Sunday, September 6, 2015

எழுத்தாளர் இமயமும் நீலிமாவும்




அரசியல் சமூகப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்படும் படைப்புகள் அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.
அவ்வகையில் அண்மையில் வாசித்த இரு புதினங்கள் மிகவும்
முக்கியமானவை. ஏனேனில் இக்கதைகளின் கருப்பொருள் கற்பனையோ பொழுதுப்போக்கோ அல்ல. சமகால் சமூக அரசியல் பின்புலமும் கருப்பொருளும் கொண்டு எழுதப்பட்டவை. 
கோட்டா நீலிமா ஆங்கிலத்தில் எழுதிய shoes of the dead
பெருகிவரும் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி பேசுகிறது.
 இன்னொரு புத்தகம் எழுத்தாளர் இமயம் தமிழில் எழுதிய சாவுச்சோறு.
தலித்திய கதைக்களத்தில் இன்றைய சாதி சமூகத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 

நீலிமா விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை
விவசாயிகளின் வாழ்வியலிலிருந்து விலகி ஒரு பார்வையாளராக ஓர் ஆய்வாளராக பார்க்கிறார். அப்பார்வை ஒரு மூன்றாம் மனுஷியின் பார்வை. அதனால் தான் விவசாயி கதை மாந்தரின் உணர்வுகளுக்குள் வாழ்வதும் அதை அனுபவிப்பதும் அவருக்கு சாத்தியப்படவில்லை.
ஆனால் பெண் கதை மாந்தர்களைக் கொண்டே  சாவுசோறு கதையை எழுதி இருக்கும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு
அப்பெண்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையும், அவர்கள் பிரச்சனையும் அழுகையும் பெருமூச்சும் அவருக்குள் இருந்து எழுதிச் செல்கின்றன.
படைப்பு ஓர் உன்னதமாகிவிடுகிறது இதனால் தான்.
ஆனாலும் நீலிமாவின் நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் எட்டி இருக்கும் பரந்துப்பட்ட வாசக தளத்தை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச்சிறந்த இக்கதை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே காரணத்தினால்
தமிழ்நாட்டுக்குள் மட்டுமே ..
பூங்கோதைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்கள் அல்லர்.
அவர்களின் பிரச்சனைகளும் தான்.
 (இரு கதைகளையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை புதியகோடங்கிக்கு அனுப்பி இருக்கிறேன்.)

No comments:

Post a Comment