Wednesday, May 7, 2025

கவரி மா ? கவரிமான்

 



தான் நேரில் பார்க்காத கவரிமா குறித்து திருவள்ளுவர் பேசுவது ஏன்?

 

தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய வெளி அதன் முதற்பொருள் தெற்கே குமரியும் வட எல்லை வேங்கடமும் தாண்டி விரிகிறது. அந்தக் குதிரைப் பாய்ச்சலில் தமிழ்மண் அறியாத கருப்பொருள்களும் இடம்பெறுகின்றன. காரணம் அக்கருட்பொருட்கள் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளி அறிந்ததும் அதைப் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்பதும் தெளிவாகிறது.


உண்மையில் கவரிமான் என்கிற மான் வகை தமிழ் நாட்டில் உள்ளதா?

இல்லை…


காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்.


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் "

(அதிகாரம்:மானம் குறள் எண்:969)


பொழிப்பு: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.


கவரிமா என்பது என்ன?

கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. பனி மலையில் வாழும், எருமைபோல் தோற்றமுள்ள, யாக்(Yak) என்று அறியப்படுவதையே கவரிமா என்று இலக்கியங்கள் குறிப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


இதன் உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்று சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா ஆகும். இமயமலையில் வாழும் இந்த விலங்கு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரைத் தாங்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிட்டார் என்பது அறிஞர்களின் கூற்று.


கவரி இமயமலையில் வாழ்கின்ற விலங்குகளில் ஒன்று என்பதற்கு புறநானூற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் சான்று பகர்கின்றன.


நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,

குவளைப் பைஞ் சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்

வடதிசை யதுவே வான்தோய் இமயம்(புறநானூறு: 132) இதில் இமயமலையில் வாழும் கவரி என்ற குறிப்பு உள்ளது.

மேலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்திய பாவில் கவரியைக் குறிப்பிடுகிறார்:

(பதிற்றுப்பத்து 11:21 – 24)


மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் இவர்கள் அனைவரும் கவரிமா என்றனர். பரிதியார் அதைக் கவரிமான் என்று தம் உரையில் கூறினார். மு.வை.அரவிந்தன் 'காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்!' என்கிறார்.


மணக்குடவர் 'ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார்' என்றும்

பரிதியார் 'ஒரு மயிர் சிக்கினால் பிராணனைவிடும் கவரிமான் போல' என்றும் காலிங்கர்: தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின் மானித்துப்பின் உயிர் வாழாது. அம் மயிர் துவக்குண்ட இடத்துநின்று, வற்றிவிடூஉம் கவரிமா அன்ன' என்றும்

பரிமேலழகர்: தன் மயிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார் என்றும் உரை கூறினர்.

வ சுப மாணிக்கம் 'மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர்' என்று தன் உரையில் 'பறிப்பின்' என்ற சொல்லை ஆள்கிறார்.

‘மயிர்’ என்று திருவள்ளுவர் பொதுவாகவே கூறியுள்ளார். ஆனால், பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரு மயிர் என்றே பொருளுரைத்தனர்.


"காட்டில் வாழும் கவரிமான் தன்னிடமுள்ள நீண்டமுடியில் ஒரு முடி அற்று விழுந்து விடுமேயானால், அதற்கு மானம் பொறாமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இயல்புடையதாகும், இவ்வியல்பைத் தெரிந்த வேடர்கள் அம் மான் செல்லும் வழியில் அடர்ந்த முள்ளைக் கொண்டு போட்டிருப்பார்களென்றும் கவரிமான் அவ்வழியாகச் செல்லும்பொழுது அதன் நீண்ட முடி அம்முள்ளில் சிக்கிக் கொள்ளுமென்றும் அவ்வாறு சிக்கிக் கொண்டமுடி சிதைந்தாலும் அறுந்தாலும் அம் மான் அவ்விடத்திலேயே உயிர் துறக்குமென்றும் கூறுகின்றார்கள்." என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை.


குன்றக்குடி அடிகளார் "கவரிமான் என்பது மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்!" என்று குறித்துள்ளார்.


கவரிமா, மானம் மிக உடைய விலங்கு என்று கருதி ஒரு மயிரை இழந்த மானக்கேட்டால் அந்த இடத்திலேயே உயிர்விடுகின்ற இனம் என்று உரையாசிரியர்கள் மொழிந்தனர்.


 வள்ளுவருக்குப் பின் வந்த புலவர்களுள் திருத்தக்க தேவர் ‘மானக்கவரி’ (சிந் - 2120) என்றார்; கம்பர் ‘மானமா’ என்றார். புகழ்பெற்ற இப்புலவர் பெருமக்களும் கவரிமாவை மானத்துக்கு உவமையாகக் கொண்டனர். மேலும் வான்மயிர் துடக்கின் தானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரி என்று பெருங்கதை (35, 233, 4) கூறியது


வள்ளுவர் காலத்துக்கு முந்திய நூல்களான புறநானூறும் பதிற்றுப்பத்தும் கூறிய செய்திகளின் அடிப்படையில் கவரிமா என்றது இமயமலையில் வாழும் விலங்கு பற்றியே என்று முடிவு கொள்ளலாம். ஆனால் அது மயிர் நீங்கினால் வாழ இயலாது என்று வள்ளுவரே முதலில் கூறியதாகத் தோன்றுகிறது. கவரிமா ஒருமயிர் நீங்கினால் உயிர்விடும் என்று பெரும்பான்மையினரும், மொத்த மயிற்கற்றையும் உடலில் இருந்து போய்விடுவதால் உயிர் நீக்கும் என்று சிலரும் மயிர்க்கற்றை சிக்கினால் இறந்துபடும் என்று மற்றவரும் கூறியுள்ளனர். இவை எவற்றிற்கும் சான்றுகள் இல்லை.


தன் மயிர் உதிர்வதால் உயிர்விடுகின்ற விலங்கு இருக்க முடியாது; இது இயற்கைக்குப் பொருந்தாதது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவர்.


முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர், 

  பாலைமட்டுமே பிரித்து அருந்தும் நுட்பம் கொண்ட அன்னப்பறவை, 

சிங்கம் போன்ற உருக்கொண்ட யாளி, பெரும் உருவும் வலிவும் கொண்ட டைனோசர், முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர் போல காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம். எனவே மயிர் இழப்பால் உயிர் நீங்கிய கவரிமா என்றொரு விலங்கினமே கிடையாது என்று கூறமுடியாது.


திருவள்ளுவர் தமிழ்க்குடியின் மானமாக குடியியல் பேசும்போது தமிழ்க்குடியின் நம்பிக்கைகளை தன் குறட்பாவில் கையாண்டிருக்கிறார்.

💥💥💥💥

#கவரிமா_கவரிமான்

#புதியமாதவி_கவரிமான்.


Tuesday, May 6, 2025

வேங்கை வயல் வாழ்க்கை

 



'வேங்கைவயல் மலநீரில்

மிதக்கிறது வாழ்க்கை'

😭😭😭😭


அசிங்கத்தின் முகத்தை அடையாளம் காட்டுவது எளிது.

துரோகத்தின் கதையை அப்படியே எழுதுவதும் எளிது.

ஆனாலும் சில காலம்

என்னோடு வாழ்ந்த அதே முகம்.

என் கற்பனைக்கு எட்டாத 

அவள் காமக்கதைகள்

கிளுகிளுப்பு ஊட்டுபவை அல்ல.

வாழ்க்கையின் மீதும்

மனிதர்கள் மீதும்

உறவுகளின் நம்பிக்கை மீதும்

அவள் எறிந்த மலம்.

நான் சமைத்து ஊட்டிய

அன்னத்தின் கழிவு தான்,

என்றாலும்

அதை இனி பரிமாற முடியுமா?

வேங்கைவயல் மலநீரில்

மிதக்கிறது வாழ்க்கை.

அதைக் குடித்த அவள் புதல்வர்களையேனும்

காப்பாற்றி ஆக வேண்டும்.

தேவி...

பிரத்யங்கார தேவி

நரசிம்மி

அதர்வண காளி

ஆயுதங்கள் வேண்டாம்.

கொலை வேண்டாம்.

பழிக்குப் பழி வேண்டாம்.

எங்கள் அனாதைப் பிள்ளைக்கு சப்த கன்னியாய்க் கூட

நீ வர வேண்டாம்.

உன் மீதும் என் மீதும்

நம் புதல்வர்கள் மீதும்

நிர்வாணப்படுத்தி

வாயில் திணிக்கப்பட்ட

மூத்திரமும் மலமும்

முழுதுமாக துடைத்து எடுக்க

பராசக்தி....

உன் சிவப்பு முந்தாணியைக்

கிழித்துக் கொடு.

அது போதும்..தேவி

அதுபோதும்.

🔥🔥🔥🔥🔥


It is easy

to point out the face of disgrace.

It is just as easy

to write the tale of betrayal as it is.

Yet, for a while,

it was the same face that lived with me.

Her tales of lust,

beyond the reach of my imagination,

are not titillating stories—

they are filth hurled

at life,

at humanity,

at the trust between relationships.

What she discarded

was the very rice I cooked and fed her.

Yet—

can it ever be served again?

Life now floats

in the sewage of Vaengaivayal.

At least,

her children who drank from it—

must be saved.

Devi...

Pratyangira Devi,

Narasimmi,

Atharvana Kali—

no weapons,

no killings,

no revenge for revenge.

Do not even come

as the chaste maiden

to our orphaned children.

Instead—

to wipe away entirely

the urine and feces

forced into our mouths,

into theirs—

yours, mine, and our children’s—

O Parasakthi,

just tear your red sari

and hand it to us.

That is enough, Devi.

That is enough.

#புதியமாதவி_30042025

#PuthiyamaadhaviPoems


இதையும் எழுதி புத்தகம் போடு

 "இதையும் எழுதி புத்தகம் போடு"


எழுத்துப் பயணத்தில்

மறுபிறவி.


ஃ உனக்கு கவிதை எழுதறது தவிர வேறு என்ன தெரியும்?


ஃ நீ ஒரு வேஸ்ட்.


ஃ நீ எழுதி கிழிச்சி என்னத்தைக் கண்ட?


இதெல்லாம்  பழகிப் போச்சு!

நேற்று நீ வாசலில் நின்று

என்னைக் கேட்ட கேள்வி..

"இதையும் எழுதி புத்தகம் போடு "


இதைச் சொன்ன நீயும் ஒரு பெண். ஒரு தாய். 

நான் எழுதியதும் போராடியதும்  உனக்காகவும் சேர்த்துதான்!


எனக்கு பூஜைகள் தெரியாது.

எவன் காலடியிலும் ஆன்மீகத்தின் பெயராலும் விழத்தெரியாது.

யார்க்குடியும்

கெடுத்ததில்லை.

இதெல்லாமே எளிதாகிப் போன உன் கூட்டத்திலிருந்து

வீசப்படும் கற்களை

சேமித்து வைக்கிறேன்.

என் அன்னை

சாவித்திரிபாய்

என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.


பிறவியின் கருப்பை சுமந்த அக்னிக்குஞ்சு.

வலியோடும்

நிர்வாணத்தின் அலறலோடும்

பனிக்குடம் உடையும் தருணம்.

எழுத்தின் உயிர்த்துளி

ஜனனம்.


தேவி..

ஆதிபராசக்தி

கடைக்கண் திறக்கட்டும்.

உன்னை மறப்பதும் மன்னிப்பதும்

என் வசமில்லை.

மனிதர்கள் எழுதிய சட்டங்களை விட  வலுவானது

இப்பிரபஞ்சத்தின் சூத்திரக்கயிறு.


#புதியமாதவி_03052025


#puthiyamaadhavipoem

Tuesday, April 29, 2025

சாதியும் அரசு அதிகாரங்களும்

 சாதியும் அரசு அதிகாரங்களும்

🔥🔥🔥🔥









நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்

நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி

நம் அரசு சாதி காப்பாற்றும் அரசு 

- தந்தை பெரியார்.

“ இந்தியாவில் சாதி காற்றிலும் கலந்திருக்கிறது “ என்று  ரெய்ஸ்லி எழுதியது ஒரு சத்தியவாக்கு மூலம். 


“அந்த நாட்டில் (இந்திய நாட்டில்) மதத்தின் விதிகள், நாட்டின் சட்டங்கள், கெளரவ நெறிகள் ஆகியன எல்லாம் ஒன்றில் ஊன்றி இருக்கிறது. அந்த ஒன்று மனிதனை  நிலையாக என்றென்றைக்கும் தன்னோடு பிணைத்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் சாதி ‘ என்று இந்திய சமூகத்தை மிகச் சரியாக சாதி அடையாளமாக கண்டவர் எட்மண்ட் புரூக்.


தமிழ்ச் சமூகத்தில் சாதி என்ற சொல்  நம் சொல்லகராதியில் இல்லை என்றாலும் மேலோர், கீழோர் என்ற பாகுபாடுகளும் அவர்களின் வாழ்க்கை முறைகளும் சடங்குகளும் கொண்ட ஒரு சமூக நிலை உருவாகிவிட்டது என்பதை தொல்காப்பியம் பொருளதிகாரமும் பிற்கால சங்க இலக்கியப் பாடல்களும்  உறுதி செய்கின்றன. “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்ற திருவள்ளுவரின் வாசகத்தை நாம் தமிழரின் பெருமைமிகு அடையாளமாக சொல்லிக்கொண்டாலும் அந்த வாசகத்தின் உட்பொருளாக ‘பிறப்பொவ்வாமை’

என்ற நிலை வந்துவிட்டதையும் பிறப்பால் உயிர்களுக்கு இடையில் பிரிவினைகள் கோலோச்ச ஆரம்பிக்கும் காலத்தில்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றதொரு கலகக்குரலின் தேவை எழுகிறது என்பதையும் சேர்த்த வாசித்தாக வேண்டும்.

         சாதி எப்போது தோன்றியது என்பதை எவராலும் அறுதியிட்டு சொல்லிவிட முடியவில்லை. ஆனால் அது எப்படி இந்திய மண்ணில் காலூன்றியது என்பதை அரசியலும்  மானுடவியலும் ஆய்வு செய்திருக்கின்றன. சாதியை இந்திய மண்ணில் நிலை நிறுத்தியதில் “மனு’ முக்கியமானவர். அவர் எழுதிய ‘மனுதர்ம சாஸ்திரம் இன்றுவரை சாதியின் அறுபடாத கயிறாக இருக்கிறது. ‘ அதன் சரித்திரப் பூர்வமான தகுதி எதுவாக இருந்தாலும், இந்திய சமூகத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு அதனைச் செயல்படுத்துவது என்ற நோக்கில் இந்நூலுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிட்டிய சட்ட முக்கியத்துவம் அதற்கு முன்பிருந்த தகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு தகுதியை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்படுத்தியது. சாதியை மானுடவியலாக மட்டுமே அணுகும் வலதுசாரி பார்வையின் உள் நோக்கத்தை சாதியின் சமூக அரசியல் பார்வை வெளிப்படுத்தியது.

சாதி எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது ? சாதியை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி ? என்றாய்வு செய்தவர்கள் அனைவருமே சாதியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்திய அக மண உறவுகள், அதாவது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வது என்ற கருத்தையே முன்வைத்தனர். ஆண் பெண் உறவில் இயல்பாக ஏற்படும் காதலும் திருமண உறவும் கூட சாதியைக் காப்பாற்றும் வகையில் நவீன யுக காதலாகவே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதை கவிஞர் மீரா அவர்கள் கிண்டலாக எழுதினார். 

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்

வாசுதேவ நல்லூர்.

நீயும் நானும் ஒரே மதம்

திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்

வகுப்பும் கூட.

உன்றம் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக்காரர்கள்..

மைத்துனன்மார்கள்.

எனவே,

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடன்  நெஞ்சம் தாம்கலந் தனவே”

( குறும்புத்தொகை) 

. யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்.. என்றெல்லாம் பேசப்பட்ட  சங்க காலக் காதல் அல்ல இன்றைய காதல். 

இது  நவயுகக் காதல், வேறு  வகையானது.  சாதி மதம் வர்க்கம் எல்லாம் பார்த்துதான்  காதலும் வருகிறது. எனவேதான் சாதி ஒழிப்புக்கு காதல் திருமணங்களை வரவேற்போம் என்பதைவிட சாதி மறுப்பு திருமணங்களை வரவேற்போம் என்றார்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்.


சாதி மறுப்பு திருமண உதவிகள் :

சாதி ஒழிப்பைக் கருத்தில் கொண்டே அரசு சாதி மறுப்பு திருமணத்திற்கு உதவிகளை பல திட்டங்கள் மூலம் அறிவித்து செயல்படுத்துகிறது. அவற்றுள் முக்கியமானவை :

அம்பேத்கர் திட்டம்

டாக்டர் சவிதாபென் அம்பேத்கர் உதவி திட்டம்

டாக்டர் முத்துலெட்சுமி நினைவு திட்டம்


இத்திட்டங்களில் உதவி பெற மணமகன் – மணமகள் இருவரில் யாராவது ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. பொதுவாக இந்த உதவிகளைப் பெறுவதற்கு அரசு அதிகாரி யாராவது ஒருவரின் சான்றிதழும் தேவைப்படுகிறது. சில திட்டங்களில் உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது, சில ஆண்டுகள் இடைவெளிகளுடன் இரண்டாவது தவணை வழங்கப்படுகிறது.  தமிழ் நாட்டின் திட்டத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தனித்துவமானதும் சிறப்பானதுமாகும்.

அப்பெண் 10 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற விதி பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மட்டுமின்றி அப்பெண் எடுக்கும் முடிவுகளின் சுயத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்திட்டங்கள் அனைத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பணமாக வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட உதவித்தொகையாக மட்டுமே இருக்கிறன. 

உதவித்தொகைகளும் அதன் தேவையும் முக்கியமானது என்றாலும் சாதியை ஒழிப்பதில் அதன் பங்களிப்பு என்பது பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் இத்திட்டங்கள் எல்லாமும் தொலைநோக்குப் பார்வையுடன் உதவியதாக தெரியவில்லை. இன்றையை இந்தப் பொழுதை எப்படி கடந்து செல்வது என்பதாக மட்டுமே இருக்கின்றன.  திருமண வாழ்க்கை என்பது நிகழ்காலமாக மட்டும் இருப்பதில்லை. எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் எந்த உறவுகளும்  நிலைப்பதில்லை. நம் இந்திய சாதி சமூகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சமூகத்தின் ஆதரவோ குடும்பத்தின் ஆதரவோ இருப்பதில்லை. போராட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையின் நிரந்தரமான ஒரு பாதுகாப்பு வழங்கும் வகையில் திட்டமிட்டு சாதி மறுப்பு திருமண திட்டங்கள் தீட்டப்படவில்லை. அம்மாதிரியான ஒரு திட்டமோ யோசனையோ கூட இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான், இந்திய அளவில், பெரியாரின் மண் என்று போற்றப்படும் தமிழ் நாட்டில் சாதி மறுப்பு திருமண விகிதம் பிற 

மாநிலங்களைவிட குறைவு. ! மேலும் ஆணவக்கொலைகள் தமிழ் நாட்டில்

சாதி மறுப்பு திருமணங்களின் தலைகளின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் வெட்டரிவாள், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சாதியின் பெயரால் இங்கே நடக்கும்.. அதை எதிர்கொள்ள அரசு வழங்கும் சிறு தொகை உதவியோ தாலிக்கு கொடுக்கும் தங்கமோ காப்பாற்றிவிட முடியாது.

அப்படியானல் என்னதான் தீர்வு ?


உதவித்தொகையும் நடைமுறை சிக்கல்களும் :

2022- 23ல் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்தவர்கள் 2,873. 2018 முதல் 2023 வரை உதவித்தொகை விண்ணப்பித்தவர்கள் 12,846.  ( as per social welfare department) இதில் 10,349 விண்ணப்பதாரர்கள் பயன் அனுபவித்தவர்கள். அதாவது ஓராண்டுக்கு சற்றொப்ப 2000 பேர்,

     சாதி மறுப்பு திருமணங்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை அரசு கவனிக்க வேண்டும்.

உதவித் தொகை பெறுவதற்கு தேவையானவை என்று அரசு சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. அவை: 

1) திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2) திருமண சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

3) திருமண சான்றிதழ் முகவரியும் திருமணம் செய்தவர்களில் ஆண் பெண் யாராவது ஒருவர் முகவரியாக இருக்க வேண்டும்.

4) சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் தேவைப்படும்.

5) சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வேண்டும். அதை ரெவென்யு ஆபிஸிலே ஆன்லைனிலோ பெறலாம்.

6) மேற்கண்ட ஆவணங்களுடன் திருமணப் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.

7) இந்த விண்ணப்பங்கள் கிராமப்புற பஞ்சாயத்து துறை (Rural Development and Panchayat Raj Department) வழியாகவே அனுப்பப்படும்.

8) இத்தனைக்கும் பிறகு, சமூக நலத்துறை ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும். No Objection certificate !!!!!


இதெல்லாம் சரியாக இருந்தால், அதாவது இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் அரசு இதற்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு உதவி வழங்கும்.

இதில் நாம் கவனிக்க் வேண்டியது சாதி மறுப்பு திருமணங்களுக்கு சமூகத்தில் வரவேற்பில்லை என்பது மட்டுமல்ல, அதை மாபெரும் குற்றமாகவே கருதுகிறார்கள்/ இச்சூழலில்தான் பஞ்சாயத்திலிருந்து சான்றிதழ் பெற சொல்கிறது அரசு. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களில் குறிப்பாக பெண்கள் தங்கள் கல்வி சான்றிதழோ சாதி சான்றிதழ் பெறுவதோ ஆதார்/ரேஷன் அட்டையை வைத்திருப்பதோ இல்லை. நடைமுறையில்  இச்சிக்கல்கள் சாதி மறுப்பு திருமணம் செய்யும் பலருக்கு பலவிதமான பிரச்சனைகளை உருவாக்குகின்றன.  எனவே பலர் விண்ணப்பம் செய்வதில்லை.

எதிர்கால உத்திரவாதம்:

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவி செய்வதற்கென்று மாவட்டம்தோறும் காவல்துறையில் ஒரு தனிப்பிரிவு வேண்டும். அது அவர்களுக்குப் பாதுகாப்பு தருவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். 

 சாதிமறுப்பு திருமணங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை விட முக்கியமானது சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும், என்ற திட்டம். அதற்கான இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் .  அவ்வாறு அரசு வேலை ஒதுக்கீடு செய்யும்போது இருவரில் யார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவரோ அவருக்கு அரசு வேலை என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 

புதிய சாதி உருவாக்கம் :

கலப்பு மணங்கள் நடக்கும்போது அவர்களின் வாரிசுகள் புதியதொரு சாதியாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் நூற்றுக்கணக்கான சாதிகளும் சாதிகளுக்குள் இருக்கும் உட்பிரிவுகளும்  கலப்பு திருமணங்களால் உருவானவை. காரணம், எந்த வருணத்தினரும் வர்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் அதன்பின்  அவனும் அவனுடைய சந்ததியினரும் தங்களது பழைய வருணத்திற்குத் திரும்ப முடியாது. அவர்கள் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவர்களாகி விடுவார்கள். அதன்பின் அவர்கள் சமூகத்தின் பிற பிரிவனருடன் கலப்பதும் தடை செய்யப்பட்டுவிடும். இப்படியாகத்தான் வர்ணக்கலப்பு தடை செய்யப்பட்டதுடன், அவ்வாறு தடை செய்யப்பட்ட வர்ணம் தாழ்த்தப்பட்டவர்களாக ஊர்க்கோடியில் ஒதுக்கப்பட்டதும்  நடந்திருக்கிறது. சாதி மேல் கீழ் அடுக்குகளை மாற்றும் சிறிய அசைவுகளும் பெரும் தண்டனைக்குரியதாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு சாதி தனக்கும் கீழ் இன்னொரு சாதியை உருவாக்கி தன்னை ஆளப்பிறந்தவனாக நினைக்கும் மன நிலையை சாதி சமூகம் அனைத்து சாதியினருக்கும் அவரவர் படி நிலைக்கு ஏற்ப வழங்கி இருக்கிறது. எனவே, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் சந்ததிக்கு சாதி கிடையாது என்பதே சாதி சான்றிதழாக ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். 

     அரசு வேலையில் இருப்பவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பதும் அவர்களின் அடுத்த தலைமுறை சாதியற்ற தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுவதுமான சூழல் மூன்று தலைமுறைகளுக்குப் பின் சாதியை ஓட ஓட விரட்டிவிடும். 

சாதியும் பண்பாடும்:

    தமிழ்ச் சமூகத்தின் பண்பாடும் கலாச்சாரமும் கூட சாதி அடையாளமாகவே வெளிப்படுகின்றன. எனவே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் தந்தையின் சாதியாகவே சமூகத்தில் கருதப்படுகிறார்கள். ஆண்மைய சமூக நிலையும் இதற்கு சாதகமாகவே இருக்கிறது. இன்னும் சில இடங்களில், சாதி மறுப்பு திருமணம் செய்தல் என்பது சாதி ஒழிப்பாக மாறுவதில்லை. ஆண் பெண் இருவரின் யார் சாதி உயர்ந்த சாதியோ அந்தச் சாதியின் அடையாளங்களை தங்கள் வாரிசுகளின் சாதி அடையாளமாக காட்டும் போக்கு இருக்கிறது. சடங்குகள் பண்டிகைகள் வழிபாடுகள் நம்பிக்கைகள்  உணவு முறைகள் என்ற பல கலாச்சார அடையாளங்களில் சாதி மறுப்பு திருமண உறவுகள் மேனிலை ஆக்கத்தையே பின்பற்றுகின்றன.  சாதிய மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை சாதி ஒழிப்பு, சாதியற்ற வாரிசுகள் என்பதில் காட்டுவதில்லை. வேஷ பிராமணர்கள், தலித் பிராமணர்கள் என்று இவர்களை சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 


பண்பாட்டு அரசியல்:

   சட்டங்களால் மட்டுமல்ல, வலுவான பண்பாட்டு அரசியலும் சமூக பொது ஜன உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவை. தந்தை பெரியாரின் பகுத்தறிவும் சுயமரியாதையும் ஏன் அவர் முன்வைத்த கடவுள் மறுப்பும் கூட சாதி ஒழிப்பின் அடிப்படைதான். ஆனால் அதை மேனாட்டு நாத்திகவாதமாக மட்டுமே முன்னெடுத்து சென்றதால் பண்பாட்டு நிலையில் அதற்கான அசைவுகளைப் பெற முடியவில்லை. திராவிட அரசியல் தேர்தல் அரசியலின் காரணமாக  சமரசங்களின் ஊடாக தன் பண்பாட்டு அரசியலில் தோற்றுப் போய்விட்டதா? என்ற கேள்வி முன்பு எப்போதையும் விட இப்போது எழுகிறது. காரணம், இந்தியா இந்து தேசம், ஒரே தேசம் ஒரே மொழி என்ற அரசியல் துணை தேசிய அரசியலின் குரல்வலையை நெறித்துக் கொண்டிருக்கும்போது பண்பாட்டு அரசியல் பின்வாங்குகிறது. பண்பாட்டு அரசியலை முன்வைக்க வேண்டிய கலை இலக்கிய உலகமும் ஊடகங்களும் ஆட்சி அதிகாரத்திடம் அடிபணிந்துக் கிடக்கின்றன. 

      தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவின் தென் கோடியில் வாழும் இந்தியனுக்கும் மகா கும்பமேளாவை எடுத்துச் செல்வதில் காட்டும் ஆர்வத்தை வேங்கை வயல் பிரச்சனைகளுக்கு காட்டுவதில்லை.! 

திராவிட அரசியலும் பண்பாட்டு தளத்தில் வலுவாக இயங்கவும்  தன் உண்மையான பலத்தை  வேறு சில மாற்று வழிகள், உபாயங்கள் மூலம் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்..


சாதி ஒழிப்பே நம் இலக்கு.

சாதி மறுப்பு திருமணம்

 அதற்கான பாதை.

சாதியற்ற சமூகம் 

நம் எதிர்காலம்.


(பாசறை முரசு சிறப்பு மலரில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை) 


Friday, April 18, 2025

This Novel is a call of the Time.

 This Novel is a call of the time

Prof. A. Dhanlakshmi. School of foreign studies., Wenzhou university, China.

💥💥💥💥


 with 24 years of teaching experience, working now as professor, School of Foreign Studies, Wenzhou University. As an empanelled resource person of Securities and Exchange Board of India (SEBI) conducted more than 280 Financial Education workshops in different parts of India. Travelled to Sri Lanka, Hong Kong, Japan, Thailand, and U.S.A. where I met thousands of women sharing their living conditions with me personally more than a resource person. This humble introduction , I need to convey my edification to justify my views on this novel .I can’t claim myself as a voracious reader; but I never failed to read great works when I was introduced to them.

I had the privilege of reading Puthiyamaadhavi’s brilliantly written novel and translated in English by Meera Ravishankar as Horseleap. As directed by Mr.Vaiyavan, I was a silent observer of the Zoom meet also. My qualifications, teaching experiences led me to have direct contact with teen girls, matured women. High profile ones, educated, illiterates, employed unemployed, housewives and lovers with their problems.

There are so many Samas Senthamarais Kanmanis and Sangeethas almost all around the World; I am dared to point out. They have different names, background, racial and national and cultural identities. In my Thailand visit I was supplied with a lot of information and videos of a previous woman politician also like Senthamarai

Puthiyamaadhavi’s uncanny portrayal of women still seems a reality. Man in general is frantically involved in the race of winning .He needs a leap. The International scenario depicts billions are in the race. They are all pitiless. They want to win at any cost. They need a person , position or immediate partner to leap up to reach a summit. And as the great writer C.S.Lakshmi states ‘Who do we leap over? What do we leap over? With what aim do we leap over? Why do we leap over?  Must we leap over at all? Life becomes a horse ride where every time one takes a great leap a person’s back is pressed down, the shoulders used for a ride, the other person pushed down hard enough not to rise up and victory is celebrated. The colours of the green horses may have changed but the horses remain: Mother, daughter, wife, beloved, grandmother, girlfriend….”

Puthiyamaadhavi never missed depicting them. She just shows the ups and falls of Womanhood; how its rises end with heartbreaking sunsets. There was no preaching and recommendations for any ‘isms’

Wow...This is what a reader expects from a sincere writer!

A Novel to my perception should leave a deep imprint in the minds of a generation. No technique, no narrative gymnastics is needed. Like a Natasha of War and Peace or a Katyusha of Resurrection. I just referred to only two of the greatest writers, Leo Tolstoy. Here we have four. 

In this kaleidoscope of Puthiamaadhavi’s Samadhanam Mary’s hostel life still many more figures jumble. I request your patient attention to perceive them. Then you will certainly understand what a woman today is! This Novel is a call of the time. I appreciate Meera Ravishankar’s efforts for a sincere English reflex over a handy mirror.




(A. Dhanalakshmi M.Com, M. Phil, MBA, Ph. D (University of Madras) and Post Doctoral (Daito Bunka University, Japan)


Thank you Mam.🙏

Thanks to the Publisher , Vaiyavan sir.🙏


#puthiyamaadhavibooks 

#புதியமாதவிநூல்கள் 

#PuthiyamaadhaviNovel

#Horseleap_Puthiyamaadhavi


Wednesday, April 2, 2025

காலகில்லா மராத்தி கவிதைகள்

 




"There were years when I didn’t write, but I could never stop reading. Reading is my oxygen. It helps me breathe in this suffocating life."

 Puthiyamaadhavi


Prof Smitha Kranthikar Talks with Poet Puthiyamaadhavi


Madhavi, welcome to Sahitya Sammelan.

Your selected poems have been translated by me into Marathi, and the book Kala Killa has been published by the renowned publisher Lokvangmaya. I am happy to introduce you. I have many questions about this book and your writings.


Let us start with a few important points.


Madhavi: Sure. You are most welcome.


---


💥 Madhavi, your real name is Mallika, and your pen name is Puthiyamaadhavi. Is there any reason for that?💥


Initially, there was no particular reason. After my studies, during my daily commutes on Mumbai’s trains, life felt suffocating. At that time, I scribbled a few lines while traveling between Dombivli and Mumbai CST. A Tamil monthly magazine, Seervarisai, was published in Mumbai, and its editor, Sanmugarajan, recognized my writings. He published my poems under a pen name instead of my real name, Mallika.


The reason? Because the prevailing thought was: "A woman who writes poetry is not suitable for family life." This mindset has not changed much even today.


The editor chose the pen name Puthiyamaadhavi because, at the age of 11, I had written a short story with that title, which he had read. The name Maadhavi comes from the Tamil epic Silappathikaram. She was a Devadasi who broke free from that system and became involved in Buddhism and social service. I admired that character. However, my educated academic friends criticized my choice, questioning why I should adopt her name. That made me even more determined to keep it.


Additionally, Maadhavi means a creeper—cut it, throw it away, and it will still grow. Thus, Mallika became Puthiyamaadhavi.


---


💥 How many years have you been staying in Maharashtra/Mumbai?🔥


I am the fourth generation of Tamil migrants in Mumbai. My forefathers migrated from Tirunelveli, a southern district of India, to Dharavi when there was neither a 'Mumbai' nor a 'Bombay'. Dharavi was then a marshy land, a small village of fishermen, Koliwada.


As tannery and leather factories developed, they required more laborers, leading to mass migration of landless workers from the South. My family was part of that migration. We are part of Dharavi—you cannot separate us from it. I was born and brought up here.


For the media and others, it may not be something to take pride in, but for me, I say it proudly—I am from Dharavi. I am the daughter of Dharavi.


💥Marathi and Tamil are linguistically poles apart. Despite the lack of similarities, what prompted you to turn towards the Marathi language?🔥


Good question, Smithaji. Four generations have passed. I want to be with my fellow Mumbaikars, with my neighbors, with the sons of this soil. My children are true Mumbaikars and speak Marathi fluently. I feel that even now, I am late in embracing Marathi.


Linguistically, Marathi and Tamil may be distant, but culturally, we share deep connections. Have you heard of the Thanjavur Maratha kingdom?


The great Brihadeeswarar Temple in Thanjavur, built during the Chola dynasty, later came under the rule of the Maratha Bhonsle dynasty for 200 years. Art and culture flourished under their reign. Maharashtra is neither purely South Indian nor purely North Indian—it is unique. The blend of Maratha and Tamil culture in Thanjavur created a distinctive artistic heritage, reflected in Thanjavur paintings and the Saraswathi Mahal Library.


This library, established during the reign of Maratha King Serfoji II, holds an invaluable collection of manuscripts—39,300 Sanskrit manuscripts, 3.5 lakh Tamil manuscripts, and over 3,000 Marathi South Indian manuscripts. It stands as a testament to our cultural brotherhood.


For me, as a Mumbaikar, this history binds me to my Marathi-speaking brethren.


---


💥Your themes and symbolic imagery suggest that you are a well-read person. Can you elaborate?💥


Being well-read has two sides, Smithaji—academic knowledge and knowledge beyond academics. Academically, I have excelled—I even won a gold medal—but that has little to do with my writing.


My true education came from beyond the university walls. Mumbai’s roadside book stalls were my libraries. I worked at HSBC for 22 years, but my real membership was with those book stalls. I would buy books, read them, return them, and take new ones. We had an unspoken understanding—I paid a small amount while returning the books.


Owning books was difficult because we never had a stable home—small rented apartments with no space for books.


There were years when I didn’t write, but I could never stop reading. Reading is my oxygen. It helps me breathe in this suffocating life. In the world of books, I am always a student.

---


💥 Most of your themes revolve around feminism and women's liberation. What inspires you?🔥


I never consciously planned to write about feminism or women's liberation. My life is my writing, and my writing reflects my life.


When a man writes about social issues, it is called social liberation. When a woman writes about women's lives, it is called feminism. Why?


Women form over 50% of the world's population. Yet, our liberation is not considered social liberation? We need to question this perspective. Women must continuously remind society that we are not separate—we are part of it, just like men.


💥Some of your poems are based on legendary characters. Can you explain?💥


Yes, legendary characters—by that, do you mean epic characters?


(You: Yes.)


 The epic characters in my writings are my politics.


World literature tells us that epics are not entirely history. They are either fictional or historical stories mixed with imagination. But in India, we are conditioned to accept them as absolute truth.


Political forces repeatedly insist on using epic heroes as role models, but these role models do not serve me or society in achieving peace. Their narratives often uphold hierarchies, inequality, and division.


My cultural politics are shaped by two great thinkers—Periyar from the South and Mahatma Phule from Maharashtra.


My writing is my political statement, and that is why I continuously engage in dialogue with epic characters.


---


💥What inspired you to name your book Kala Killa?🔥


Mumbai is the gateway to India, and Kala Killa is the gateway to Mumbai.


Kala Killa is an area between Sion and Dharavi. My father was born there. The Riwa Fort, built of black stone, was nicknamed Kala Killa. Hidden in Dharavi’s slums, with the Mithi River flowing beside it, this fort was meant to protect Mumbai from sea invasions.


