

கடலுக்கு வெளியே மூழ்கும் நூலகம் அதன் நினைவை 

ஒவ்வொரு நாளும் அறியாமலேயே 

இன்னும் எழுதியபடியே.." (பக் 132/ 133) 

நீர்வளரியில் நான் கனவு காணுகிறேன்.. 

எல்லா கனவுகளும் புரிவதில்லை தானே.. நீ


நீர்வளரி நாவல் 

 எழுத்தாளர் கோணங்கி

 அடையாளம் வெளியீடு 2020. 

பக் 780. விலை.660/




No comments:

Post a Comment