Tuesday, February 23, 2016

புதுமைப்பித்தன்


உலக சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில்
 நம் புதுமைப்பித்தன் தவிர்க்கமுடியாதவர் என்பது
அன்றும் இன்றும் என் அபிப்பிராயம். அவர் தழுவல் சிறுகதைகளுக்கு
எதிராக உரக்க குரல் கொடுத்தவர். ஆனால் அவருடைய 'புதிய ஒளி'
தொகுப்பில் 5 சிறுகதைகள் மாப்பசான் கதைகளின் தழுவல்தான்
என்பது ஆதாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
இதெல்லாம் பு.பி. எனும் பிரம்மராக்ஷஷ் மீது எனக்கிருக்கும் மரியாதையை,
மயக்கத்தை  குறைத்துவிடவில்லை! (புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஷ்
எழுத்தாளர் ராஜ்கவுதமன் எழுதியிருக்கும் புத்தகம்)

புதுமைப்பித்தனிடம் மணிக்கொடி காலத்தில் சிறந்த 10 சிறுகதைகளைத்
தேர்வு செய்து புத்தகம் வெளியிடலாம் என்று சொன்னார்கள்.
அவர் உடனே தன்னுடைய 10 சிறுகதைகள் தான் அப்புத்தகத்தில்
இடம் பெறும் தகுதி பெற்றவை என்று சொன்னதாக ஒரு செய்தியை
அடிக்கடி எங்கள் பல்கலை கழக வளாகத்தில் பேசுவோம்.
எனக்கென்னவோ புதுமைப்பித்தனின் இந்த அசாத்தியமான
தன்னம்பிக்கை, (திமிர்...?!) ஆளுமை ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

No comments:

Post a Comment