இதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை!
காரணம் திரு. தொல். திருமாவளவன் மீதிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் நாம் கவனிக்க வேண்டிய அரசியல் இது.
* தலித் அரசியல் / ஒடுக்கப்பட்டோர் தலைமைத்துவம் என்பது தனித்துவமானது. அது எல்லாவகையிலும் சமத்துவம் மற்றும் சம உரிமைக்கான அரசியல்.
*அப்படியான அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சியும் அதன் தலைவரும் ஒரு முதலாளித்துவ அரசியல் செயல்பாடுகளை நகல் எடுப்பதும் நிலவுடைமை அதிகார பிம்பத்தை ' போல செய்வதும்' ( copy) கவலை அளிக்கிறது.
*தங்களின் அடிப்படை கோட்பாடுகளை இலட்சியங்களை மறந்து ' மேனிலை ஆக்கத்தின்' உத்திகளை உள்வாங்கும் செயல்பாடுகள் தலித்திய அரசியலை நீர்த்துப் போக செய்துவிடும்.
*தலித் அரசியல் மட்டுமல்ல, ஜனநாயக தேசத்தில் எந்த அரசியல் கட்சியோ அதன் தலைவர்களோ கூட எதைச் செய்யக்கூடாது என்று இன்றைய ஜனநாயக பொதுச்சமூகம் எதிர்பார்க்கிறதோ.. அதை நோக்கிச் செல்வது ஆபத்தானது.
*அதிகார வர்க்க அரசியலைப் போலவே நாங்களும் செயல்படுவோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?!!
We are different.
We are unique.
We prove that in our ever step.
#தலித்அரசியல்
#dalithpolitics
#விசிக
#தொல்திருமாவளவன்
வருத்தம்தான். திருமா தன் விருப்பம் போல் செயல்பட முடியவில்லை. அவரை நிர்பந்திக்கின்றனர். வேறு வழியின்றி அவரும் செயல்படுகிறார்.
ReplyDelete