Saturday, September 17, 2016

பெரியார் என்னை மன்னிக்க வேண்டும்.



இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள். 
அவரைப் பற்றி  சில துளிகள்:
***
நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம்
நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி
- தந்தை பெரியார் 1950ல் சென்னை ராபின்சன் பூங்காவில்
நடைபெற்ற கூட்டத்தில் பேசியது.
**
தந்தை பெரியார் என்று சொன்னவுடனேயே அவர்
நாத்திகர், கடவுள் மறுப்பாளர் என்ற அடையாளம்
மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. அவர் கடவுள் மறுபாளர் தான்.
அவருடைய நாத்திகக்கொள்கை மேற்கத்திய நாடுகளின்
நாத்திகக்கொள்கை போல முழுக்கவும் அறிவியல்
சார்ந்தது அல்ல. மனித நேயம் சார்ந்தது .
***
திரு.வி.க தமிழறிஞ்ர். அவர் நடத்திய பத்திரிகைகளின்
பெயர் நவசக்தி, தினசரி... (சம்ஸ்கிருத சொற்கள்)
பெரியார் தமிழறிஞரில்லை. அவர் நடத்திய பத்திரிகைகளுக்கு
விடுதலை, குடியரசு . உண்மை ... என்று தமிழில் பெயர் வைத்தார்.
**
பெரியார் இந்துமத அடையாளங்களை எதிர்த்தவர். ஆனால்
அவர் தான் திரு.வி.க தன் இல்லத்தில் தங்கியிருந்தப் போது திரு வி க நீராடி முடித்தவுடன் கைகளில் விபூதியுடன் காத்திருந்தார் பெரியார்.. திரு.வி.க குளித்தவுடன் விபூதி பூசுவார் என்பதால்.
பெரியார் குன்றக்குடி அடிகளார் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரை "மகாசந்நிதானம் அவர்களே " என்றே அழைத்தார்.
***
16-6-1968ல் நடந்த அன்பரசியின் காதுகுத்து விழாவில்
பெரியார் பேசுகிறார்:
"பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக்கும்
பலவித சடங்குகளைச் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான்
இந்த காதுகுத்தும் சடங்கு"
(இம்மாதிரி எல்லாம் ஒரு தலைவர் பேசுகிறார் தன்
தொண்டர்களின் வீட்டு நிகழ்வுகளில் தலைமை ஏற்று...!!)
***
பெரியார் நடத்தும் கூட்டங்களில் நூல் விறப்னைக்கு கடைகள் போடுவார். அவரே மற்றவர் நூல்களையும் மலிவு விலையில் அச்சில் கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கூட்டத்திலும்
தன் பேச்சின் தொடக்கத்தில் "நூல் அறிமுக உரை " ஆற்றுவது அவர் வழக்கம். இதைப் போல வேறு எந்த தலைவரும் செய்திருப்பதாக
நான் கேள்விப்படவில்லை.
***
வருடத்தில் 365 நாட்களில் 220 நாட்கள் அவர் கூட்டங்களில் பேசி இருக்கிறார். தன்னுடைய 95 வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தக் க்டைசி 3 மாதங்களில் கூட 42 கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்ருடைய உரைகளைத் தொகுத்து
ஆடியோ கேசட்டில் பதிவு செய்து நிறுத்தாமல் தொடர்ந்து ஓடவிட்டால் இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் பேச்சு தொடர்ந்து ஒலிக்கும்.உலகிலேயே தன் கொள்ளைப் ப்ரப்புக்காக அதிகம் பேசியவர்,
அதிகம் பயணித்தவர் இந்த நூற்றாண்டில் தந்தை பெரியார் தான்
என்று அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ.
***
பிற்சேர்க்கை...
தந்தை பெரியார் என்னை மன்னிக்க வேண்டும்...
தந்தை பெரியாரின் இத்தனை வீச்சுகளையும் திராவிட அரசியலில் ஓட்டு வங்கியாக மாற்றியதில் வெற்றி கண்டவர் திமுகவை தோற்றுவித்த அறிஞ்ர் அண்ணா அவர்கள்.
பெரியாரையும் அண்ணாவையும் கவசமாகவும் வாளாகவும் வைத்துக்கொண்டு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியதில்
மகத்தான வெற்றி பெற்றிருப்பவர்
டாக்டர் கலைஞ்ர் மு. கருணாநிதி அவர்கள்.
காலம் கேட்கும் கேள்வி:
இந்த சாம்ராஜ்யம் யாருக்கானது ?

No comments:

Post a Comment