Friday, November 3, 2023

பத்தமடை... நீங்கள் மறப்பது ஏன்?

 பத்தமடை. -

ஏன் சொல்லப்படவில்லை?
சொனனா அந்தக்குளத்தின் பெயரும் சொல்லியாக
வேண்டும் என்பதாலா?
அடேங்கப்பா.. ஒரு குளத்துக்கே
இவன் பெயரா!
அப்போ இவன் அந்த ஊரில்
யார்?
இதெல்லாம் தெரியவரும்.
பத்தமடை என்றால்
பத்து மடைகள் கொண்ட ஊர்.
மடை என்பது ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில்
தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்டிருக்கும் வழி.
இந்த வழியை கதவு கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள்.
மடையின் கதவு திறந்துவிட்டால்,
'மடை திறந்த வெள்ளம் போல' தண்ணீர் வெளியேறும்.
ம்ம்ம்ம்...
பத்தமடை என் சொந்த ஊர்.
இப்போதும் வீடு இருக்கிறது.
(கதவுகள்தான் பூட்டி இருக்கின்றன!)

பத்தமடை என்றவுடன் ' பத்தமடை பாய் '
என்பதோடு பத்தமடை வரலாற்றை
எழுதி முடித்துவிடுவார்கள்.
ஆனால் பத்தமடை பெயர்க்காரணத்தை
மறந்தும் பேச மாட்டார்கள்.
ஊர்ப்பெயரிடுகையில் 'மடை' என்ற நீர்மேலாண்மை
கொண்ட ஊர்ப்பெயர்களில்
யாரும் ஏன்
பத்தமடை குறித்து அறிந்திருக்கவில்லை!
அந்த பத்துமடைகளுக்கு
எந்தக் குளத்திலிருந்து நீர் வெளியேறியது
என்பதையும் சொல்லியாக வேண்டும் என்ற
கட்டாயம இருப்பதால்
அதைச் சொல்வதில் அவர்களுக்கு
சங்கடமிருப்பதால்
பத்தமடையை சொல்லாமல் விட்டுவிடுகிறார்களோ..
தெரியல.

அவர்கள் சொல்லாவிட்டால் என்ன?
நாம சொல்லிடுவோம்.
அந்தக் குளத்தின் பெயர்
"பறையன் குளம்"


பிகு: பத்தமடை திரு நெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி
அருகில் இருக்கும் ஊர். பத்தமடை "பாய்" உலகப்புகழ் பெற்றது.

2 comments:

  1. பத்தமடைப் பாய் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். பத்துமடை, பறையன்குளம் என்பதெல்லாம் புதிய செய்திகள். அருமை. நன்றி.

    ReplyDelete
  2. புதிய செய்தி

    ReplyDelete