Friday, April 15, 2022

தப்பு தாளங்கள் இளையராஜா




மோதி, அம்பேத்கரைப்பற்றி பேசிய பிறகுதான் இளையராஜாவுக்கு அம்பேத்கர் பேசியிருப்பதே தெரிய வந்திருக்கிறது!!!


/நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது./ ( இ. ரா எழுதியிருப்பது)


இளையராஜா அம்பேத்கரை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.


அடுத்து... இந்த நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இளையராஜாவுக்கு எதுவும் தெரியவில்லை அதனால்தான் இ.ரா


/" தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் 'மேக் இன் இந்தியா' கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பில். சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது' /( இ. ரா. எழுதியிருப்பது)

என்று எழுதுகிறார்.


அதாவது அம்பேத்கரையும் அறிந்திருக்கவில்லை. மோதி பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதெல்லாம் ஒரு இந்தியக் குடிமகனுக்கு பெரிய குற்றமல்ல ஆனால் எதுவும் தெரியாமல் எதற்காக இளையராஜா இந்தப் புத்தகத்திற்கு அறிமுகம்/ அணிந்துரை எழுதியிருக்கிறார்???


ஏ. ஆர் . ரஹ்மானை எதிர்ப்பதற்கு இளையராஜாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வலையில் தேவையில்லாமல் இளையராஜா மாட்டிக் கொண்டிருக்கிறார்.


இசை கச்சேரிகள் மேடைகளில் பாடகர் ராகம் தவறிவிட்டால் அது யாராக இருந்தாலும் இளையராஜா அவர்களைத் திருத்துவார். சரியாகபாடவும்  வைப்பார். இப்போது???!!!

தனக்கு தெரியாதவர்களைப் பற்றி தான் அறியாதவைகளைப்பற்றி ... எப்படி எழுத துணிந்தீர்கள்! 

தப்பு தாளங்கள்..

1 comment:

  1. போடா போடா..புன்னாக்கு!பாட்டுதான் நினைவுக்கு வருது தோழர்.

    ReplyDelete