Friday, April 13, 2018

சாதிகளின் தேசம் இது

Image result for அம்பேத்கர்
இந்திய தேசம் சாதிகளின் தேசம்.
இந்திய தேசத்தின் மொழிகள் கலாச்சாரங்கள் பண்பாடுகள்
இவற்றில் வேற்றுமை இருக்கலாம்.
ஆனால் சாதியம் என்ற நூலிழை தான்
இந்திய தேசத்தை இன்றுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
சாதி ஒழிப்புக்காக போராடிய பவுத்தம் இந்திய
மண்ணிலிருந்து விரட்டப்பட்டது.சாதி ஒழிப்புக்காக
குரல் கொடுத்த நாராயண குரு எரிக்கப்பட்டார்.
மகாத்மா புலே இயக்கம் கடந்தகாலமாகிவிட்டது.
இந்தியாவை ஆண்ட பிறமதங்களால் சாதியை ஒழிக்க முடியைவில்லை. இசுலாமிய பேரரசுகளின் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியும் இந்திய சாதிய படிநிலையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல,
தங்கள் உட்கட்டமைப்பையும் இந்திய சாதியத்திற்கு
ஏற்ப மாற்றிக்கொண்டன.
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும்
சாதி ஒழிப்பு திட்டமோ ஏன் காகிதத்தில் எழுதப்பட்ட
அறிக்கையோ கூட கிடையாது. அப்படியே ஒரு திட்டம்
பேசப்பட்டால் கூட அக்கட்சிக்கு தோல்வி நிச்சயம்.
இதுதான் இந்தியா.
இந்திய தேசம் சாதிகளின் தேசம்.
சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்துவதற்கு சாதி மேம்பாடு
என்ற பாதை தெரிவு செய்யப்படுகிறது.
ஆண்ட பரம்பரை புராணங்கள் எழுதப்படுகின்றன.
இப்புராணங்களை எதிர்ப்பதும் வலுவிழக்கச் செய்வதும் மிகவும் எளிது. !!
இந்திய அரசியலமைப்பில் வேண்டுமானால் தீண்டாமை குற்றமாக எழுதப்பட்டிருக்கலாம்.
ஆனால் அக்குற்றவாளிகளே
இந்திய தேசத்தை இன்றுவரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..
இந்திய தேசம் சாதிகளின் தேசம்.
இத்தேசத்தில் சாதி ஒழிப்புக்கும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதைக்கும் அம்பேத்காரின் அறிவாயுதமே போராயுதம்.
போர் முறைகளை மாற்றுவதும்
கூர்மைப்படுத்துவதும் இன்றைய தேவை.

5 comments:

  1. சரியான கட்டுரை.

    ReplyDelete
  2. நல்ல அலசல். - இந்தியாவில் ஜாதிதான் எந்த விஷயத்தையும் தீர்மானிக்கிறது. நடுவுநிலைமை வகிப்பவர்களும் பல சந்தர்ப்பங்களில் மௌனம் சாதிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்

    ReplyDelete
  3. //சாதிகளின் தேசம் இது//
    தலைப்பு முற்றிலும் உண்மை
    இந்தியா ஜாதி விரும்பிகள் தேசம்

    ReplyDelete
  4. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete