Saturday, February 20, 2016

நீங்கள் தேசத்துரோகியா..?



நீங்கள் மனுவிரோதியா?
பரவாயில்லை.
நீங்கள் நாத்திகவாதியா..?
அதனால் என்ன? இந்துமதம் நாத்திக வாதத்தை
ஏற்றுக்கொள்கிறது என்று இந்துமத காவலர்கள்
அடிக்கடி சொல்கிறார்கள்.
அதனால் பாதகமில்லை.
நீங்கள் பெரியாரிஷ்டா..?
ஒகே ஓகே..
ஸ்ரீ இராமனுஜம் நமஹ.
நீங்கள் அம்பேத்கர்வாதியா?
ஓ அதனால் என்ன? பேஷ் பேஷ்..
கடவுள் முன்னால் அனைவரும் சமம்.
ஒன்றும் பிரச்சனை இல்லை.
நீங்கள் மார்க்சியவாதியா..?
அப்படினா என்னனு கேட்டு வைக்காதிங்க.
ப்ளீஸ்.. என் தோழர்கள் அனைவரும்
தங்களை மார்க்சிஸ்ட் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு அவர்கள் ரொம்பவும் முக்கியம்.
அவர்களிடம் என்றாவது தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் விடுமுறை
இருந்தால் பேசிப்பாருங்கள்.
அற்புதமாக விளக்கம் தருவார்கள்.
எனக்கு அவ்வளவு நேரமில்லை.
சரி.. இப்படி நீங்கள் யாராக இருந்தாலும்
எதைப் பற்றி எவரைப் பற்றி விமர்சித்தாலும்
நீங்கள் தேசத்துரோகிப் பட்டியலில் வரமாட்டீர்கள்.
நீங்கள் மோடியை விமர்சிக்கலாம்.
சங் பரிவாரை விமர்சிக்கலாம்.
பிஜேபி அரசியல் கட்சியை விமர்சிக்கலாம்.
அதிமுக - ஜெ , மகாமகம் இப்படி எதைப் பற்றி
வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
சுபாஷ் சந்திரபோஷ் விமான விபத்தில் இறந்துப்போனாரா
அல்லது
ரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தாரா?
இது சம்பந்தமான ஆவணங்களைத் தேடி அலைந்து
எந்தமாதிரியான முடிவுக்கும் நீங்கள் வரலாம்.
அத்ற்கெல்லாம் உங்களுக்கு உரிமை உண்டு.
காஷ்மீர் பிரச்சனையில் அருந்ததிராய் மாதிரி பேசலாம்.
அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.
ஆனால்...
இந்திய திருநாட்டில் ..
சமூகத்தில் தாழ்த்தப்பட்டவன்/பிற்படுத்தப்பட்டவன்/ ஆதிவாசி
இவர்கள் எவரும் இசுலாமியர்களுடன்  சேர்ந்து குரல்
கொடுத்தால் அவன் "தேசத்துரோகி".
இந்தக் கூட்டணி எப்போதும் கூடாது என்பதில்
இந்துத்துவவாதிகள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிதான் இந்துத்துவவாதிகள் மகாத்மா காந்தியுடன்
கை குலுக்கும் இடம்.
ஆட்சி, அதிகாரம் , நாற்காலி இத்தியாதி எதற்காகவும்
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள்
சமரசம் செய்து கொள்ளவே மாட்டார்கள்.
அகில இந்திய அளவில் பிஜேபி தோற்றுப்போன
மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக
கவனித்தால் இன்னும் சில அல்ஜீப்ரா கணக்குகளுக்கு
விடை கிடைக்கும்.



No comments:

Post a Comment