Friday, January 24, 2020

பாளையங்கோட்டை இருக்கு! கோட்டை எங்கே போச்சு?


பாளையங்கோட்டையில் தான் 4 ஆண்டுகள்
கல்லூரி படிப்பும் விடுதி வாழ்க்கையும்.
பாளையக்காரர்கள் இருந்தார்கள், கோட்டைகள்
கட்டி இருந்தார்கள் என்று எதோ சின்னதா யோசிச்சோமே தவிர பாளையங்கோட்டையில் இருந்தக் கோட்டை
 இப்போ எங்கே இருக்குனு யோசிக்கவே இல்ல..
(அப்போ எல்லாம் அந்த வயசுக்கு ஏற்ற மாதிரி
வேற யோசனைகள் இருந்திருக்கும்!)
சரி ..இப்போ அத விட்டுத்தள்ளுங்க.
எங்க பாளையங்கோட்டையில் கோட்டை இருந்துச்சாம்.
அந்தக் கோட்டையின் நீளம் 2,700 அடி. சுற்றுச்சுவர்
மட்டும் 15 அடி அகலம் இருந்துச்சாம். அடேங்கப்பா..!
இந்தக் கோட்டைக்கு 4 வாசல்.
கிழவாசல் பெயர் – திருச்செந்தூர் வாசல்
வடக்குவாசலுக்கு – மதுரை வாசல்,
தெற்கு வாசலுக்கு – திருவன ந்தபுரம் வாசல்
மேற்கு வாசலுக்கு – திரு நெல்வேலி வாசல்
என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்
காலத்தில் 52 இடங்களில் படைவீரர்கள்
 மறைந்திருந்து கோட்டையைக் கண்காணிக்கவும்
 எதிரிகளைத் தாக்கவும் கொத்தளங்கள் இருந்தன.
 1844 ல் இக்கோட்டை அப்போதைய
ஆங்கிலேய கலைக்டராக இருந்த தாமஸ் மற்றும்
பக்கிம்துரை ஆணையால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
பாளையங்கோட்டையின் கற்களை 
சுலோச்சனா முதலியார் பாலமும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டும் 
கட்ட பயன்படுத்தி இருக்கிறார்கள்..
இக்கோட்டை இருந்த தற்கு சாட்சியாக இருப்பவை
மேடை போலீஸ் ஸ்டேஷன்...!
பாளையங்கோட்டையில் பாளையக்கார ர்கள்
கோட்டை கட்டுவதற்கு முன் .. அந்த ஊருக்குனு
ஒரு பெயர் இருந்திருக்கும் தானே..
அது என்ன? ???? எனக்கு இன்று தான் தெரியவந்தது.
“வல்லப மங்கலம்..”

“வல்லப மங்கலம்” தான் பாளையங்கோட்டையா
மாறி கோட்டை இடிஞ்சி பாலமாகி அணையாகி
அப்புறம் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டாகி
அதில நாங்கள் எல்லாம் படிச்சு… ப்படிச்சி.. ப்படிச்சி..
ஆக்ஸ்போர்ட் பெருமையைத் தூக்கி
நிறுத்திப்பிட்டோமில்ல!


பி.கு: பாளையங்கோட்டை இருக்கு.. நம்ம கோட்டை எங்கே போச்சுனு
தேட வைத்த "தென்னாட்டு ஜமீன்கள் - முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நன்றி)


(the sketch of Palayamkottai fort presented by the Colonel James Welsh)

1 comment:

  1. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete