Thursday, December 23, 2021

தாராவியில் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே மேடையில்

 


தாராவியில் தந்தை பெரியாரும்

பாபாசாகிப் அம்பேத்கரும் ஒரே மேடையில்
இளைஞர் அண்ணாவுடன்..
07 ஜனவரி 1940
நம்மில் பலர் பிறக்கவில்லை.
அன்று மாலை அண்ணல் அம்பேத்கர் அளித்த
தே நீர் விருந்தில் பத்திரிகையாளர்களையும்
பம்பாய் அமெம்பிளி மெம்பர்களையும் சந்தித்த
தந்தை பெரியாரும் அம்பேத்கரும் நேராக
அங்கிருந்து புறப்பட்டு தாராவிக்கு 7 மணிக்கு வந்தார்கள்.
தாராவியில் மாபெரும் பொதுக்கூட்டம்.
பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில்
நடந்த அக்கூட்ட த்தில் தன் தலைமை உரையில்
அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பதை தனக்கு கிடைத்த
மாபெரும்பாக்கியம் என்றும் தம் வாழ்க்கையில்
தொடர்ந்து பெரியாருடன் கருத்தியல் தளத்தில்
இணைந்து செயல்படுவேன் என்று பேசினார்.

இந்த மேடையின் இன்னொரு சிறப்பு
அண்ணல் அம்பேத்கரின் பேச்சை
அண்ணா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.
அதே கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை
அங்கு வந்திருந்த தமிழரல்லாதவர்களுக்காக
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் அன்றைய
இளைஞர் அண்ணாதான்.
இப்படியாக தாராவியில் ஒரு கருத்தியல்
கூட்டணி உருவானது.
மும்பை தமிழர்கள் வாழ்க்கையில் இன்றும்
தொடர்கின்றன இக்கூட்டணியின் எச்சங்கள்.
அதில் ஒரு துளியாய் நானும்..
இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள்.
24 டிசம்பர்

1 comment:

  1. நானும்...
    சிவப்பு,கருப்பு,நீலக் கொடிகளை உயர்த்திப் பிடிப்போம்!
    மகிழ்ச்சி!பெருமையுடன்,
    -நா.முத்துநிலவன்

    ReplyDelete