Wednesday, December 16, 2015

ரொம்ப லேட்டா குடைப் பிடிக்கிற "ஜெ"

-

"எனக்கென்று தனிவாழ்க்கை கிடையாது
எனக்கு எல்லாமும் தமிழக மக்கள்தான்'
தமிழக முதல்வர் "ஜெ" வாட்ஸ் அப்.

350பேர் மழைக்குப் பலியாகி, கருமாதி எல்லாம்
செய்தாகிவிட்டது. இப்போது தமிழக முதல்வர்
நான் இருக்கிறேன், உங்களை மீட்டெடுக்கும் தேவதையாக
என்று சொல்வது ஒரு சினிமா மாதிரிதான் இருக்கிறது.
இரண்டரை மணிநேரம் தியேட்டரில் அடி, உதை, சண்டை,
கடத்தல், கண்ணீர் என்று கதையை ஓட்டி கடைசி காட்சியில்
"சுபம்" என்று போட்டு முடிக்கிறமாதிரி இருக்கிறது.
ஜெ வின் இந்த வசனம் ரொம்ப லேட்.

சென்னை நிலையத் தகவல் படி , வெள்ளம் "ஜெ" க்கு
எதிரான விளைவுகளையே கொடுக்கும் என்றே தெரிகிறது.
சென்னை மட்டும் தமிழகம் அல்ல என்ற எண்ணம் சிலருக்குண்டு.
ஆனால் டி,வி,யின் புண்ணியத்தில் இம்முறை சென்னைவாசிகள்
மழையில் பட்டப்பாட்டை ஒட்டுமொத்த தமிழகமும் கண்டது.
இயற்கைப்பேரிடர் வருவதைத் தடுக்கும் அதிகாரமோ சக்தியோ
எந்த அரசுக்கும் கிடையாது என்ற அடிப்படை உண்மை தெரியாதவர்கள்
அல்ல தமிழக மக்கள். அவர்கள் எதிர்ப்பார்த்தெல்லாம் விரைவாக
இயங்கும் ஓர் அரசு எந்திரத்தை.
ஆனால் தண்ணிரைத் திறந்துவிடுவதிலிருந்து காணொளியில்
கட்டிடம் திறப்பது வரை எல்லா வாசல்களில் சாவிக்கொத்தும்
"ஜெ" வசம் இருப்பதுதான் பிரச்சனை. அதிகாரிகள் எளிதில் அணுகும்
முதல்வராக ஜெ இருந்தாரா? இருக்கிறாரா?
"ஜெ"வின் இக்குணாதிசியம் தமிழக மக்களை ஓர் இக்கட்டான
சூழலில் எவ்வளவு பாதித்திருக்கிறது!
வெங்காய விலை கூட நம் நாட்டில் தேர்தலின் வெற்றி தோல்விகளைத்
தீர்மானித்திருக்கும் போது.. இந்த ம்ழை வெள்ளம் மட்டும் பாதிக்காதா
என்ன?
இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்க்கும் என்பது
தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்திருந்தால்.. பாவம்..
தெருத் தெருவாக சைக்கிள் விட்டிருக்க வேண்டியதில்லைதான்

No comments:

Post a Comment