Monday, July 21, 2014

ஜெயந்தன் விருது - பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு





மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.

புதியமாதவி எழுதி அண்மையில் (dec 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான
விருது வழங்கப்பட உள்ளது.

2013-ம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலும், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவலும் ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜ் அவர்களின் ‘நரிக்கொம்பு’ நூலுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ நூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் என்கிற நூலுக்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த கவிதை     நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும்,  ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமா வின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.  மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும்.  இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

3 comments:

  1. வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்..
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..
    இங்கு தினமணியிலும் பார்த்தேன்.
    “காலம் அறிந்து கூவும் சேவலை
    கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது,
    கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்
    கணக்காய் கூவும் தவறாது” என்னும் பட்டுக்கோட்டைதான் நினைவிற்கு வருகிறான். இந்த மகிழ்ச்சியினை எனது வலைப்பக்க நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் - தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. புதிய மாதவி போலும் சமூக உணர்வுடன் எழுதும் எழுத்தாளர்க்குச் சரியான அவருக்குரிய அங்கீகாரம் இன்னும் தரப்படவிலலையே எனும் வருத்தம் எனக்கு நெடுநாளாக உண்டு. அநத வருத்தம் நீங்க, பொருத்தமான விருது வழங்கிய மணவை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete