Thursday, December 22, 2016

மோடி மாயாஜால வித்தைகள்..


ஆடுபாம்பே... விளையாடு பாம்பே..
ஆடுபாம்பே... ஆடு டு டு  பாம் ப்ப்பே...


நல்லதே நடக்கிறது.. ஆனால் நல்லதற்கல்ல..

தமிழகத்தின் தலைமைச் செயலர் அலுவலகத்தில் பலகோடி ரூபாய், ஆவணங்கள்..எவருக்கும் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தமிழருக்கே பெரும் தலைகுனிவு என்று எதிர்க்கட்சி தலைவர் திரு. க. ஸ்டாலின் அவர்கள்  அதிகமாகவே வருத்தப்பட்டிருப்பது
அறிந்து தனிப்பட்ட முறையில் வருத்தம் ஏற்பட்டது.
 உண்மையில் அவர் வருத்தப்பட்டிருக்க கூடாது.
 சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்...
 நல்லவேளை இத்தருணத்தில் திமுக  ஆட்சியில்
இல்லை என்பதற்காக. ஆனால் வழக்கம்போல அவர் அவசரப்பட்டுவிடுகிறார். என்ன செய்வது?

தமிழகத்தின் ஊழலை ஒழித்துக்கட்ட பாரதப்பிரதமர் மோதியின் நடவடிக்கை என்று ஊடகங்கள் வேண்டுமானால் இக்காட்சிகளைக் காட்டி தங்கள் ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் மோதியின் நோக்கம் அதுவல்ல. எங்கெல்லாம் பிஜேபி வீக்காக இருக்கிறதோ அங்கெல்லாம் மோதி மஸ்தானின் இந்திர ஜால வித்தைகளாக இவை
அரங்கேறுகின்றன. இப்படி சொல்லவதற்காக தமிழகத்தில் ஊழல் நடக்கவில்லை என்றோ அல்லது தமிழக அரசியல் வாதிகள் கறைப் படியாதவர்கள் என்றோ பொருளல்ல.
இம்மாதிரி காட்சிகள் அரங்கேறும் போதெல்லாம் சில ப்ளாஷ்பேக் காட்சிகளும் சேர்ந்தே ஓடுகின்றன.
இரண்டு காட்சிகளையும் பார்க்கும் போது மட்டுமே
மோடி மஸ்தான் காட்டும் வித்தையின் அபாயம் புரிகிறது
.
காட்சி 1)
மோடி அவர்கள் குஜராத்தில் முதல்வராக இருந்தப் போது
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுயைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், இதன் வர்த்தக மதிப்பு 40 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமானதென்றும், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் எரிசக்தி தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருப்பதாகவும், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அப்படுகையில் 2007-இல்எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடுமென்றும்” அதிரடியாக அறிவித்தார்.
இன்றுவரை ஒரு கன அடி எரிவாயு கூட எடுக்கவில்லை .. ஆனால் 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடியவுள்ள ஏழே ஆண்டுகளில், 19,720 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக உருவிக் கொண்டுவிட்டது.

காட்சி 2)
2014- 15 நிதியாண்டில் பிஜேபி வளர்ச்சி நிதி அல்லது டொனேஷன் என்ற பெயரில்  வாங்கி இருக்கும் தொகை : 437. 35 கோடி. மற்ற கட்சிகளின் வசூல் தொகையுடன் ஒப்பிடும் போது பலமடங்கு அதிகம். அதிலும் இவர்களுக்கு இத்தொகையைக் கொடுத்த மிக முக்கியமான நிறுவனம் சத்தியா எலெக்டோரல் டிரஸ்ட்.
(Satya Electoral Trust) 25 Oct 2013 ல் டில்லிடில் திடீரென முளைத்த அரசு
சார்பில்லாத நிறுவனம் இது.
 இவர்களின் வேலை என்ன என்று ஆராய்ந்துப் பார்த்தால்
அரசியல் கட்சிகளுக்கு டொனெஷன் கொடுப்பதுதான் மிக முக்கியமான வேலையாக தெரிகிறது. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் வருகிறது?
இது என்ன வித்தை ? என்று ,மோடி மஸ்தான் தான் சொல்ல வேண்டும்.

அனைத்து மாநிலக் கட்சிகளையும் கறுப்பு பண ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு கழுத்துக்கு மேல் அதிகாரத்தின் கத்திகளைத் தொங்கவிட்டிருக்கிறார்.
இதிலிருந்து எவரும் தப்ப முடியாது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது
ஆகப்பெரும் செயலாக தெரிகிறது. ஆனால் வலை விரித்திருப்பது ஊழல்
ஒழிப்புக்கு மட்டுமல்ல.. ஊழலை செய்கின்ற ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கூட தனக்கானதாகவே வைத்துக்கொண்டுவிட்டால் ஆபத்தில்லை என்று
நினைக்கும் அதிகாரத்தின் வேட்கை இது.

அரசியலில் மோடி மஸ்தான்  வித்தைகள் காட்ட நினைக்கும்
அதி புத்திசாலித்தனம் ரொம்பவும் ஆபத்தானது.


2 comments:

  1. இதுவெல்லாம் எங்கே போய் முடியுமோ...

    ReplyDelete
  2. புதிய பூதங்கள். அல்லது பழைய பூதங்கள் இப்போதுதான் கண்ணில் படுகின்றன!

    ReplyDelete