The media portrays Dharavi as a slum of crime, but I know better. Dharavi is the cultural and secular heart of Mumbai.


Beyond the location, the name Kala (black) holds meaning. Society calls white pure—fine. But does that mean black is impure?

Kaala asuth nai hai.!


Kaalaa is beauty 

 Kaalaa is original

 Kaalaa is strength

 Kaalaa  is power

 Kaalaa is protection

  Kaalaa is weapon

 Kaalaa is natural beauty

 Kaalaa is art

 Kaalaa is literature.

 Kalakilla is my poetry.


💥Being a Tamilian, we Marathi people are extremely grateful & happy to have you being associated as a part and parcel of this Marathi Litarary world. So can you tell us, Who are the ideal authors or poets for you in this Marathi litaray world?💥


Before saying who are my ideal poets in Marathi , I would like to share how tamil literature Wrote about Marathi manush. Writer naanjil naadan , famous tamil writer sahitya academy award winner for his short story wrote a story named “mohite” this story mohite BEST conductor his neigbour is thalavai, a tamil . who got transfer to Mumbai. He used to travel in the BESt but where mohite was the conductor. Mohite never came to him to collect ticket. This man felt bad because others thinking he is travelling without tickets. So he went to mohite house and asked him. Mohite said, as a BEST conductor I can take my relative without ticket in the bus. Still thalavai not satisfied. He said, so… The story end with like this.. Still what… U R Not my brother, kya annaa..? Nanjil wrote last line I felt ashamed of my thinking. This is how tamil literature honoring Marathi manush.

My ideal writers in Marathi literature first is always Namdeo dhasal. I adore his poems. He is the best poet of this century. Kavitha mahajan and malika amarsheikh this two also .. I translated few of their Poems into tamil. Sarankumar limbale, his akkarmashi, And urmila pawar, sharmila rege, pratiba matukar,,, the long list.. Few right now I can remember.


Apart from poems what are the other forms u write ? Short stories, novels and non fictions like literary criticism and contemporary politics few translation works.. I did.


💥What is your future Plan in your writing? 💥

Writing the autobiography of my Dharavi is my dream .. hope I can do it.


💥What would you like to suggest to the next generation who’s more interested in technology rather than art and literature?💥


There is nothing permanent. , except change. We say change is the only constant. மாற்றம் ஒன்றே மாறாதது. So I accept all changes including the changes in technology world. So technology is unavoidable. It changes everyone life. Can we imagine a day without our cell phone. Can we spent a day without wifi. All this changes our generation came across and we accept it. we started publishing our books in kindle and we started reading in kindle and cell phone. But at the same time I want to say kindle cannot replace my writings. Kindle cannot replace any poet. Our technology will help us in art and literature but it cannot replace that. Our technology can write a code to our language usages but this technogy cannot discover any language for us. Language can be written in Unicode. But Unicode can never become language or  art 


PM:  Is there anything more Smithaaji..


Yes. But ur Kalakilla will say more about U. ur writings will describe who U are ! This talk is just an introduction part. Thanks Madhavi.


PM: 

Yaa. U r most welcome. Thanks to U and shatiya Sammmelan for this opportunity , and my special thanks to writer Arjun Dangle ji who initiated this translation work. Thanks to all our friends and well wishers. Before leaving I would like to know from u smithaji, what is the problem u face in translation of poems to Marathi.


நேஷனல் கல்வி நிறுவனம் வைரவிழா நிகழ்வில் -

NES sahitya sammelan

15 oct 2022 காலகில்லா மராத்தி கவிதை நூலை வெளியிட்டு சிறப்பு செய்தது.

தேர்ந்தெடுத்த என் கவிதைகளை மராத்தியில் மொழியாக்கம் செய்த பேரா.சுமிதா கரந்திகர் கேள்விகளும் என் பதில்களும்.

Thanks to NES, Dr Varadharajan 🙏


#puthiyamaadhavibooks 

#writerputhiyamaadhavi 

#puthiyamaadhavipoems 

#புதியமாதவிநூல்கள்

Tuesday, April 1, 2025

தாராவியில் தலித் வரலாறு

 🔥தாராவியில் தலித் வரலாறு இப்படியாகத்தான் ஆரம்பமானது"🔥




"என்னிடம் பம்பாய் தலைவர்கள் ஜின்னா அவர்களும் அம்பேத்கர் அவர்களும் பேச விரும்புவதாகவும் வந்தால் நமது இயக்கத்தை பற்றி மற்ற மாகாணங்களில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியும் என்றும் தந்தி கொடுத்தார்கள் அதன்படி நானும் மற்றும் ஐந்து தோழர்களும் புறப்பட்டோம்"

தந்தை பெரியார் ,12/01/1940. தன் பம்பாய் பயணம் குறித்து பேசியது.


07/01/1940 மாலை 6:00 மணிக்கு தாராவி காலே கில்லா மைதானத்தில் சுயேச்சை தொழிலாளர் கட்சித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் பாபாசாகிப் அம்பேத்கர். அம்பேத்கர் பேச்சை சி என் அண்ணாதுரை என்ற இளைஞர் தமிழில் மொழி பெயர்த்தார். கூட்டத்திற்கு வந்திருந்த பிற மொழி தலைவர்களுக்காக தந்தை பெரியாரின் பேச்சை அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.


அம்பேத்கர் ஒரு தேநீர் விருந்தும் ஒரு சாப்பாடு இருந்தும் நடத்தினார். அதற்கு பம்பாயில் உள்ள முக்கியமான தலைவர்களும் பத்திரிக்கைக்காரர்களும் வந்திருந்தார்கள். அதில் கலந்து கொண்டார். அவர்களிடம் மூன்று மணி நேரம் அரசியல் விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.அவர்கள் பல புதிய விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசினார்கள்"

என்று இச்சந்தப்பின் முக்கியத்துவத்தை பெரியார் பதிவு செய்கிறார்.

08/01/1940ல் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது ! 


தாராவியில் தலித் மாதம் தலித் வரலாறு இப்படியாகத்தான் ஆரம்பித்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாங்களும் எங்கள் எழுத்துகளும் .


(புகைப்படத்தில் இடமிருந்து வலமாக, சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி பாலசுப்பிரமணியம் | ,ஜஸ்டிஸ் ஆசிரியர் டி ஏ வி நாதன், ஜின்னா, வழக்கறிஞர் கே எம் பாலசுப்பிரமணியம், பெரியார் & அம்பேத்கர்)


#DalitHistoryMonth

#தலித்வரலாற்றுமாதம்

#DharaviDalitHistory

Monday, March 31, 2025

புதிய ஆரம்பங்கள்


அவள் கண்களில் இனம் புரியாத மருட்சி. எப்போதும் அவள் என்னையும் என் முகத்தையும் நேரில் பார்த்து பேசுவதே இல்லை.அது அவள் என்னிடம் வேலை செய்பவள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்கள் நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடன் திடகாத்திரமாக இருப்பார்கள் என்பது நான் படித்தப் பாடம். அப்படி எந்த விதமான திடகாத்திரமும் இவளிடம் இல்லை. நான் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள். அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கும் அவளுடைய பதில். இந்த மாவட்டத்திற்கு பணி மாற்றம் கிடைத்தவுடன் இந்திய வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறது இந்த இடம் ? என்று தேடிப்பார்த்தேன். பஞ்சாபிலிருந்து பிரிந்து தனிமாநிலமாகிவிட்ட அரியானாவில் இருந்தது இந்த மாவட்டம்.மேவாட் மாவட்டம்.( Mewat district). எந்த விதமான தொழில் அபிவிருத்திகளும் இல்லை. விவசாயம் மட்டுந்தான். பெரும்பாலும் எல்லா ஆண்களும் வாகன ஓட்டுநர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலமாவது இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக இருப்பவனுக்கு யாரும் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்களாம். அவள் தான் ஒரு நாள் இந்தச் செய்தியைப் பேச்சுவாக்கில் சொன்னாள். இரண்டு மாதங்கள் ஆனது அவள் சகஜமாக என்னுடம் இரண்டொரு வார்த்தைகள் பேசுவதற்கு.

அவளுடைய கதையை அவள் சொன்னாள். அவள் பெயர் ரத்னா. அவள் சொந்த ஊர் அசாமில் இருந்தது. அடிக்கடி லாரி ஓட்டிக்கொண்டு வரும் அவள் கணவன் நெடுஞ்சாலையில் இருக்கும் இவர்களுடைய தேநீர்க்கடையில்தான் லாரியை நிறுத்துவான். நேநீருடன் சேர்ந்து சுடச்சுட சப்பாத்தியும் கிடைக்கும். அவனை முதன் முதலாக அவள் பார்த்தபோது அவளுக்கு பத்துவயது கூட ஆகவில்லை. அவன் எப்போதும் அதிகாலையில் அல்லது இரவில்தான் வருவான். வந்தால் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் தேநீர்க்கடையில் வெளியில் போட்டிருக்கும் கட்டிலில் படுத்துக்கொள்வான். ரத்னாவின் அம்மா அவனை விழுந்து விழுந்து கவனிப்பாள். எல்லாம் சுடச்சுட அவனுக்கு கிடைக்கும். எப்போது வந்தாலும் அவன் அவளுடைய அம்மாவுக்கு ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்தது. அவன் வந்துவிட்டால் இவளுக்கும் ஏக குஷியாக இருக்கும். ஏதாவது திண்பதற்கு கிடைக்கும் என்பதால். இரவில் மட்டும் அவளுக்குப் பயமாக இருக்கும். அவளைத் தனியாக தூங்க வைத்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு விட்டு அவளுடைய அம்மா பாயிருப்பாள். தம்பி, தங்கைகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒருநாள் அப்படித்தான் இரண்டு வயது கூட நிரம்பாத அவளுடைய தம்பி நடுராத்திரியில் விழித்து அழுதுகொண்டிருந்தான். அம்மாவைத் தேடி. அவள்தான் மூத்தப் பெண். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தாள். அவள் சமாதானப் படுத்துவதைக் கண்டு கோபத்தில் அவனுடைய சத்தம் இன்னும் அதிகமானது. அவள் எழுந்துபோய்க் கதவைத் தட்டினாள். அந்தச் சாலையில் அவர்கள் வீடு மட்டும்தான். மற்ற குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்தில் இருந்தன. அவள் தம்பியின் சத்தமும் அவள் கதவை இடித்தச் சத்தமும் சேர்ந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கதவின் இடுக்குகள் வழியாக பேரிரைச்சலுடன் அந்த நடுஇரவை அலற வைத்தது.

கதவு திறக்கவே இல்லை. அழுது அழுது அந்தச் சத்தத்தில் தொண்டைக் கட்டிக்கொண்டது அந்தச் சின்னப் பையனுக்கு. அவள் மடியில் அவன் பெருவிரலைச் சூப்பிக்கொண்டு படுத்திருந்தான். அவள் விரித்திருந்த கிழிந்தப் போர்வை நனைந்தது. அவள் அவனுடைய ட்டிராயரைக் கழட்டி விட்டு அவனைச் சற்றுத்தள்ளிப் படுக்க வைத்தாள். அவளுடைய பைஜாமாவும் நனைந்து போனது. அதிகாலையில் எப்படியோ தூக்கம் வந்து தொலைத்தது, அவளுடைய அம்மா வந்து இவள் தலைமயிரைப் பிடித்து இழுக்கும்வரைத் தூக்கம் கலையவில்லை.

..நல்லா திங்கறியே.. சொரணை இல்லை உனக்கு..இந்த வயதில் இப்படி படுக்கையை நனைச்சிருக்கியே நாயே’ என்று கத்தினாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘படுக்கையை நான் ஈரமாக்கவில்லை.. பெரிசா கத்த வந்திட்டியே..கதவை வெளிப்பக்கமா பூட்டிட்டு நீ எங்கே போய் தொலைஞ்சே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா வெறிப்பிடிச்சவள் போல் தம்பி தங்கைகள் எல்லோரையும் அடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இப்போது என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை.

வெளியில் வந்தவுடன் கடைக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்து வேகமாக கழுவி வைத்தாள். தண்ணீர்ப் பிடித்து நிரப்பினாள். அதுவரை அந்த லாரிக்காரன் வெளியில் கிடந்தக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அந்த துப்பட்டாவைப் பார்க்க பார்க்க அவளுக்கு லாரிக்காரன் மீது கோபம் வந்தது. அப்பா கொடுத்த சாய்க் கப்பை எடுத்துக்கொண்டு அவனிடன் போனாள். அவன் கண்விழித்திருந்தான். இவள் கைகளில் இருந்து சாய்க் கப்பை வாங்கியவன் இவள் கன்னத்தில் தட்டினான். பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டாள். தூரத்திலிருந்த அம்மா அவர்கள்இருவரையும் பார்த்தாள். இப்போது அம்மாவின் பார்வையை எதிர்த்து நின்று அவள் பார்த்தபோது அம்மா அவள் பார்வையைத் தாங்காமல் வீட்டுக்குள் போய்விட்டாள். இப்படித்தான் இந்த லாரிக்காரனின் உறவு இவர்கள் குடும்பத்துடன் ஆரம்பித்தது. அடுத்து 6 மாதம் கழித்து வந்தவன் ரூபாய் 2700 கொடுத்துவிட்டு இவளை அவனுடன் அழைத்துவந்துவிட்டான். தம்பி தங்கைகளை விட்டுவிட்டு அவளுடைய அப்பாவை விட்டுவிட்டு அந்த மலையடிவாரத்து காற்றை விட்டுவிட்டு அவனுடன் தனியாகக் கிளம்பிவர முடியாது என்று அவள் அழுதப்போது அவளுடைய அம்மாவும் சேர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். லாரிக்காரன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அவனுக்கு சொந்தமாக நிலமிருக்கிறது, சாப்பாட்டுக்கு இந்த மலையடிவாரத்தில் லாரிக்காரனிடமும் காட்டு இலாக்கா காரர்களிடமும் மாறி மாறி படுக்க வேண்டிய அவஸ்தை இருக்காது என்று அவளுடைய அம்மா சொன்னபோது அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

அம்மா சொன்னபடியே அவனுக்கு 3 ஏக்கர் நிலமிருந்தது. வீட்டில் எல்லோரும் அந்த நிலத்தில்தான் உழைத்தார்கள். அவனுடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். இவன் தான் மூத்தவன். அவனுடைய அப்பா வயது 60 தாண்டிவிட்டது. இருந்தாலும் நல்ல வாட்டச்சாட்டமாக இருந்தார். இவளுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையுமில்லை.

வயிறு நிறைய மூன்று நேரமும் சாப்பிடும்போதெல்லாம் வீட்டு ஞாபகம் வரும்.

வீட்டு நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் குறைத்துக்கொண்டாள்.

வீட்டை நினைத்தவுடன் அம்மாவின் நினைவு வரும் அம்மாவை நினைத்தால் இப்போது தன் கணவனாக இருக்கும் இவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைவது தெரியும். சில சமயங்களில் அவனுடைய வார்த்தைகள் அவளை அப்படியே பொசுக்கும். உச்சக்கட்ட ஆலிங்கனத்தில் அவள் தன்னை மறக்கும்போது ‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று உதிரும் அவன் உளறல்கள்.. ..ஒரு மலைப்பாம்பு தன்னை இறுக்கிப்பிடித்து மூச்சு மூட்ட வைப்பது போலிருக்கும். பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு எழுந்திருக்க முயலும் ஒவ்வொரு முறையும் அவன் பிடி இறுகும்.கண்களை மூடி கால்களை விரித்து சருகளாய் அவள் இலை அவனுடைய வெட்ப மூச்சில் தீப்பிடித்து எரியும். அவள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவனுடைய தம்பி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் அப்பா வந்து சமாதானப்படுத்தினார். தம்பிகள் மூவரும் அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது

அவள் காதிலும் விழத்தான் செய்தது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் என்பது அவளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் ஏதாவது மாற்றம் நம் வீட்டிலாவது நடக்காதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.

‘நீ இதற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இருக்கிற 3 ஏக்கர் நிலத்தை நாங்கள் நாலுபேர் பங்கிட்டுக்கொண்டால் என்ன தேறும்? 3 ஏக்கர் நிலத்திற்கு குறைவா இருந்தா எந்தப் பெண் எங்களைத் திருமணம் செய்து கொள்வாள்? ..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒன்னும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..’ அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள். அவனுடைய தம்பி இருட்டில் அவளை நெருங்கி அணைத்தப்போது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதொன்றும் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அருகில் அந்த ஊர்ப் பெண்களின் கூட்டம்.

‘என்ன ரத்னா பயந்திட்டியா.. மூத்தவனை விட சின்னவந்தான் ரொம்ப நல்லவன்.அதிர்ந்து பேச மாட்டான். இந்தப் பாரு ,, நீ கத்தி மயக்கப்போட்டு விழுந்ததிலிருந்து ஒன்னும் சாப்பிடாமா உன் பக்கத்திலெயே

உட்காந்திருக்கான். மேவாட்டுக்கு வந்துட்டு இதுக்கு மாட்டேன்னா எப்படி வாழமுடியும் சொல்லு..’ பக்கத்து வீட்டு அஞ்சு சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் அவள் கணவனுடன் பிறந்தவர்கள் 5 பேர். அவள் கணவன் தான் இவளைத் திருமணம் செய்து கொண்டு பீகார் மாநிலத்திலிருந்து அழைத்து வந்தான். அண்ணன், தம்பிகள் எல்லோருக்கும் சேர்த்து எட்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள்.

மெதுமெதுவாக சின்னவனின் அமைதியும் அன்பானக் கவனிப்பும் அவளைச் சமாதானப்படுத்தியது. லாரிக்காரனிடமிருந்த முரட்டுத்தனம் இவனிடமில்லை. எல்லா வற்றையும் விட இவளுக்கு மனநிம்மதி கொடுத்தது.. இவன் எந்த நேரத்திலும்..

‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று சொல்வதில்லை. சின்னவனின் குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்தது. வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமாகவே இருந்தது. லாரிக்காரன் வெளிப்படையாக சந்தோஷப்படுவது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவன் குமைந்து கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைப் பார்க்க பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மலைப்பாம்பைப் பிடித்து அதன் தலையில் ஏறி நாட்டியம் ஆடுவது போல சந்தோஷம். அவன் வீட்டுப்பக்கம் வருவதையே தவிர்ப்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் அதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. அவன் வீட்டிலிருக்கும்போது வேண்டும் என்றே சின்னவனை அழைத்து அவனருகில் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் குழந்தைப் பிறந்தப்பின் அடுத்தவன் முறை வந்தது.

அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும் வரும்போது அந்த வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பக்கத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

இவனிடம் லாரிக்காரனின் முரட்டுத்தனமில்லை. சின்னவனின் மென்மையுமில்லை.

ஓர் அவசரம்.. அவசரம் .. அவசரம்.. பத்துநாள் பட்டினிக் கிடந்தவன் கஞ்சியை ஒரே வாயில் ஊற்றி மேலும் கீழுமாகக் கொட்டிக்கொண்டு நிற்கும் அவசரம் இவனிடம்.

இவள் முகத்தை அவன் நேர்க்கொண்டு பார்ப்பதே இல்லை. இவளும் அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. நான்காவது முறை வந்தப்போது இவள் உடல் கிழிந்து கிடந்தது. தைக்க முடியாதக் கிழிசலாய் எந்த உடம்பையும் போத்திக்கொள்ள லாயக்கு இல்லாமல் தொங்கியது. ஆத்திரத்தில் அவன் இவள் கிழிசல்களைப் பிடித்து இழுத்து சிதைத்தான். ‘அந்த இருட்டில் அவள் கதறல்…. அவளுடைய தலைமுடிக் கலைந்து முன்னால் விழுந்து ஆடியது. அவள் கண்களில் வெறித்தனம்…டேய்.. நான் உன் அம்மாடா.. உங்க அப்பனை எங்கே கூப்பிடு.. உன் அண்ணன்மாரைக் கூப்பிடு.. அவள் உடல்வேகமாக முன்னும் பின்னும் ஆடியது. எங்கிருந்து அவள் குரலுக்கு இத்தனை கொடூர சத்தம் வந்தது என்பது தெரியவில்லை. மறுநாள் பூசாரி வந்து மந்திரித்தார். அவள் அமைதியாக கட்டிலில் படுத்திருந்தாள். பக்கத்தில் அவளுடைய மாமனார் விசிறியால் அவளுக்கு காற்று வீசிக்கொண்டிருந்தார்.

நல்ல வாட்டச்சாட்டமான 60 வயதுக்கிழம். அந்த வீட்டிலேயே அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்.அந்தக் கிழத்தின் பார்வையைச் சந்திக்க விருப்பமில்லாமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். லாரிக்காரன் வந்து அவள் உடலைத் தொட்டுப்பார்த்தான். குளிர்ந்திருந்தது அவள் உடல். அவன் கவலையுடன் அங்கிருந்து நகர்ந்தான். சின்னவனும் அடுத்தவனும் வந்து எட்டிப்பார்த்தார்கள். அவள் பக்கத்தில் அவர்களுடைய அப்பா இருப்பதைக் கண்டவுடன் பக்கத்தில் வராமல் வெளியில் போய்விட்டார்கள். கிழம் அவள் பக்கத்திலேயே இருந்தது. அவளை விட்டு அங்கிருந்து நகர்வது மாதிரியே தெரியவில்லை. அவளுக்கு வந்திருப்பது கிழவனின் மனைவியின் ஆவி அல்லவா. மறுநாள் அவளைப் போலீஸ் கைது செய்தது.

‘மாமனாரை இரவில் அரிவாளில் வெட்டிக்கொலை செய்த மனநிலை சரியில்லாத மருமகள்’ என்று பத்திரிகைகள் மேவாட் மாவட்டத்தில் நடந்தக்கொலையைப் பற்றி எழுதின. முதல் முறையாக அந்த ஊருக்கு போலீஸ் வந்தது. பத்திரிகைகாரர்கள் வந்தார்கள். ‘அண்ணன் தம்பிகளுடன் வாழ்க்கை நடத்தும் நவயுக திரெளபதிகள்..

மாமனாரின் ஆசைக்கும் மறுப்பு சொல்லாமல் எரியும் குடும்பவிளக்குகள்..

ஊடகங்களுக்கு பெருந்தீனியாகப்போனது மேவாட் மாவட்டத்தின் கதைகள்.’

அன்று என்னைப் பார்க்க வந்திருந்த சேவா சங்கத்தின் காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ரத்னாவின் கதை என்னை மிகவும் பாதித்தது.

‘என்ன மேடம்.. எத்தனை வருடமா இந்தக் கதை நடக்கிறது இங்கே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். “போலீஸ், சட்டம், நீதி இதெல்லாம் இருந்துமா..?’

அந்தக் காரியதரிசி பெண் என்னைப் பார்த்து சிரித்தாள். எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ ஒரு புகாரும் இதுவரைக் கிடையாது. நானும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் மேடம். இந்த ரத்னா கூட மனநிலைச் சரியில்லாமல் கொலை செய்ததாகத்தான் ஒத்துக்கொண்டிருக்கிறாளே தவிர உண்மைக் காரணம்

எதையும் சொல்வதில்லை. சரி.. நாளை இவர்கள் ஊரில் நடக்க இருக்கும் எங்கள் திரெளபதி நாடகம் பார்க்க வாருங்கள் என்றழைத்தாள். ஊருக்கு ஏற்ற நாடகம்தான் என்று எண்ணிக் கொண்டே வருவதாக சம்மதம் தெரிவித்தேன்.

அந்த நாடகத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் நாற்காலிகள். மற்ற ஆண்களுன் பெண்களும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகளில் ஒன்றிரண்டு பெண் குழந்ததைகள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த தலைகீழ் விகிதத்தைப் பார்க்கும்போது அந்த ஊரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைச் செய்து கொள்ளவே பயமாக இருந்தது.

‘ திரெளபதியின் துகிலை உரியும்போது அங்கே கூட்டத்தில் மயான அமைதி..

பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையிலிருந்து சேலைகளை ஒருவர் முடிச்சுப் போட்டுக்கட்டி துச்சாதனன் இழுக்க இழுக்க அனுப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்கள் யாரும்

மரக்கிளையிலிருந்து வந்து கொண்டிருக்கும் சேலைகளைப் பார்க்காமல். .’க்ருஷ்ணா..க்ருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். அடுத்தக் கட்டம்.. திரெளபதி சபதம் செய்துகொண்டிருந்தாள். ஆண்தான் பெண் வேடமிட்டிருந்தார். சபதம் செய்யும்போது திரெளபதியின் குரலில் ஆணின் சத்தம் தொனித்தது. அதுவரைப் பெண்குரலில் பேசிக்கொண்டிருந்தவர் வீரவசனம் பேசும்போது தன்னை மறந்து ஆண்குரலில் வீரத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டு சபதம் செய்யும் காட்சி எனக்கு வேடிக்கையாக

இருந்தது. பெண்களின் கூட்டத்திலிருந்து கேவி கேவி அவர்கள் அழும் குரல்கள் வந்தன. அந்தக் காட்சிக்கு அழாத ஒரே பெண் நான் மட்டும்தான் என்பது அதன் பின் நினைவுக்கு வந்தது.

மறுநாள் அந்தக் காரியதரிசி வந்திருந்தாள். நான் அவர்களின் நாடகத்தைப் பார்த்ததில் அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

நாடகம் எப்படி இருந்தது மேடம்’

அவள் கேள்விக்கு நான் நேரடி பதில் சொல்லாமல் ‘எத்தனை வருஷங்கள் இந்த நாடகம் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

’35 வருஷமா மேடம்’

‘ம்ம்ம் இந்த நாடகத்திலே இந்த ஊரு திரெளபதிகளுக்கு என்ன மெசஜ் கொடுக்கறீங்க?’ ‘என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. திரெளபதி வந்த ஒவ்வொரு காட்சியிலும் இந்த ஊரு பெண்கள் எப்படி அழுதார்கள்னு நீங்க நேரிலேயே பாத்தீங்களே..’

‘அப்போ 35 வருஷமா இந்த திரெளபதிகளை அழ வச்சதுதான் உங்க நாடகத்தின்

வெற்றின்னு சொல்ல வர்றிங்களா’

‘ அழ வச்சது மூலமா இந்த நாடகம் அவுங்களுக்கு ரொம்ப பெரிய உதவியைச் செய்திருக்கு மேடம்’

‘வாட் டூ யு மீன்’

‘யெஸ் மேடம். அழறப்போ மனசிலிருக்கும் பாரம் குறையுமில்லியா’

எனக்கு அவளுடைய பதிலைக் கேட்டு சிரிப்பு வந்தது.

‘அழறது மனப்பாரத்தைக் குறைக்கும்தான். ஒத்துக்கறேன். ஆனா அதுவே பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியுமா’

‘எங்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்க மேடம்..’

‘அட என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நீங்கள் எல்லாம் நினைச்சா நிறைய விஷயங்களை இந்த மக்களுக்குச் சொல்ல முடியும்.. இதே திரெளபதி கதையை பழைய பாண்டவர் சபதத்திலிருந்து மாத்துங்க. பாண்டவர்களே துகிலுரியும் இந்த திரெளபதிகளுக்கு பாண்டவர்களின் சபதம் சரிப்படுமா யோசியுங்க. புதுசா .. முடியும் உங்களால்.. இவுங்களுக்கு ஏத்த மாதிரி.. பாஞ்சாலி சபதத்தை மாத்துங்க..’

அந்தப் பெண் அமைதியாக நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் பின் நானும் வேலையில் பிஸியாக இருந்துவிட்டேன்.

அடுத்து ஆறுமாதங்கள் கழித்து பக்கத்து ஊரில் ‘நவயுகத் திரெளபதி’ நாடகம் போட்டார்கள். சேவாசங்கத்திலிருந்து நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புக்கு மேல் அழைப்பு. நல்ல குளிர். சால்வையை இழுத்துப்போர்த்திக் கொண்டு நானே காரை ஓட்டிக்கொண்டு போனேன். வழக்கம்போல பெண்களின் கூட்டம். வழக்கம் போல காட்சிகள். கடைசிக் காட்சி திரெளபதி சபதம்…

‘எங்கே அந்த வில் விஜயன்..? என்னைத் தன் மனைவியென வென்றெடுத்து வந்தவன் வென்று வந்தப் பரிசு பெண் என்று சொல்லாமல் பொருள் என்று சொன்னானே!

ரத்தமும் சதையும் துடிப்பும் கொண்ட பெண் என்ன ஜடப்பொருளா? பொருள் என்பதால் அல்லவா அண்ணன் -தம்பிகள் அனைவருக்கும் உரியதென அன்னைகுந்தி அறியாமல் சொல்லிவிட்டாள். அறியாமல் சொல்லியதையே அறமாக்கி அண்ணன் தம்பிகள் பெண்டாள அனுமதித்த அந்தப் பாவி அர்ச்சுணன் எங்கே .. கொண்டு வாருங்கள் அவனை..காட்ட வேண்டும் அவனிடம் பெண்ணின் வீரம் என்ன என்பதை.’

‘அண்ணன், தம்பிகள். பெரியப்பா, ஆசான் எல்லா உறவுகளையும் தருமத்தின் முன்னால் வென்றெடுக்க போர்க்களத்தில் கீதை உபதேசித்த கண்ணன் எங்கே? கொண்டுவாருங்கள் அவனை. எங்கே போனது அவன் கீதையின் உபதேசம்..

என்னை ஐவருடன் படுக்க ஆணையிட்ட போது எங்கே போனது கண்ணனின் உபதேசம்..? கீதையை உபதேசித்த அவன் நாக்கைப் பிடித்து இழுத்து அறுக்கும்வரை என் குரல் அடங்காது.. கொண்டு வாருங்கள் அவனை…’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பெண்கள் கூட்டத்தில் அமைதி.. அவர்கள் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கே கல்லெறி,, நாடகத்தில் தொங்கிய தீரைச்சிலைகளில் தீ பற்றிக்கொண்டது. கலவரம் வெடித்தது.

மறுநாள் அங்கே 144 தடை யுத்தரவு அமுலுக்கு வந்தது.

சிலர் நாடகத்திற்கு ஆதாரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் மாறியதால் ஏற்பட்ட கலவரம்.

நாடகத்தைப் புதிதாகப் போடச்சொன்னது நான் தான் என்ற செய்தியை பெருமையுடம் அந்த சேவா சங்கத்தின் காரியதரிசி சொல்லப் போக அதுவே எனக்கு வினையாக வந்த வாய்த்தது.

மறுநாள் என் மேலதிகாரியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

‘ உங்களுக்கு என்று புதிதாக ஒரு மாவட்டத்தைத் தான் இனிமேல் உருவாக்கனும்.

வாட் இஸ் திஸ் .. எங்கே போனாலும் ஒரு கலவரம்..அதில் கட்டாயம் நீங்க சம்மந்தப்பட்டிருக்கிறிர்கள்! பஞ்சமி நில மீட்புனு போவீங்க.. இருளர்களின் போராட்டம்னு கூட்டத்திற்கு தலைமைத்தாங்க போவீங்க.

ஆதிவாசிகளின் நில உரிமைப் போராட்டம்னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு விட்டுட்டு வந்திருவீங்க..! உங்களை எங்கே போஸ்டிங் பண்ணினாலும் அங்கே புதுசா நீங்க என்ன தலைவலியை எங்களுக்கு கொண்டு வரப்போறிங்களோனு பயமா இருக்கு..நீங்க அரசாங்க வேலை செய்யப் போறிங்களா இல்ல பொதுநலச்சேவை செய்யப் போறீங்களா..?’

‘இரண்டையும் நான் ஒன்னாத்தான் சார் நினைக்கேன்’

அவர் தலையப் பிடித்துகொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘சாரி .. உங்களுக்குனு எந்த டிபார்ட்மெண்டையும் கொடுக்கற மாதிரி இல்லே.

எந்த மாவட்டத்திலும் போஸ்டிங் இல்லை.. டிபார்ட்மெண்ட் இல்லாத மாவட்டம் இல்லாத எந்த வேலையும் செய்யாத அரசாங்க அதிகாரியாக இருங்க..’

” நன்றி சார்..’ என்று நான் சொன்னவுடன் அவர் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்.

இப்போது நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தோம். அவருக்கும் தெரியும்

அவரால் முடியாதப் பல காரியங்களை நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன் என்பது.

அதில் அவருக்கும் பெருமைதான். ஆனால் அவருடைய நாற்காலி அதை ஏற்றுக்கொள்ள இடம் கொடுக்கவில்லை. நாற்காலிக்கு அருகில் அவரும் நாற்காலியை விட்டு ரொம்ப விலகி நானும் நின்று கொண்டிருந்தோம்.

– மார்ச் 2006

பிகு:

கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில் நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அண்மையில் உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானாவின் செய்திக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த அவலங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. திரெளபதி நாடகத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் கண்ணீர் விடும் செய்தியை ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த உண்மைச் செய்திகளே இக்கதையின் கரு. நன்றி. –



Saturday, March 29, 2025

கருவாச்சி தான் நம் அசல்

இவள் பொய்க்காரி அல்ல.

இவள்தான் நம் மண்ணின் நிஜக்காரி.

இவள்தான் அசல்.

மற்றதெல்லாம் நாம் புத்திக்கெட்டுப்போயி ஏமாந்து

இதுதான் அழகுனு பொய்யான அழகியலில் விழுந்து நம் அசல்களைத் தொலைத்தக் கதை.

கறுப்புதான் எனக்குப் பிடிச்சக்கலரு..னு ஒரு சினிமாப்பாடலில்

'நம்மூரு சூப்பர் ஸ்டாரு

ரஜினிகாந்தும் கருப்புதான்

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" 

என்ற வரிகள் பிரபலமானது.

அதேபாடலில் வரும் இன்னொரு வரி

"கண்ணு முழி கருப்புதான்

கற்பு சொல்லி தந்த அந்த

கண்ணகியும் கருப்புதான்"

என்ற வரி உச்சரிக்கப்படவே இல்லை?!!!!! ஏன்?

நம் பொதுஜன சமூக உளவியல் இது.

தோலின் நிறம் என்பது அந்த நாட்டின் தட்பவெட்பம் சார்ந்தது. எல்லோருக்கும் தெரியும் இது.ஆனால் பெண் மட்டும் இவர்களுக்கு கறுப்பாக இருக்கவே கூடாது!!

 கருப்புதான் எனக்குப் பிடிச்சக் கலரு பாடல் ஒரு பெண் , ஆண் குறித்துப் பாடுவதாக வரும் பாடல்.

அதாவது ஆணின் கருப்பு நிறம் அழகு, கம்பீரம், வீரத்தின் அடையாளம், இத்தியாதி இத்தியாதி..!

இப்பாடல் வெளிவந்தப்போது 2009 ல் 'இந்தியக் கருவாடும் வெள்ளை பன்னிகளும்' என்றொரு கட்டுரை எழுதினேன்.

ஆனால் 'பொய்க்காரி '

அந்தோணிதாசன் பாடல்

' கருவாச்சி கருவாச்சி

கண்ணால எனப்பாரு

ஒருவாட்டி'

பாடல் முழுக்கவும் நம் மண்ணின் மணம் கமழும் கருவாச்சி...

கருவாச்சி வாழ்க.

ட்கருவாச்சி பாடல் ஹிட் ஆகணும்..

பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கணும்.

ஆண்களின் கைபேசியில் 'Caller tune ' ஆகணும்.

அழகியல் / பெண்ணின் நிறம் குறித்த பொய்யான கட்டமைப்புகள் மாறணும்.

கருவாச்சிதான்  அசல்.

பாடல் எழுதி இசை அமைத்திருக்கும் அந்தோணிதாசுக்கு வாழ்த்துகள்.

பாடல் கேட்க:

https://youtu.be/0o71rF7gUSg


#பொய்க்காரி

#கருவாச்சிபாடல்

#அந்தோணிதாசன்

#Poikkaari

#Anthonydaasan

Sunday, March 9, 2025

சங்க காலத்தில் சிம்பொனி



 சங்க காலத்தில் ஒரு சிம்பொனி...

அதன் பெயர்

' பல்லியம்'.

சிம்பொனி என்றால் என்னை மாதிரி ஆட்களுக்கு புரியற மாதிரி 

" சிம்ஃபொனி என்பது மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு எனலாம்."

ஓகே.

இதே மாதிரி  பல இசைக்கருவிகள் சேர்ந்து இசையைக் தொழிலாக கொண்ட இயவர்கள் கூட அறிந்திராத பல இசைக்கருவிகளின் இசை ஒலிக்கின்ற மிகப் பழமையான ஊர் என்று புறநானூறு சொல்கிறது.


"இயவரும் அறியாப் பல்லியம் கறங்க

அன்னோ பெரும் பேதுற்றன்று இவ்வருங்கடி மூதூர்..."

புறம் 336.


பல்+இயம்= பல்லியம்

இயம் என்பது கருவிகளைக் குறிக்கும் சொல். பல கருவிகள் இணைந்து ஒலிக்கும் இசை 

" பல்லியம்"

ஆதாரம்: சங்க இலக்கியத்தில் இசை.-    இரா. கலைவாணி.