Saturday, January 5, 2019

ஆண் பெண் உறவு நிலை

ஆண் பெண் உறவுகளில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை
எப்படி எடுத்துக்கொள்வது?
திருமணம் என்பது நிறுவனம் தான்.
அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் அந்த நிறுவனத்தின் நோக்கம்
துவக்கம் எப்படி இருந்தாலும் அந்த
நிறுவனத்தின் மாற்றம் என்பது
ஆண் பெண் குடும்ப நிறுவனத்தில்
சம பங்காளர்கள் .. இந்தப் பங்கீடு என்பது
வணிகவியலில் சொல்லப்படும் பங்கீடு மட்டுமல்ல,
சமூகவியலின் பொருத்தப்பாடுகளுடன்
கையாள வேண்டிய பங்கீடு.
நம் அம்மாக்களுக்கு இந்தப் பங்கீட்டு முறை
குறித்த புரிதல் இல்லை என்று சொல்லமாட்டேன்.
அவர்கள் இதைப் பேசவில்லையே தவிர
சத்தமில்லாமல் தங்கள் உரிமைகளை
மிகச்சரியாக பயன்படுத்தும் சூட்சம ம்
அறிந்தவர்களாக இருந்தார்கள்.
அம்மாக்களின் பெண்களாகிய நாங்கள்..
அம்மாக்கள் வாசிக்காத தை எல்லாம்
வாசித்த தலையில் கொம்பு முளைத்த
பெண்களாக … எங்களுக்கு தன்னம்பிக்கை
என்பது தானே எங்களுடன் வளர்ந்த து.
எங்களுக்கு முடிவு எடுக்கும் உரிமையை
நாங்களே வைத்துக்கொண்டோம்.
எங்களை இச்சமூகம் அடங்காப்பிடாரி,
திமிரு பிடித்தவள் என்றெல்லாம் விமர்சிக்கும் போது
அதில் மறைந்திருக்கும் பொருளின் கனம் எங்களை
இன்னும் வலிமையுடன் பயணிக்க வைத்திருக்கிறது.
எங்கள் தலைமுறை பெண்களுக்கு இருந்த
வாசிப்பு, எங்கள் தலைமுறை பெண்கள்
 ஏற்றுக்கொண்ட கருத்தியல்,
 எங்கள் தலைமுறை ஏற்றுக்கொண்ட 
தலைமைத்துவங்கள்…
இது எதுவுமே..
இன்றைய தலைமுறை பெண்களுக்கு
பூஜ்யமாகிவிட்டதா.. ?…
இன்றைய ஆண் பெண் உறவில்
அது குடும்ப நிறுவன உறவாக இருந்தாலும் சரி,
அந்த நிறுவனத்தை ஒதுக்கிய உறவாக
இருந்தாலும் சரி…
எத்தனை ஊசலாட்டங்கள்!
தடுமாற்றங்கள்!
எம் தலைமுறையை விட அதிகம் படித்தவர்கள்,
அதிகமாக சம்பாதிக்கும் இன்றைய பெண்களுக்கு
எங்க்கேயோ.. ஏதோ.. மிஸ்ஸிங்க்.
அதைக் கொடுக்க மறந்த விட்டோமா?
வன்முறைகள்.. என் பது கை நீட்டி அடிப்பது
மட்டுமல்ல…
ஆண் தொடர்ந்து ஒரு பெண்ணைக்
 குற்றவாளி ஆக்குவதும்
பெண் தொடர்ந்து ஆணை மட்டுமே 
குற்றவாளி ஆக்குவதும்
ஒரே ஆண் , ஒரே பெண் என்று ஒரே ஒரு 
குழந்தையைப் பெற்ற தலைமுறை
 தங்கள் உணர்வுக்குமிழிக்குள் சிக்கிப்
புதையுண்டு போவதும்…
பெற்றோரின் இந்த உணர்வு நிலை..
பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிப்பதும்…
அதிகரித்து இருப்பதை அக்கறையுடன் பார்க்கிறேன்.
இன்றைய கணினி கைபேசி வசதிகள் ஆண் பெண்
உறவு நிலையைக் காத்திரமாக வளர்ப்பதற்கு மாறாக
இருக்கின்றன. பெற்றோரின் தலையீடு என்பது
சின்ன சின்ன விசயங்களிலும் அதிகரிக்க இந்த
கைபேசியும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதா?
என்பதை பெற்றோர்களும் யோசிக்க வேண்டும்.

18 வயது என்பது ஓட்டுப்போடும் வயது மட்டுமல்ல,
சிறகு முளைத்தப் பறவைகள் பறந்து செல்ல வேண்டிய
அவர்களுக்கான பயணத்தின் தகுதியும் தான்.
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ..
அவர்கள் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தை
தீர்மானிக்கட்டும். வானத்தில் பறப்பதும்
கூடுகள் கட்டுவதும் அவர்கள் விருப்பம்..
அவர்களே அவர்களுக்கான திசைகளைத் தீர்மானிக்கட்டும்.
நாம் தூர இருந்து பார்த்து ரசிப்போம்.
நமக்கும் நமக்கான வாழ்க்கை மிச்சமிருக்கிறது.

எம் தலைமுறை இக்கருத்தை இன்னும் ஆழமாகவும்
தீவிரமாகவும் முன்வைக்கும் தருணம் இது..
எம் தலைமுறையின் குரலாக…

No comments:

Post a Comment