Sunday, December 22, 2013

கோவையில் கருத்தரங்கம், வாருங்களேன்....





சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10

தமிழ்நாடு இலக்கியப்பேரவையில்

திராவிட இயக்கம் அன்றும் இன்றும்

என்ற தலைப்பில் பேச அழைத்திருக்கின்றார்கள்.


இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை
18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம்,
கோவை 45.

Wednesday, December 18, 2013

தேவயானி கோபர்கடே கைதும் மும்பை முனியம்மா அரசியலும்


நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே
கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பணிப்பெண் கொடுத்தப்
புகாரின் அடிப்படையில். குற்றம்: ஒப்பந்தப்படி சம்பளம் கொடுக்கப்படவில்லை.
கொடுக்கும் சம்பளம் அமெரிக்க சட்டப்படி இல்லை ..

இந்தியாவின் எதிர்வினைகளைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் தேவையில்லை.
"ஓ" போடுவோம் இந்தியாவுக்கு,
என்கிறேன் நான்.

ஆனால் என் அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா வேறு சில
கருத்துகளைச் சொல்லுகிறாரே!


*எதிர்வினைக்கு பல முகங்கள் உண்டாம், அந்தந்த முகங்களுக்கு வெவ்வேறு
அனுபவங்கள் இருக்கிறதாமே!

*ராகுல்ஜிக்கு பாஸ்டன் ஏர்போர்டில் நடந்தது நினைவுக்கு வந்திருக்குமோ?

*நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விசா கொடுக்காமல் இழுத்தடித்தது
நினைவுக்கு வந்திருக்கும்.

*மன்மோஹன் சிங்கை இனி யாரும் குற்றம் சொல்ல முடியாது.
எவ்வளவு துணிச்சல் இருந்தால் அமெரிக்காவுக்கே ஆள்காட்டி விரலைக்
காட்டி அதட்டி இருப்பார்? அவரை இனிமேல் "பயந்தாங்கொள்ளி" என்று
சொல்ல முடியுமா?

*இப்போதும் மறக்காமல் தேவயானியின் சாதி சர்டிபிகேட்டைப் பார்த்து
அந்த பெண் அதிகாரி ஒரு தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் இந்தியா
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று பகுஜன் சமாஜ்
கட்சி தலைவர் மாயாவதி அவர் பார்வையில் ஒரு அதட்டல்.

*இந்தியா தன் வெளியுறவுக்கொள்கைகளை மறுபரிசீலனை செய்து
கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பேசினாராமே
மக்களவையில் நம் தமிழ்நாட்டின் திமுக வின் ஒற்றைப் பிரதிநிதி
கனிமொழி.எம்.பி.. (வெளியுறவுக் கொள்கைக்கும் 2Gக்கும் ஏதாவது
சம்பந்தம் இருக்கிறதா என்று முனியம்மாவிடம் கேட்டால் அவர்
முறைக்கிறார்... ஒரு காலத்தில் கனிமொழியின் தோழியாக
இவரும் இருந்திருப்பாரோ.. யார் கண்டது?!!)

*அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாமே இந்தக் கைது.
இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி
சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக்
காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது
இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி
கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை
செய்துவிட்டு அதன்பின் டிசம் 11 இல் இச்சம்பவம் நடந்திருப்பதால்
இது அமெரிக்காவின் திட்டமிட்ட செயல் என்று
ஒரேயடியாக அமெரிக்காவைக் தாக்குகிறார் மும்பை முனியம்மா.


முனியம்மாவின் கேட்டேன், அமெரிக்காவுக்கே அதட்டல் போடும்
இந்தியா பக்கத்திலிருக்கும் இலங்கை நாட்டிடம் மட்டும் ஏன் இப்படி
பயப்படுகிறது? தமிழக மீனவர்கள் பிரச்சனையையும் இந்த மாதிரி
:ஹாட்டா" எடுத்திட்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று
கேட்டேன்.

எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்
அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா!
நீங்கள்..?

Saturday, December 7, 2013

நெல்சன் மண்டேலாவுக்கு அவருடை சிறைவாச நண்பர் எழுதிய கவிதை


நெல்சன் மண்டேலாவுடன் சிறையில் பக்கத்து அறையில் இருந்த டென்னிஷ் புருட்டஷ் எழுதிய
கவிதை இது.



In the cell opposite Nelson Mandela’s cell on Robben Island, was our poet friend Dennis Brutus, who wrote It is The Constant Image of Your face and A troubadour I traverse, all reviewed previously on this blog. Both of them were partners against apartheid, working in the quarry together, cracking stones and being tortured. It is fitting we honour the memory of Mandela today with poetry that was written by a man who knew him first hand. Dennis Brutus wrote this poem after Mandela was released from prison and was on his way to finally assume presidency of South Africa, unify a nation standing at a point of indecision on its future and teach humanity a lesson on forgiveness.

Here is Dennis Brutus’ tribute,





Yes, Mandela, some of us
we admit embarrassedly
wept to see you step free
so erectly, so elegantly
shrug off the prisoned years
a blanket cobwebbed of pain and grime;
behind, the island’s seasand,
harsh, white and treacherous
ahead, jagged rocks
bladed crevices of racism and deceit
in the salt island air
you swung your hammer grimly stoic
facing the dim path of interminable years,
now, vision blurred with tears
we see you step out to our salutes
bearing our burden of hopes and fears
and impress your radiance
on the grey morning air



My name is Dela. Even before I was old enough to know anything about this world, my cousins called me Man-Dela, in tribute to the greatness of a man whose life touched everyone who believes in the greater humanity, irrespective of country. I bid him peaceful rest. We will tell our children this, that we lived in the time of Nelson Mandela.

Tuesday, December 3, 2013

பாவம், திருமதி நரேந்திர மோதி



நரேந்திர மோதிக்கு திருமணம் ஆகிவிட்டதா , இல்லையா?
அவருக்கு காதலியர் உண்டா, கிடையாதா?
இதைப் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை.
எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதில்
எப்போதும் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.
இங்கே நான் விமர்சனப்படுத்த விரும்புவது தனிநபரின் வாழ்க்கையுடன்
அந்த தனிநபர் ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் அல்லது
நம்பப்படும் தத்தவம் குறித்த விசாரணை தான்.

ஜசோதாபேன் ( JASHODABEN) அவர்கள் தான் திருமதி நரேந்திர மோதி.
அவருக்கும் மோதிக்கும் திருமணம் ஆகி ஒரு சில நாட்களில் தன்
பிறந்தவீட்டுக்கு அனுப்பப்பட்டவர் ஜசோதாபென். திருமணம் நடக்கும்போது
அந்தப் பெண்ணின் வயது 18, ஏழோ எட்டோ தான் படிப்பு. பார்க்க ரொம்பவும்
சுமாராக இருப்பதாக அந்தப் பெண்ணுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.
தன் கணவர் மோதி அளவுக்கு தான் அழகானவளில்லை, அறிவுள்ளவளில்லை
என்று இப்போதும் அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தன் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண் அதன் பின் 1972ல்
எஸ் எஸ் சி தேர்வு எழுதி பாஸாகி ஆரம்பபள்ளிக்கூட ஆசிரியர் வேலைக்குப்
படிக்கிறார். அதன்பின் அகமதாபாதி டெக்வாலி பள்ளிக்கூடம், ரூபல் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்ட் பாடசாலை என்று அவர் ஆசிரியர் பணி தொடர்ந்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்ட ஒர் ஆசிரியை.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தகரக்கூரை வேய்ந்த வீட்டில் வாழ்க்கை
தனியாக. 100 சதுர அடியில் வாடகை வீடு. கழிவறையோ குளியலறையோ
கிடையாது. தண்ணீருக்கு வெளியில் தான் வரவேண்டும். அதிகாலையில் விடியலுக்கு முன் எழுந்து வீட்டுக்கு வெளியில் குளித்தால் தான் குளியலுக்கு
சாத்தியப்படும் வாழ்க்கை.

அந்தப்பெண்ணை எந்த நிருபரும் சந்திக்க வழியில்லை. அதையும் மீறி சந்தித்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தன் ஆசிரியர்
தொழில் மூலம் அந்த மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.
வேலைப்பார்த்த கிராமங்களிலும் சொந்த ஊரிலும் திருமதி ஜசோதாபென் நரேந்திரமோதி என்றே அறியப்பட்டவர்! அவரைச் சுற்றிய கண்காணிப்பு வலையம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அவரோ தன்னைப் பற்றி
எவரிடமும் அதிகம் சொல்லிக்கொள்ளாமல் தன் கணவர் நரேந்திரமோதி
கலந்து கொள்ளும் கூட்டங்களில் தூர நின்று பார்த்துச் செல்லும் பெண்ணாக
இருக்கிறார்.

45 வருடங்களுக்கு மேலாக கணவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில்
அவரை வாழ வைத்துக்கொண்டிருப்பது ஆருடங்களும் ஆன்மிகமும் தான்.
ஜோசியக்காரர்கள் எல்லோரும் " கட்டாயம் உங்கள் கணவர் உங்களை அழைத்துக் கொள்வார்... அந்த நாள் வரும்"என்று உறுதியாகச் சொல்கிறார்களாம். அதை அப்படியே நம்பி இந்தப் பெண்ணும் அந்த அழைப்பு
வரும் என்று காத்திருக்கிறார்.

கணவரின் அதிகாரவட்டம் மிகவும் பெரியது என்பதை அறிந்தவர்தான் இந்தப் பெண். பல நேரங்களில் அச்சப்பட்டும் சிலநேரங்களில் அதையும் மீறி எதையோ
நம்பி இன்றும் காத்திருக்கிறார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் மோதி பக்தர்கள் சொன்ன விளக்கம்,
"அவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் முதலிரவு, இரண்டாம் இரவு..
இத்தியாதி எதுவும் நடக்கவில்லை" என்பது தான்.
இப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ?

எது எப்படியோ.., இந்து தர்மம் திருமணத்தை உடலுறவுக்கு அப்பால் எடுத்துச்
செல்வதாக சொல்கிறது. அது மட்டுமல்ல, ஒரு மனைவியைக் காப்பாற்றுவதும்
கணவனின் கடமை என்பதை மிகவும் உறுதியாகச் சொல்கிறது இந்து தர்மம்.
இந்து தர்மம் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை என் போன்றவர்களைவிட மோதியும் மோதியின் பக்தர்களும் நன்கு அறிவார்கள்.

மற்ற தலைவர்களின் லட்சணமெல்லாம் தெரியாதா? என்று கேட்காதீர்கள்.
தெரியும். என் கவலை எல்லாம், தான் தூக்கிப்பிடித்திருக்கும் இந்து தர்மத்தின்
முதல் தர்மத்தையே காப்பாற்ற தவறி விட்டாரோ நரேந்திரமோதி என்பது தான்.