Thursday, December 20, 2018

பேராசிரியர் அன்பழகனும் திமுக வும்

நேற்று எழுத வேண்டியதை இன்று எழுதுகிறேன்.
Image result for திமுக அன்பழகன்
உங்கள் பிறந்த நாளை இந்த ஆண்டு
கொண்டாடப்போவதில்லை,
யாரும் வாழ்த்த வேண்டாம்,
யாரும் நேரில் வர வேண்டாம் என்று
நீங்கள் சொன்ன சொல்லுக்கு
நான் மரியாதை கொடுக்கிறேன்.
உங்கள் உயிர்த்தோழரின் மறைவு..
நீங்கள் கடந்து வந்தப் பாதை
உங்கள் மவுன யுத்தங்கள்
உங்களின் பேசப்படாத பக்கங்கள்
உங்கள் புத்தகங்கள்…
உங்களின் காணாமல் போன இரண்டாம் இடம்..
அனைத்தையும் உன்னிப்பாகவும்
அக்கறையுடனும் கவனித்து வருகிறேன்.
1949 செப் 17 திமுக உதயம்
ஆனால் அதற்கு முன் அண்ணாவுக்கு
தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்த தயக்கம்..
உங்கள் கேள்வி அல்லவா அந்த தயக்கம்
நீக்கி.. திராவிட அரசியல் பாதையை
எழுப்பியது!
உங்கள் எழுத்துகளுக்கு தனித்தன்மை உண்டு.
ஓர் ஆய்வுக்கட்டுரை போல ஆரம்பித்து
தரவுகளை எப்போதும் எதிராளியிடமிருந்தே
எடுத்துக் கொண்டு நீங்கள் வீசும்
கணைகள்… உங்கள் கட்டுரைகள்.!.
தமிழர் திருமணமும் இனமானமும் என்ற
உங்கள் புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளும்
இன்றும் என் நினைவில் ...
50 ஆண்டு கால அரசியல் தோழமை 
கலைஞருடனான உங்கள் நட்பு என்பது
அவ்வளவு எளிதல்ல. 
கடினமான அந்தப் பாதையை
வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறீர்கள்..
பல்வேறு தருணங்களில் உங்கள் மவுனமே
உங்களுக்கு கவசமாகவும்
எங்களுக்கு எரிச்சலாகவும் இருந்திருக்கிறது…
கலைஞரின் சிலையை
நீங்கள் திறந்து வைத்திருந்தால்
அதுவே திராவிட அரசியலின்
சுயமரியாதையைக்
காப்பாற்றி இருக்கும்… 

இனி…
சொல்வதற்கு எதுவுமில்லை.
உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
#DMK_கலைஞர்


1 comment:

  1. செம கில்லாடி பேராசிரியர் அன்பழகன்
    தலைவர் கருணாநிதி பெரிய கில்லாடி
    இவர் அவருக்கே ஆப்பு அடிச்ச எமகாதக கில்லாடி

    ReplyDelete