Tuesday, April 29, 2014

தொட்டிச்செடி






வீடுகளை விட்டு வெளியில் வந்தாக வேண்டும்
அலங்கார வளைவுகளுடன்
எப்போதும் பளிச்சென இருக்கும்
வீடுகளின் அடையாளங்களைத் தொலைத்து
வெளியில் வந்தாக வேண்டும்.


குளிரூட்டப்பட்ட அறைகள்
மெத்தென்ற படுக்கை
தரை எங்கும் காஷ்மீரின் கார்பெட் விரிப்பு
சுவர்களில் தொங்கும் பெருமுலைக்காரிகள்
கண்ணாடியில் நிர்வாணத்தை ரசிக்கும் குளியலறை
இந்த அலங்காரங்கள் களையாத 
வீட்டின் கதவுகளைத் தாண்டி
வந்தாக வேண்டும்.
ஒப்பனைகளைக் கழற்றிவைத்துவிட்டு
நானும் என் கவிதையும்.


வனங்களை எரித்து மாளிகைக் கட்டியவர்கள்
எப்போதும் அறிந்ததில்லை
அவர்கள் இல்லங்களை அலங்கரிக்கும்
தொட்டிச்செடிகளின்  துயரங்களை.
கொஞ்சம் கொஞ்சமாக பச்சையம் இழந்து
செத்துக் கொண்டிருக்கின்றன
தொட்டிச்செடியின் இலைகள்
என்னைப் போலவே.


No comments:

Post a Comment