Tuesday, July 13, 2010

கடல் - Sunanda Pradhan - Oriya poet


யுகம் யுகமாய்
கடல்பக்கம் திரும்பாத நான்
திடீரென ஒருநாள்
காற்றைக்கிழித்து நீந்தி
கடலுக்கு வந்தேன்
ஈரமானக் கனவுகளுடன்.

பொங்கும் காதல் மார்பில்
நிம்மதியாக தலைசாய்த்து
கடலைப் பார்க்கிறேன்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
எவ்வளவு காலம்?
தெரியாது.
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

தெரியவில்லை
என் எதிரில் நிற்பது
கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்வது
கடலா இல்லை நீயா?
நனைக்கும் ஈரத்திலிருந்து விலகி
ஆசைதீரக் கடலைப் பார்த்துக் கொண்டே
ஆனால்.. ஆனால்..
நீதான் அது!
ஏன் நடிக்கவேண்டும்
உன் குரல் கேட்கவில்லை என்று?

சின்ன நண்டுவைப் போல
ஓடினேன் கடலுக்குள்
புடவை மடிப்புகளைச்
சரிசெய்துக்கொண்டே
தயக்கமின்றி
இன்னும் இன்னும் ஆழமாய்...
உடலெங்கும் கொஞ்சி சீராட்டும்
கடல் அலைகள் தந்த
உணர்வுகளுடன்..

இதோ..
நானே அலையாகிவிடாமல்
வெளியில் இழுத்தாய்
அங்குமிங்கும் பார்க்கிறேன்
எங்கே..? காணவில்லை உன்னை!
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
கடற்கரைமட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய்
சின்னப்புள்ளியாய்..

------------

No comments:

Post a Comment