Friday, August 26, 2022

இலக்கியப்புண்

 இலக்கியப்புண்

---------------------------------

இலக்கியப்புண் சீழ்ப்பிடித்து

நாற்றம் எடுக்கிறது.

அதிலிருந்து எட்டிப்பார்க்கின்றன

இலக்கியப்பீடங்களின் 

முட்டைகள் பொறித்த 

அதிகாரக்குஞ்சுகள்.


செம்மொழியின் கொரொனா தொற்று

கைகழுவி கழுவி 

துடைத்துக் கொள்கிறேன்.

முகக்கவசம் மாட்டிக்கொள்கிறேன்.

மூச்சு முட்டுகிறது.

சுவாசிக்க முடியவில்லை.


கனவிலிருந்து விழிக்கும்போது

எம் குடிசைகளில்

அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கும்

குழந்தைகளிடம்

கவிதையின் சாயல்.

கொரொனாவாவது மயிராவது!

முகக்கவசத்தை எடுத்து தூர வீசிவிட்டு

அச்சமின்றி சுவாசிக்கிறேன்.

ஹஹா…

காற்று உனக்கானது மட்டுமல்ல..


ரத்தம் வடியும் காயத்தில்

என் ஆத்தாக்கிழவி

காளியாத்தா

எச்சில் துப்பி

தெருப்புழுதியை எடுத்துப் பூசுகிறாள்.

பீடங்கள் சரிகின்றன.

டண் டணக்கா..

டணக்க்கு டக்கா.

டண் டணக்க்கா..

இனி என்ன…!?

இலக்கியச் சிறைவெளி உடைகிறது.

ஆடுவோமே பள்ளிப்பாடுவோமே

டண்டணக்கா

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே

ஆன்ந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

ஆடுவோமே நாம் பாடுவோமே1


டண் டணக்கா

டணக்கு டக்கா.

டண் டணக்கா..

ஹேஹே 

டண் டணக்கா..

காளியாத்தா தாம்பூலம் சிவக்கிறது.

டண் டணக்கா..

1 comment: