Tuesday, July 14, 2020

காமராசரின் தேசிய அரசியலும் மாநில அரசியலும்

 
தேசிய அரசியலில் தன்னைக் கரைத்துக்
கொண்டவர்பெருந்தலைவர் காமராசர். 
அந்தக் கரைசலில் தமிழகம் இழந்ததும் அடைந்ததும்.. மீள்வாசிப்புக்குரியவை.
இன்றைய தமிழ் நாட்டின் தலை நகராக 
இருக்கும் சென்னையை தமிழ் நாடு 
மா நில எல்லைக்குள் நிறுத்தியதில் 
காமராசரின் பங்கு மகத்தானது.
 
சென்னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும்
. என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் 
தீவிரமாகஇருந்தக் காலக்கட்டம். 1948-ம் ஆண்டு 
சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. 
அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே
 சொந்தம் என்பதை நிலை நாட்ட, 
ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் 
தேர்தலில் போட்டியிட்டனர். இதை அறிந்த
 காமராசர் தமிழக காங்கிரசு தேர்தலில்
 போட்டியிடாது என்று அறிவித்தார். 
நேரு அதிர்ச்சிஅடைந்தார்.
தமிழ்நாடு எல்லைக் கமிட்டி என்ற 
ஒர் அமைப்பை உருவாக்கினார். 
அந்த அமைப்பு சார்பில் 
"தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்'' 
என்ற பிரச்சாரத்தைமுன்னெடுத்தார். 
தேர்தலில் தமிழ் நாடு எல்லைக்கமிட்டி 
சார்பில் காமராஜர் வேட்பாளர்களை நிறுத்தி 
அவர்களை அமோக வெற்றி பெற செய்தார்..
 
காமராசரின் எளிமை மற்றும் கல்விக்காக 
அவர் ஆற்றிய பெருந்தொண்டு...
இவை எல்லாம் பேசப்பட்ட அளவுக்கு 
அவர் அரசியல் இன்னும் பேசப்படவில்லை.
 தமிழகத்தின் தொழில்துறைக்கும் 
விவசாயத்திற்கும் ஒரு முதல்வராக 
அவர் செய்தவை பட்டியலிடப்படவில்லை.
இதைச் செய்ய வேண்டிய காங்கிரசு
 கட்சிக்காரர்கள் கூட இந்த வரலாற்று 
பக்கங்களைப் பேசுவதில்லை.
(பாவம்.. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ..!)
 
காமராசர் என்ற தமிழக அரசியல்வாதியின்
தேசிய அரசியலையும் மாநில அரசியலையும் 
பேச வேண்டும். அதுவே இந்திய – தமிழக 
அரசியலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடும்.
 
பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளில்
இப்படியும் ஓர் அரசியல் தலைவர் 
வாழ்ந்திருக்கிறார் என்பதை எடுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது.

1 comment:

  1. You have lot of collections. I am a new writer. I had a dilemma whether i'll succeed in my blogs. After visiting your blog, i got confidence.

    ReplyDelete