Monday, March 8, 2021

வம்பாயில (பம்பாயில) வாக்கப்பட்டு......

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்ப

தேன் வந்துப் பாயுது காதினிலே…’


வாஷிங்க் மிஷுனு, கொடுக்காக.

சிலிண்டர் கொடுக்காக

மின்சாரம் கொடுக்காக

கைபேசி கொடுக்காக

அதில பேசிட்டே இருங்கனு  wifi கொடுக்காக.

ரேஷன்ல அரிசி பருப்பு சீனி சர்க்கரை

எல்லாம் தான் கொடுக்காக.

கவலை இல்லாமல் அடுப்பை பத்தவைக்க

சிலிண்டரும் கொடுக்காக.

டாக்டர் செக்கப் செய்வாகளாமே.

ஆத்தாடி.. அப்போ டாக்டரு எழுதற

மருந்து மாத்திரையும் கொடுக்காமலா

இருப்பாக!

காலை நீட்டு வூட்ல இருந்துக்கிட்டு

சீர்யல் பாக்கறதுக்கு டிவியும்ல கொடுக்காக.

இதெல்லாம் காணாதுனுட்டு

கைச்செலவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு

அள்ளிக்கொடுக்கப்போறகளே..


அடி ஆத்தா..

இந்த வெம்பாயில(பம்பாயில) வந்து 

வாக்கப்பட்டு

என்னத்தைக் கண்டேன்?

எதாச்சும் பஞ்சு மிட்டாய் கொடுக்கக் கூட

வக்கத்த ஊர்ல குடித்தனம் நட த்தி

வீணாப்போயிட்டேனே..   

என் மக்கா…

எதுக்குய்யா.. இங்க கிடந்து இந்தப்பாடு

படனும்..

காலு மேல காலுப்போட்டு நம்ம

ஊர்ல ராசா மாதிரி ராசாத்தி மாதிரி

இருக்கறதை விட்டுட்டு..

இது என்னய்யா.. பம்பாயி..

செந்தமிழ் நாடெனும் போதினிலே

இன்பத் தேன் வந்துப் பாயுது

பாயுது பாயுது பாயுதுடே…

 

.

 

No comments:

Post a Comment