Friday, November 9, 2018

செல்லாத பணம்

செல்லாத பணம் - இமையம்
நாவலுக்கான கதையும் களமும் சிறுகதையாவதும்
சிறுகதைக்கான கதையும் களமும் நாவலாக விரிவதும்பத்திரிகை வாசகர்கள் சார்ந்து நடக்கிறதா அல்லது
எழுத்தாளர்கள் சுயபரிசோதனை முயற்சியாக இதை எல்லாம்செய்கிறார்களா தெரியவில்லை. இன்று வாசித்த இமையம் எழுதிய
நாவல் “செல்லாத பணம் “ என் வாசிப்பு அனுபவத்தில் ஒரு சிறுகதைக்கான கதையும் களமும் கொண்ட துதான். ஆனால் ஒற்றை சம்பவத்தைமுன்வைத்து கதையின் மாந்தர்களும் அவர்களின் உணர்வுகளும்
உரையாடல்களின் வழி நகர்த்தப்படுகின்றன.
மகள் ரேவதி தீக்குளித்துஇறக்கும் தருவாயில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
போராடிக்கொண்டிருக்கிறாள். பெற்றோரின் விருப்பமின்றிகாதலித்து திருமணம் செய்து கொண்டவள். அவள் பி.இ. மெரிட்டில்
தேர்ச்சி பெற்றவள். ஒரு ஆட்டோக்காரனின் காதல் வலையில் விழுகிறாள்.
காதலுக்கு கண்ணும் இல்லை அறிவும் இல்லை என்ற நிலையில்அவள் முடிவு. மகளின் இந்த முடிவை அவள் அம்மா அப்பா அண்ணன்
அண்ணனின் மனைவியான அவள் தோழி இத்தனைக்கும் காரணமாக
இருக்கும் அவள் காதல் கணவன் ரவி.. எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.
தீப்பிடித்த மகள், ஜிப்மர் மருத்துவமனை என்று ஒரு புள்ளியில்ஒரு களத்தில் நடக்கும் கதை. சில உரையாடல்கள், நர்சுகள், காத்திருக்கும்
உறவினர்கள், என்று கதை ஒரே புள்ளியில் மீண்டும் மீண்டும் அழுதுக்கொண்டே
இருக்கிறது. நம்மையும் அழ வைக்கிறது.
கதையின் திருப்புமுனையே எல்லோரும் கொலைகாரன் என்று நினைக்கின்ற
ரேவதியின் கணவன் ரவி அருண்மொழியிடம் கேட்கும் கேள்விகள் தான்.
நான் அவளைச் சாகடிக்கவில்லை..
அவளைச் சாகடித் த து நீங்கள் எல்லோரும் தான் ..
ஆட்டோக்காரன்  பொண்டாட்டி என்று சொல்லி சொல்லியே அவளைச் சாகடித்தீர்கள்..
…. என் பொண்ணு ஆட்டோக்காரனுக்குத் தான் பொண்டாட்டியா போவா.
அது உங்களுக்கு வெக்கமா இருக்கும். ஒங்கள மாதிரி படிச்சவங்கவேலயில இருக்கிறவங்க மட்டும் தான் ஒலகத்தில உயிரோட இருக்கணும்,
மத்தவங்க எல்லாம் செத்துப் போவனும்…..”
இந்தப் பார்வை வாசகனை நாம் யோசிக்காத இன்னொருபுள்ளியிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கச் சொல்கிறது.
நம்மால் அந்தப் பார்வையின் கூர்மையை விலக்கி விட்டுஓட முடியாது.
இந்த நாவல் சமூக ஏற்றத்தாழ்வு கொண்ட ஆணும் பெண்ணும்யதார்த்த வாழ்க்கையில் எரிந்துப் போவதையும் அதை
ஒவ்வொரு தருணத்திலும் உறவுகள் பார்க்கும் பார்வையையும்
யதார்த்தமாக முன் வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்னிக்கு சாவக்கிடக்கும் போது ஓடி வரும் அண்ணனும்அப்பாவும் அன்னிக்கு அவக்கூட ஒரு வார்த்தை பேசி இருக்கலாமே என்று தாய் அமராவதி கேட்கும் போது பெண்கள் தான் எவ்வளவு மன அழுத்தங்களை
தங்களுக்குள் வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்கின்றார்கள்
உறவுகள் சமூகம் அந்தஸ்து என்ற போர்வைக்குள் நடுத்தர வர்க்கம்எப்போதுமே இழுத்துப் போர்த்திக்கொண்டு தங்கள் கிழிசல்களையும்
மறைக்க முடியாமல் அவஸ்தைப் படுகிறது.
அமராவதி, லட்சுமி, முருகன், நடேசன் இவர்கள் அனைவருமேநடுத்தர வர்க்கத்தின் முகங்கள்.
ரவி அவர்களில் ஒருவனாவது சினிமாக்காதலில் மட்டுமேகண்டு களிக்கும் காட்சியாக இருக்க முடியும்.
செல்லாத பணம் என்ற இத்தலைப்பு
காதல் செல்லாது , அச்சடித்த நோட்டு செல்லாது,
உறவுகள் செல்லாது, அழுகை செல்லாது,
பதவி செல்லாது, படிப்பு செல்லாது,
மருத்துவம் செல்லாது , மனிதன் அறிவு செல்லாது…
என்று பல “செல்லாததுகளை “ உள்ளடக்கி இருக்கிறது.
இப்புத்தகத்தின் துன்பியல் காட்சிகள்…
இக்கதையை இன்னொரு முறை மறுவாசிப்பு செய்யமுடியாதஅளவுக்கு மனப்பாரத்தை ஏற்றி விடுகின்றன.
இதுவே இந்த எழுத்தின் வெற்றியும்
இக்கதையின் பலகீனமும் என்று நினைக்கிறேன்.
இமையத்திற்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

1 comment: