Thursday, February 11, 2016

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை



பகலெல்லாம் குலைத்து குலைத்து
தொண்டை வற்றிப்போன நாய்கள்
சில இரவுகளில் தூங்குவதுண்டு.

வெளிச்சத்தில் சில நாய்கள்
ஒன்றை ஒன்று கடித்து குதறினாலும்
இருட்டில் கலவிக்குப் பிறகுதான் தூங்குகின்றன.

அயலவனைக் கண்டால் குரைக்கின்ற நாய்கள்
அபூர்வமாகிவிட்டன.
டைகர் பிஸ்கோத்துகளை பொறுக்கித்தின்னும் நாய்கள்
வீட்டுக்கதவுகளைத் திறந்துவிடுகின்றன

சில நாய்கள்
பிரியாணி பொட்டலத்தின் எலும்புத்துண்டுகளுக்காக
நட்சத்திர விழாக்களில்
மேடை ஏறுகின்றன.

அடிக்கடி எஜ்மானனை மாற்றிக்கொள்ளும்
நாய்களுக்கு
நன்றி என்பது அயல்மொழி ஆகிவிட்டது..

ஓநாய்களின் இரத்தவாடையுடன்
வாலாட்டுகின்றன் நாய்கள்.

நாய்கள் ஜாக்கிரதை என்பது எப்போதுமே
நாய்களுக்கு அல்ல.
நமக்குத்தான்.

No comments:

Post a Comment