Tuesday, November 8, 2016

அன்று மொரார்ஜி இன்று மோடிஜி

Image result for indian 10000 rupee note image

நேற்றிரவின் பரபரப்பு..
இன்னும் முடியவில்லை.
மோடிஜி அறிவிச்சாலும் அறிவித்தார் ...
போன் அழைப்புகள் பயமுறுத்திவிட்டன.
என்னவோ லட்சக்கணக்கில் பணம் வீட்டில் இருக்கிறமாதிரிதான்
என் கணவர் ஒரு பில்-டப் கொடுத்தார் பாருங்கள்...
அடுக்கி வைத்த கபோர்ட் வார்ட் ரோப் எல்லாம் புரட்டிப்போட்டு எனக்கு ஏகப்பட்ட வேலையை வைத்திருக்கிறார். (அதற்கு ஒரு நாள் இருக்கு... அவர் வாங்கிக்கட்டிப்பாரு)
அதைவிடுங்கள்... இப்படியாக அவர் தேடி எடுத்ததில்
சேர்ந்த மொத்த தொகை 3,017...!!!! அவர் தொகையை கையில் வைத்துக்கொண்டு இன்னும் அதிகம் டென்ஷனாகிவிட்டார்!!!
காரணம் வெறும்17 ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?
இந்த 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கும் 3000 இன்னும் 2 நாட்களுக்கு அவரை ரொம்பவும் பயமுறுத்தும்.
இந்தப் பயமுறுத்தலை இன்னும் அதிகப்படுத்திவிட்டான்
என் புத்திரபாக்கியம். இரவு ரிக்‌ஷாவில் வந்திருக்கிறான். ரிக்‌ஷாக்காரர் 500 ரூ நோட்டை வாங்க மறுத்துவிட்டார். மோதிஜி அதிரடி செய்தியை அறியாமல் வாய்ச்சண்டை... கீழிருந்து இண்டர்காமில் அழைத்து சங்கர் ஒடி
நான் இரவில் விழித்து என் கிட்சன் லாக்கரில் தேடி எடுத்து எப்படியோ 220 ரூபாயைக் கொடுத்துவிட்டோம்.
விளைவு..?!!
வறுமைக்கோட்டுக்கும் கீழே இந்த இரு நாட்கள் நம் தேச
நலனுக்காக வாழ்ந்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டோம்.
****
மோடிஜி இதற்கான தயாரிப்புகளை 6 மாதமாக செய்திருக்கிறார்.எண்ணிக்கையில் கால்வாசியாக இருக்கும் 500 & 1000 ரூபாய் நோட்டுகளின்
மதிப்பு மொத்த பணமதிப்பில் 86%. இத்தனையும் மொத்தமாக வங்கி, போஸ்ட் ஆபிஸ் மூலமாக ரிசர்வ் வங்கி கைக்குப் போக வேண்டும்.
இதற்கிடையில் இந்த 6 மாதத்தில் 86% பண மதிப்புக்கு ஈடான ரூ 50, ரூ 100, ரூ 2000 மதிப்பு நோட்டுகள் அச்சிடும் பணி ரகசியமாக நடந்திருக்கிறது. இந்த ரகசியம் அறிந்தவர்கள் பிரதமர் மோதிஜி, நிதிமந்திரி அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி இரு மேலதிகாரிகள்
மட்டுமே என்று சொல்லப்படுகிறது. 
**
Image result for morarji desai and modi

1978ல் ஜனதா கட்சியின் ஆட்சி . மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார். அப்போது 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுகள் இப்படித்தான் கறுப்புபணத்தை
ஒழிக்கும் செயலாக அதிரடி நடவடிக்கை எடுத்தார்கள். கறுப்பு பணம் ஒழியவில்லை. இப்போது மீண்டும் அதே நடவடிக்கை. ஆனால் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் ரூ 2000 மதிப்புள்ள நோட்டில் "சிப்" பொருத்தப்பட்டிருக்கும்
என்றும் அதனால் சாட்டிலைட் மூலமாக அந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கவனிக்கப்படும் என்றும் எவரும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைக்க
முடியாது என்றும் சொல்லப்படுகிறது. புழக்கத்திற்கு வந்தப் பின் தான் இதைப் பற்றிய
முழுமையான விவரங்களை அறியமுடியும்.
**
7ஆம் தேதி சுபமூகூர்தநாள். அன்று நடந்த திருமணத்தில் வந்த மொய்ப்பணம் 500, 1000 ரூ நோட்டுகளாகவே இருக்க
அந்த திருமண வீட்டார் அலறி அடித்து என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். ! அவர்கள் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கிறார்கள்!
நேற்றிரவே தங்கம் விலை கிராமுக்கு ரூ 3800 ஆகி இருக்கிறது ! (unofficial report) (38000 for 10 gms).
ரியல் எஸ்டேட் விலையில் சரிவு ஏற்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment