எனக்கு எழுதுவதற்கான உரிமை இருக்கிறது.
பேசுவதற்கான உரிமை இருக்கிறது
போராடுவதற்கான உரிமை இருக்கிறது.
ஆனால் நான் எதை எழுத வேண்டும்
எதைப் பேச வேண்டும் , எதற்காக போராட வேண்டும்
என்பதை தீர்மானிக்கும் காரணிகள்
ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன.
நான் எதைச் சாப்பிட வேண்டும்
எதை அணிய வேண்டும்
எந்தக் கைபேசி என் கையில் இருக்க வேண்டும்
நான் எந்தக் காரை வாங்க வேண்டும்
நான் எதில் பயணிக்க வேண்டும்
எனக்கு மின்சாரம் தேவையா இல்லையா
ஏன் எனக்கு என்னமாதிரி வியாதிகள் வரவேண்டும்
என்பதையும் கூட அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
CORPORATE GLOBALISM முதலாளித்துவ உலகமயமாதலின்
விளைவுகள் இவை. இந்தியாவைப் பொறுத்தவரை இது
CORPORATE DEMOCRACY

No comments:
Post a Comment